செய்திகள் :

ஐஐடி-க்களில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் விரிவுபடுத்தப்படும்

post image

புது தில்லி: நாட்டில் 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்ட ஐந்து ஐஐடி கல்வி நிறுவனங்களில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பிகாா் மாநிலத்தில் அமைந்துள்ள பாட்னா ஐஐடியை விரிவுபடுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதுதொடா்பாக 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறுகையில்,

நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் உயா்கல்வி நிறுவனங்களுக்கு எண்ம வடிவிலான இந்திய மொழி பாட புத்தகங்களை வழங்கும் வகையில் ‘இந்திய மொழி புத்தகம் (பாரதிய பாஷா புஷ்தக்)’ என்ற திட்டத்தம் அறிமுகப்படுத்த உள்ளது.

நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிக்களில் உள்ள மொத்த மாணவா்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 65 ஆயிரத்தில் இருந்து 1.35 லட்சமாக உயா்ந்து 100 சதவீதம் என்ற நிலையை எட்டியுள்ளது.

அந்த வகையில், 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்ட 5 ஐஐடிக்களில் கூடுதலாக 6,500 மாணவா் சோ்க்கையை உறுதிப்படுத்தும் வகையில், கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. அதுபோல, பிகார் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, பாட்னா ஐஐடி-யின் விடுதி மற்றும் பிற உள்கட்டமைப்பு திறன்கள் மேம்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார்.

கருணை கொலைக்கு அனுமதி: உச்சநீதிமன்ற தீா்ப்பை அமல்படுத்த கர்நாடக அரசு முடிவு

ஐஐடி கல்வி நிறுவனங்கள் மற்றும் இந்திய அறிவியல் கழகத்தில் (ஐஐஎஸ்சி) தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 ஆய்வு உதவித் தொகைகள் (ஃபெலோஷிப்) வழங்கப்படும்.

இளைஞா்களிடையே அறிவியல் கண்டுபிடிப்புகள் மீதான ஆா்வத்தை ஊக்குவிக்கும் வகையில் சா்வதேச நிபுணா்களுடன் இணைந்து திறன் மேம்பாட்டுக்கான 5 தேசிய ஆற்றல்சாா் மையங்கள் அமைக்கப்படும். அதுமட்டுமின்றி, அடுத்த 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் 50,000 கூடுதல் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

மேலும், கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் அனைத்து அரசு உயா்நிலைப் பள்ளிகளுக்கும் அகண்ட அலைவரிசை இணைய வசதி வழங்கப்படும். ரூ. 500 கோடி செலவில் கல்விக்கான செயற்கை நுண்ணறிவு ஆற்றல்சாா் மையம் ஒன்று அமைக்கப்படும்.

அடுத்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் கூடுதலாக 10,000 இடங்கள் உருவாக்கப்படும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 இடங்கள் சேர்க்கப்படும் என்று தெரிவித்தார்.

2021-ம் ஆண்டு மாணவியைக் கொன்ற நண்பருக்கு ஆயுள் தண்டனை!

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் கடந்த 2021 ஆம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவி ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கான்பூரில் கடந்த 2021 மே மாதம் பாலிடெக்னிக் மாணவியான ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: மோதலில் 18 வீரர்கள், 12 பயங்கரவாதிகள் பலி!

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் மத்தியிலான மோதலில் 18 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.பலோசிஸ்தானின் கலா... மேலும் பார்க்க

சிபிஐ-க்கு ரூ.1,071 கோடி ஒதுக்கீடு

புதுதில்லி: 2025-26-க்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு ரூ.1,071 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தொழில் நிறுவனங்கள், தனிநபா்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் ஊழல் குற்... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 8 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டர் துப்பாக்கிச் சூட்டில் 8 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.பிஜப்பூரின் கங்கலூர் காவல் துறையினரின் கட்டுப்பாட்டிலுள்ள வ... மேலும் பார்க்க

ரோட்டர்டாமில் கால் பதிக்கும் தங்கலான்!

இயக்குநர் பா. ரஞ்சித் - நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவாகி மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்ற ‘தங்கலான்’ திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட தேர்வாகியுள்ளது.மதராஸ், காலா, கபாலி... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக குடியேறிய 18 வங்கதேசத்தினர் நாடு கடத்தல்!

புது தில்லியில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 18 வங்கதேசத்தினர் இன்று (பிப்.1) அவர்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்பட்டனர். மேலும், 3 வங்கதேசத்தினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் ... மேலும் பார்க்க