செய்திகள் :

Sweden: குரானை எரித்து போராட்டம் நடத்திய நபர் சுட்டுக் கொலை - சுவீடனில் பரபரப்பு!

post image

Sweden: குரானை எரித்து கலவரங்களுக்கு வித்திட்ட சல்வான் மோமிகா என்ற நபர், அவரது அப்பார்ட்மென்ட்டில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஸ்வீடன் நாட்டில் உள்ள, ஹோவ்ஸ்ஜோ பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக புதன்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 11:11 மணிக்கு அதிகாரிகளுக்கு அழைப்பு வந்திருக்கிறது.

வியாழன் அன்று மோமிகா உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது. அவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது சமூக ஊடகங்களில் லைவில் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

குரான் எரிப்பு!

கடந்த 2023-ல் ஸ்டாக்ஹோம் மத்திய மசூதிக்கு வெளியே இஸ்லாத்தின் புனித நூலான குர்ஆனுக்கு மோமிகா நெருப்பு வைத்ததைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது.

ஸ்வீடனில் வசித்துவந்த மோமிகா இராக்கைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டுகளில் நான்குமுறை குறிப்பிட்ட இனக்குழுவுக்கு எதிராக போராடியதாக அவர்மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.

வியாழக்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில், இவரது மரணத்தால் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

வெளிநாட்டு சதி

மோமிகாவின் கொலையில் இதுவரை 5 நபர்களை ஸ்வீடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வெளிநாட்டு சக்திகளின் தலையீடு இருக்கும் அபாயம் உள்ளதால் ஸ்வீடனின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த விசாரணையில் தலையிட்டுள்ளது.

மோமிகாவின் இஸ்லாமிய எதிர்ப்பு போராட்டங்கள் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் நாடுகளில் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இராக் நாட்டின் தலைநகரான பக்தாத்தில் மோமிகாவுக்கு எதிராக இரண்டுமுறை போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தின் தீவிரம் கருதி, ஸ்வீடன் தூதர் நகரை விட்டு வெளியேற்றப்பட்டார்.

சுவீடன் நாட்டின் கருத்து சுதந்திர சட்டங்களின் அடிப்படையில் மோமிகா குரானை எரித்து போராட்டம் நடத்தியபோது காவல்துறையினர் அவருக்கு அனுமதி அளித்ததுடன், அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது இஸ்லாமிய மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோமிகாவின் வழக்கு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, புனித நூல்களை எரிக்கும் போராட்டங்களுக்குத் தடை விதிக்க சட்டரீதியான வழிமுறைகளை ஆய்வு செய்வதாக ஸ்வீடன் அரசு உறுதியளித்திருந்தது.

பட்னாவிஸ், ஷிண்டேயைக் கைது செய்ய உத்தவ் அரசு முயன்றதா? விசாரணை நடத்தும் மகா. பாஜக கூட்டணி அரசு

மகாராஷ்டிராவில் கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உடைந்துள்ளன. கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தல... மேலும் பார்க்க

Seeman: "நாம் தமிழர் கட்சியைத் தடை செய்ய வேண்டும்" - தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு; பின்னணி என்ன?

"நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்புக் குழுவிலுள்ள புகழேந்தி மனு அளித்துள்ளது பரபரப்பை ஏ... மேலும் பார்க்க

ஒன் பை டூ

சிவ.ஜெயராஜ், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க“ ‘நந்தனார் கல்விக் கழக’ மேடையில்தான் ஆளுநர் இவ்வாறு பேசியிருக்கிறார். ‘அந்த நந்தனாரை யார் கோயிலுக்குள் செல்லவிடாமல் தடுத்தது?’ என்பது ஆளுநருக்குத்... மேலும் பார்க்க

Thirumavalavan : 'எந்த அரசியல் கணக்கும் இல்லை!' - ஆதவ் சந்திப்பும் திருமா விளக்கமும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ஆதவ் அர்ஜூனா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். சந்திப்புக்குப் பிறகு,... மேலும் பார்க்க

Aadhav Arjuna : 'பொறுமையா போ..' - விஜய் கட்சியில் இணைந்த ஆதவ்வுக்கு திருமா அறிவுரை!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனா இன்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருந்தார். விஜய் கட்சியில் இணைந்த கையோடு திருமாவளவனையும் சந்தித்து வாழ்த்துப... மேலும் பார்க்க

TVK : `எமோஷனல் விஜய்; 30 நிமிட முக்கிய சந்திப்பு' - பனையூர் மீட்டிங்கின் 10 ஹைலைட்ஸ்!

தவெகவின் மூன்றாம் கட்ட மாவட்டச் செயலாளர்களை அறிவிக்க பனையூர் அலுவலகத்துக்கு வந்திருந்தார் விஜய். கூடுதலாக மாநில நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட்டிருக்கும் விஜய், புதுவரவாக கட்சிக்குள் வந்திருக்கும் ஆதவ... மேலும் பார்க்க