செய்திகள் :

இட்லி கடையில் அருண் விஜய்! என்ன சமைக்கிறார் தனுஷ்?

post image

இட்லி கடை படம் குறித்த புதிய அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

நடிகர் தனுஷ் இயக்கிய பவர் பாண்டி, ராயன் படங்களைத் தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய இரு படங்களையும் தற்போது இயக்கி வருகிறார். தானே இயக்கி நடிக்கும் தனுஷின் இட்லி கடை படத்தில் ராஜ்கிரண், நித்யா மெனன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஏப்ரல் 10 ஆம் தேதியில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்ட இட்லி கடை படத்தில் நடிகர் அருண் விஜய் இணைந்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

போஸ்டரில், நடிகர் அருண் விஜய் குத்துச் சண்டை வீரராகவும், அவரது உதவியாளராக தனுஷ் நிற்பது போன்றும் வெளியிட்டுள்ளனர். இதுவரையில் வெளியான இட்லி கடை போஸ்டர்களில் கிராமத்து வாசம் வீசிய நிலையில், தற்போது வெளியிட்டுள்ள போஸ்டர் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. இதனால், படத்தின் மீதான ஆவல் மேலும் அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தனுஷின் 52-ஆவது படமான இட்லி கடை வெளியாகும் அதே நாளில் நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படமும் வெளியாகவுள்ளது. அதுமட்டுமின்றி, அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள மற்றொரு படமான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின்போது, நடிகர் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படமும் வெளியாகிறது.

இதையும் படிக்க:விடாமுயற்சி: ‘சவதீகா ரீலோடட்’ பாடல் விடியோ வெளியானது!

ஈசிஆர் விவகாரத்தில் கைதானவர் அதிமுகவைச் சேர்ந்தவர் - ஆர்.எஸ்.பாரதி

ஈசிஆர் விவகாரத்தில் கைதானவர் அதிமுகவச் சேர்ந்தவர் என்று திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில... மேலும் பார்க்க

கழிவுநீர்த் தொட்டி விவகாரம்: அனைத்து வீட்டு உரிமையாளர்களுக்கும் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

வீட்டு கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் ஊழியர்கள் உயிரிழந்தால், வீட்டின் உரிமையாளர்களே இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனித மலத்தை மனிதா்களைக் கொண்டு அள்... மேலும் பார்க்க

நாளை(பிப்.2) பத்திரப்பதிவு அலுவலங்கள் இயங்கும்

தமிழகம் முழுவதும் நாளை(பிப்.2) பத்திரப்பதிவு அலுவலங்கள் செயல்படும் என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பதிவுத்துறைத் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2024-25ம் நிதியாண்டில் கடந்த 05... மேலும் பார்க்க

மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்: விஜய்

பட்ஜெட்டில் தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் மத்திய அரசு புறக்கணித்துள்ளது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட... மேலும் பார்க்க

வளர்ச்சிக்கான உந்துசக்தி: மத்திய பட்ஜெட் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி

வளர்ச்சிக்கான சக்திவாய்ந்த உந்துசக்தி என்று மத்திய பட்ஜெட் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், அசாதாரணமான வரலாற்று சிறப்பு... மேலும் பார்க்க

தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து பட்ஜெட்டில் இடம்பெறுவதில்லையே? முதல்வர்

தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து பட்ஜெட்டில் இடம்பெறுவதில்லையே? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஒன்றிய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்த... மேலும் பார்க்க