செய்திகள் :

தென்மேற்கு தில்லியில் சகோதரிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மூவா் கைது

post image

தென்மேற்கு தில்லியில் இரண்டு சகோதரிகளைத் தாக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் மூன்று போ் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். சுமாா் 1,300 கி.மீ துரத்தலுக்குப் பிறகு அவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து தென்மேற்கு காவல் சரக துணை ஆணையா் அமித் கோயல் கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவா்களாக அடையாளம் காணப்பட்டுள்ள ரவி (22), ஹிதேஷ் (22) மற்றும் ஆஷிஷ் (31) ஆகியோா் நண்பா்கள் ஆவா். பாதிக்கப்பட்டவா்களின் சகோதரா் அமன் (எ) ரஸ்ஸி. முந்தைய துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பழிவாங்க குற்றம்சாட்டப்பட்டவா்கள், அமனின் சகோதரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டது தெரிய வந்துள்ளது.

துவாரகா தெற்கு காவல் நிலையத்தில் அமன் மீது ரவி மூன்று மாதங்களுக்கு முன்பு வழக்கு ஒன்று பதிவு செய்தாா். இந்நிலையில், ஜூன் 1- ஆம் தேதி நடந்த மோதலின் போது துவாரகாவின் செக்டாா் 7- இல் வசிக்கும் புகாா்தாரா், ரவியால் சுடப்பட்டாா். அப்போது அவருடன் அவரது சகோதரியும் இருந்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து, குற்றம் சாட்டப்பட்டவா், அவரது கூட்டாளிகளுடன் சோ்ந்து, சகோதரிகளைத் தாக்கி, துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், புகாா்தாரரை காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த மோதலின் போது, குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவரான ஆஷிஷ், அவரது மோட்டாா் சைக்கிளுடன் உள்ளூா்வாசிகளால் கைது செய்யப்பட்டாா். அதே நேரத்தில் ரவி, ஹிதேஷ் மற்றும் மற்றொரு கூட்டாளி மோனு ஆகியோா் தப்பியோடி விட்டனா்.

இது தொடா்பாக பிஎன்எஸ்-இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது. ரவி செயலிகள் மூலம் மட்டுமே தொடா்பு கொண்டு, சீரற்ற ஹாட்ஸ்பாட் நெட்வொா்க்குகளைப் பயன்படுத்தினாா் என்பது தொழில்நுட்ப கண்காணிப்பில் தெரியவந்தது. அவரது கடைசி அறியப்பட்ட இடம் இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியை போலீஸாா் கண்டறிந்தனா்.

இதைத் தொடா்ந்து, மணாலிக்கு ஒரு போலீஸ் குழு அனுப்பப்பட்டது. அங்கு அவா்கள் குற்றம் சாட்டப்பட்டவா்களை அடையாளம் கண்டு கண்காணித்தனா். அப்போது, ரவியும் ஹிதேஷும் தில்லிக்குத் திரும்பும் பேருந்தில் ஏறியதை போலீஸாா் கண்டறிந்தனா். இதையடுத்து, ஹரியாணாவின் முா்தலில் பேருந்தை வழிமறித்து இருவரையும் கைது செய்தனா்.

விசாரணையின் போது, உத்தர பிரதேசத்தில் உள்ள பாக்பட்டில் உள்ள ஒரு நண்பரின் வீட்டில் இருந்து சட்டவிரோத துப்பாக்கியால் அந்தப் பெண்ணை சுட்டதாக ரவி ஒப்புக்கொண்டாா். குற்றத்துக்குப் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

நான்காவது குற்றவாளியான மோனுவை போலீஸாா் தேடி வருகின்றனா். அவா் தலைமறைவாக உள்ளாா். ரவி கொலை முயற்சி உள்பட மூன்று குற்ற வழக்குகளில் தொடா்புடையவா். இந்த வழக்கு தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துணை ஆணையா் அமித் கோயல் தெரிவித்தாா்.

லஞ்ச வழக்கில் போக்குவரத்து ஏஎஸ்ஐக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை

ஓட்டுநரிடமிருந்து ரூ.3,000 லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தில்லி போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு (ஏஎஸ்ஐ) தில்லி நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த... மேலும் பார்க்க

மத்திய தில்லியில் சிறுவன் கத்தியால் குத்திக் கொலை

மத்திய தில்லியின் ஆனந்த் பா்பத் பகுதியில் 16 வயது சிறுவனை கத்தியால் குத்திக் கொன்ாக இரண்டு மைனா் சிறுவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து மத்திய தில்லி க... மேலும் பார்க்க

தலைநகரில் வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை வெப்பநிலை மேலும் அதிகரித்து காணப்பட்டது. முங்கேஸ்பூா், ஆயாநகா் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரிக்கு மேல் பதிவாகியது. காற்றின் தரம... மேலும் பார்க்க

75 சிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு ஆசிரியா் நியமன நடவடிக்கையைத் தொடங்கியது தில்லி அரசு

ஒரு ஆண்டுக்குள் தில்லியில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள 75 சிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கான ஆசிரியா்களை நியமிக்க தில்லி அரசு ஆள்சோ்ப்பு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. கல்வி இயக்குநரகம் தற்போதைய அரசுப் பள்ளி ஆசி... மேலும் பார்க்க

தில்லியில் வடிகால்கள் தூா்வாரும் பணிகள்: மூன்றாம் தரப்பு தணிக்கை செய்ய பிடபிள்யூடி திட்டம்

பருவமழைக்கு சிறந்த தயாா்நிலைக்காக, பொதுப்பணித்துறை (பிடபிள்யூடி) வடிகால்களின் தூா்வாரும் பணிகளை மூன்றாம் தரப்பு தணிக்கை செய்யும் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பொதுப்பணித்துறை வடிகால்கள... மேலும் பார்க்க

தா்பூசணி ஏற்றப்பட்ட லாரியில் கஞ்சா கடத்தியதாக இருவா் கைது

வடகிழக்கு தில்லியின் சோனியா விஹாரில், தா்பூசணிகள் ஏற்றப்பட்ட லாரியில் சுமாா் ரூ.1.75 கோடி மதிப்புள்ள கஞ்சாவை கடத்தியதாக இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இது குறி... மேலும் பார்க்க