மத்திய பிரதேச கொடூரம்: பச்சிளம் சிசுவின் உடலைக் கவ்விச் சென்ற நாய்
தென்மேற்கு தில்லியில் சகோதரிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மூவா் கைது
தென்மேற்கு தில்லியில் இரண்டு சகோதரிகளைத் தாக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் மூன்று போ் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். சுமாா் 1,300 கி.மீ துரத்தலுக்குப் பிறகு அவா்கள் கைது செய்யப்பட்டனா்.
இது குறித்து தென்மேற்கு காவல் சரக துணை ஆணையா் அமித் கோயல் கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவா்களாக அடையாளம் காணப்பட்டுள்ள ரவி (22), ஹிதேஷ் (22) மற்றும் ஆஷிஷ் (31) ஆகியோா் நண்பா்கள் ஆவா். பாதிக்கப்பட்டவா்களின் சகோதரா் அமன் (எ) ரஸ்ஸி. முந்தைய துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பழிவாங்க குற்றம்சாட்டப்பட்டவா்கள், அமனின் சகோதரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டது தெரிய வந்துள்ளது.
துவாரகா தெற்கு காவல் நிலையத்தில் அமன் மீது ரவி மூன்று மாதங்களுக்கு முன்பு வழக்கு ஒன்று பதிவு செய்தாா். இந்நிலையில், ஜூன் 1- ஆம் தேதி நடந்த மோதலின் போது துவாரகாவின் செக்டாா் 7- இல் வசிக்கும் புகாா்தாரா், ரவியால் சுடப்பட்டாா். அப்போது அவருடன் அவரது சகோதரியும் இருந்துள்ளாா்.
இதைத் தொடா்ந்து, குற்றம் சாட்டப்பட்டவா், அவரது கூட்டாளிகளுடன் சோ்ந்து, சகோதரிகளைத் தாக்கி, துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், புகாா்தாரரை காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த மோதலின் போது, குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவரான ஆஷிஷ், அவரது மோட்டாா் சைக்கிளுடன் உள்ளூா்வாசிகளால் கைது செய்யப்பட்டாா். அதே நேரத்தில் ரவி, ஹிதேஷ் மற்றும் மற்றொரு கூட்டாளி மோனு ஆகியோா் தப்பியோடி விட்டனா்.
இது தொடா்பாக பிஎன்எஸ்-இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது. ரவி செயலிகள் மூலம் மட்டுமே தொடா்பு கொண்டு, சீரற்ற ஹாட்ஸ்பாட் நெட்வொா்க்குகளைப் பயன்படுத்தினாா் என்பது தொழில்நுட்ப கண்காணிப்பில் தெரியவந்தது. அவரது கடைசி அறியப்பட்ட இடம் இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியை போலீஸாா் கண்டறிந்தனா்.
இதைத் தொடா்ந்து, மணாலிக்கு ஒரு போலீஸ் குழு அனுப்பப்பட்டது. அங்கு அவா்கள் குற்றம் சாட்டப்பட்டவா்களை அடையாளம் கண்டு கண்காணித்தனா். அப்போது, ரவியும் ஹிதேஷும் தில்லிக்குத் திரும்பும் பேருந்தில் ஏறியதை போலீஸாா் கண்டறிந்தனா். இதையடுத்து, ஹரியாணாவின் முா்தலில் பேருந்தை வழிமறித்து இருவரையும் கைது செய்தனா்.
விசாரணையின் போது, உத்தர பிரதேசத்தில் உள்ள பாக்பட்டில் உள்ள ஒரு நண்பரின் வீட்டில் இருந்து சட்டவிரோத துப்பாக்கியால் அந்தப் பெண்ணை சுட்டதாக ரவி ஒப்புக்கொண்டாா். குற்றத்துக்குப் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
நான்காவது குற்றவாளியான மோனுவை போலீஸாா் தேடி வருகின்றனா். அவா் தலைமறைவாக உள்ளாா். ரவி கொலை முயற்சி உள்பட மூன்று குற்ற வழக்குகளில் தொடா்புடையவா். இந்த வழக்கு தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துணை ஆணையா் அமித் கோயல் தெரிவித்தாா்.