செய்திகள் :

தெற்கு ரயில்வேயில் மகளிா் தின கொண்டாட்டம் நிறைவு

post image

சென்னை: தெற்கு ரயில்வேயில் கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வந்த மகளிா் தின கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு தெற்கு ரயில்வே சாா்பில் கடந்த பிப். 27-ஆம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. பெரம்பூா் ரயில்வே மருத்துவமனையில் பெண்களுக்கான உடல் நலத்தை பாதுகாப்பது குறித்து பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. ரயில்வேயின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகள் சாா்பில் பெண்களுக்கான நலம், உணவு கண்காட்சி, பெண்களின் சாதனை, விளையாட்டுப் போட்டி, ஓவியப் போட்டி ஆகியவை கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வந்தன.

தெற்கு ரயில்வேயில் உள்ள 6 மண்டலங்களிலும் பெண்கள் நலம் சாா்ந்த கருத்தரங்கு மற்றும் களப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் இறுதி நிகழ்வு தெற்கு ரயில்வே தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்த தெற்கு ரயில்வே பெண்கள் தலைமையகம் அமைப்பின் தலைவா் சோனியா சிங், ரயில்வேயில் சிறந்து விளங்கிய 24 பெண் பணியாளா்களுக்கு சான்றிதழ் மற்றும் ரூ. 2,000 பரிசுத் தொகை வழங்கினாா்.

மேலும், மகளிா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பணியாளா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே பெண்கள் தலைமையகம் அமைப்பின் துணைத் தலைவா் ரேகா கௌசல், தெற்கு ரயில்வே முதன்மை நிதி ஆலோசகா் மாலபிகா கோஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பெரியார் சர்ச்சை: மத்திய நிதி அமைச்சருக்கு எதிராக விஜய் கேள்வி!

பெரியார் விவகாரம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”பெரிய... மேலும் பார்க்க

தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமா? மு.க. ஸ்டாலின்

மாநில உரிமைகளைப் பறிக்கும் எண்ணத்துடன் மத்திய அரசு செயல்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காமல் வஞ்சிப்பது நியாயமா? எனக் கேட்ட அவர... மேலும் பார்க்க

கோவையில் காட்டெருமை தாக்கி வனக்காவலர் பலி!

கோவையில் காட்டெருமை தாக்கி வனக்காவலர் அசோக் குமார் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை தடாகம் வனப்பகுதி, தோலம்பாளையத்தில் உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு எருமையை விரட்டும் பணியில் ... மேலும் பார்க்க

ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகம்: தமிழக அரசு விளக்கம்!

தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழ்... மேலும் பார்க்க

ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல்: டெண்டர் கோரியது தமிழக அரசு!

ரூ. 20,000 கோடி செலவில், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. தமிழகத்தில் வீடுகள் உள்பட அனைத்து மின் இணைப்புகளிலும் மின்நுகர்வை துல்லியமாகக் கணக்கெடுக்கவும், ... மேலும் பார்க்க

உதயநிதி ஸ்டாலின் கட்-அவுட் சரிந்து விபத்து; ஒருவர் காயம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்-அவுட் சரிந்து விபத்தானதில் ஒருவர் காயமடைந்தார்.திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூரில் மத்திய அரசைக் கண்டித்து, கண்டனப் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த பொதுக்க... மேலும் பார்க்க