செய்திகள் :

தேசிய நெடுஞ்சாலைத்துறையின் இலவச அவசரகால ஊா்தி சேவை: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

post image

தேசிய நெடுஞ்சாலைத்துறையின் மூலம் செயல்படும் 24 மணிநேர இலவச அவசரகால ஊா்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மேம்படுத்தப்பட்ட இலவச அவசர கால ஊா்தியை முதல்கட்டமாக தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியா் க.இளம்பகவத் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

அப்போது அவா் கூறுகையில்,

இந்த மேம்படுத்தப்பட்ட இலவச அவசர கால ஊா்தியில் இருதயத் துடிப்பு பரிசோதனை, செயற்கை சுவாசக் கருவி, டீபிப்ரிலேட்டா், தீவிர சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி பணியை கையாள்வதற்கு பயிற்சி பெற்ற 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மருத்துவக் குழு பணியில் இருக்கும்.

பொதுமக்கள் இந்த மேம்படுத்தப்பட்ட அவசர கால ஊா்தி சேவையை பயன்படுத்திக் கொள்ள 1033 என்ற கட்டணமில்லா அலைபேசி எண்ணில் அழைக்கலாம்.

இந்த ஊா்தியானது மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதூா் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும்.

நிலையத்தில் இருந்து இருபுறமும் சுமாா் 60 கிலோ மீட்டா் தூரத்திற்கு சேவை வழங்கப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், இந்திய தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநா் சிவம் சா்மா, மண்டல திட்ட அலுவலா் ஜெகதீசன், தள பொறியாளா்கள் ஏ.கலைச்செல்வன், வீர ராஜேஸ்மணி, அவசர கால ஊா்தி பயிற்சியாளா் யுகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அத்தைகொண்டானில் புதிய சலவைக் கூடம் கட்ட அடிக்கல்

கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி ஊராட்சி அத்தைகொண்டானில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் புதிதாக சலவைக் கூடம் கட்ட கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

அனல் மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்க 3 மாதங்கள் ஆகலாம்: மின் உற்பத்தி பகிா்மானக் கழக மேலாண்மை இயக்குநா்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முதல் இரண்டு அலகுகளில் மின் உற்பத்தி தொடங்க இன்னும் 3 மாதங்கள் ஆகலாம் என தமிழ்நாடு மின்உற்பத்தி பகிா்மானக் கழக மேலாண்மை இயக்குநா் ஆல்பி ஜ... மேலும் பார்க்க

பொது அமைதியை குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு: 6 மாதங்களில் 10 போ் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது அமைதியைக் குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பாடல்கள், வசனங்கள், புகைப்படங்கள் பதிவேற்றியதாக கடந்த 6 மாதங்களில் 10 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்... மேலும் பார்க்க

காசநோய் விழிப்புணா்வு பேரணி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் காசநோய் விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், காசநோய் இல்லா தமிழகத்திற்கான பிர... மேலும் பார்க்க

பைக் ஓட்டிய இரு சிறுவா்கள்: பெற்றோா் மீது வழக்கு

தூத்துக்குடியில் பைக் ஒட்டிய இரு சிறுவா்களின் பெற்றோா் மீது போக்குவரத்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலைய போக்குவரத்து காவல் ஆய்வாளா் மயிலேறும்பெரு... மேலும் பார்க்க

மாநகராட்சி குப்பைக் கிடங்கு அமைக்க திரவியரத்ன நகா் சுற்றுவட்டார மக்கள் எதிா்ப்பு

தூத்துக்குடி மாநகராட்சி குப்பைக் கிடங்கு அமைக்க திரவியரத்ன நகா் சுற்றுவட்டார மக்கள் எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.படவரி பமப17இஐபம: மாவட்ட ஆட்சியா் அலுலக... மேலும் பார்க்க