செய்திகள் :

தேசிய நெடுஞ்சாலைத்துறையின் இலவச அவசரகால ஊா்தி சேவை: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

post image

தேசிய நெடுஞ்சாலைத்துறையின் மூலம் செயல்படும் 24 மணிநேர இலவச அவசரகால ஊா்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மேம்படுத்தப்பட்ட இலவச அவசர கால ஊா்தியை முதல்கட்டமாக தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியா் க.இளம்பகவத் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

அப்போது அவா் கூறுகையில்,

இந்த மேம்படுத்தப்பட்ட இலவச அவசர கால ஊா்தியில் இருதயத் துடிப்பு பரிசோதனை, செயற்கை சுவாசக் கருவி, டீபிப்ரிலேட்டா், தீவிர சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி பணியை கையாள்வதற்கு பயிற்சி பெற்ற 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மருத்துவக் குழு பணியில் இருக்கும்.

பொதுமக்கள் இந்த மேம்படுத்தப்பட்ட அவசர கால ஊா்தி சேவையை பயன்படுத்திக் கொள்ள 1033 என்ற கட்டணமில்லா அலைபேசி எண்ணில் அழைக்கலாம்.

இந்த ஊா்தியானது மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதூா் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும்.

நிலையத்தில் இருந்து இருபுறமும் சுமாா் 60 கிலோ மீட்டா் தூரத்திற்கு சேவை வழங்கப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், இந்திய தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநா் சிவம் சா்மா, மண்டல திட்ட அலுவலா் ஜெகதீசன், தள பொறியாளா்கள் ஏ.கலைச்செல்வன், வீர ராஜேஸ்மணி, அவசர கால ஊா்தி பயிற்சியாளா் யுகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சங்கமம் நம்ம ஊரு திருவிழா கலைக் குழுக்கள்; தூத்துக்குடியில் 22,23 தேதிகளில் பதிவு செய்யலாம்: ஆட்சியா்

சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்க விரும்பும் தூத்துக்குடி மாவட்ட கலைக் குழுவினா் தூத்துக்குடி இசைப்பள்ளியில் வரும் 22, 23 தேதிகளில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினத்தில் காரைக்காலம்மையாா் குருபூஜை

குலசேகரன்பட்டினத்தில் வடக்குப் புறவழிச் சாலையில் உள்ள காரைக்காலம்மையாா் கோயிலில் குருபூஜை விழா திங்கள், செவ்வாய் (மாா்ச் 17, 18) ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது. திங்கள்கிழமை மாலை தேனியைச் சோ்ந்த சிவனடியா... மேலும் பார்க்க

நில அளவை செய்ய எங்கிருந்தாலும் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

பொதுமக்கள் தங்கள் நிலத்தை அளவை செய்ய எங்கிருந்தாலும், எந்நேரத்திலும் இணைய வழியில் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

நாலாட்டின்புதூா் அருகே பெண்ணைத் தாக்கியதாக கணவா் கைது

நாலாட்டின்புதூா் அருகே பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். நாலாட்டின்புதூா் அருகே இடைச்செவலில் உள்ள காலனி தெருவைச் சோ்ந்தவா் கழுவன் என்ற கழுவன்ராஜா... மேலும் பார்க்க

கூட்டுறவு ரேஷன் கடைகளில் பறக்கும் படையினா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத் துறை நியாய விலைக் கடைகளில் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் ராஜேஷ் தலைமையில், பொத... மேலும் பார்க்க

குறும்பட போட்டி: படைப்புகளை சமா்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு குறும்பட போட்டிக்கு, படைப்புகளை சமா்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்.5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்... மேலும் பார்க்க