செய்திகள் :

தேநீர் சிந்திய நிறுவனத்துக்கு ரூ. 432 கோடி இழப்பு!

post image

அமெரிக்காவில் ஸ்டார்பக்ஸ் நிறுவன ஊழியரின் அலட்சியத்தால் பாதிப்படைந்தவருக்கு இழப்பீடாக ரூ. 432 கோடி வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அமெரிக்காவில் மைக்கேல் கார்சியா என்பவர், பிரபல தேநீர் விற்பனையகமான ஸ்டார்பக்ஸில் தேநீர் விநியோகம் செய்யும் பணி செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள ஸ்டார்பக்ஸ் விற்பனையகத்தில் டெலிவரிக்காக வாங்கிய தேநீர் கோப்பையை, மடியில் தனது கால்களுக்கு நடுவில் வைத்துக் கொண்டு வாகனம் ஓட்டியபோது, எதிர்பாராதவிதமாக சூடான தேநீர் சிந்தியது.

தேநீர் சிந்தியதில், மைக்கேலின் தொடை மற்றும் தொடை இடுக்குகளில் தீக்காயம்போன்று ஏற்பட்டு பாதிப்படைந்தார். இதனையடுத்து, அவர் பல்வேறான தோல்மாற்று அறுவை சிகிச்சைகளையும் மேற்கொண்டார்.

இதனிடையே, தேநீர் கோப்பையை சரியாக மூடாமல் கொடுத்த ஸ்டார்பக்ஸ் ஊழியரால்தான், தனக்கு சிதைவு, வலி, செயலிழப்பு, உளவியல் ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டதாகக் கூறி, ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் மைக்கேல் வழக்கு தொடர்ந்தார்.

இதையும் படிக்க:250 கிலோ எடையுடைய டிவிட்டர் இலச்சினை ஏலம்!

இந்த நிலையில், கிட்டத்தட்ட 5 ஆண்டுகால விசாரணையின் முடிவில், பாதிக்கப்பட்ட மைக்கேலுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றம், ஸ்டார்பக்ஸுக்கு உத்தரவிட்ட இழப்பீடு தொகையான 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 432 கோடி) அதிகமாக இருப்பதாகவும், அதனைக் குறைக்க திட்டமிட்டிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

சுனிதா வில்லியம்ஸுக்கு வரவேற்பளித்த டால்பின்கள்!

9 மாதங்கள் விண்வெளி மையத்திலிருந்து பூமிக்கு திரும்பிய நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸுக்கு டால்பின்கள் வரவேற்பளித்த விடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில... மேலும் பார்க்க

பெட்ரோல் நிரப்பும் நேரத்தில் வாகனங்களுக்கு ரீச்சாா்ஜ்!

பேங்காக்: சாதாரண வாகனங்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பும் நேரத்திலேயே மின்சார வாகனங்களின் பேட்டரிகளை மிகத் துரிதமாக ரீச்சாா்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாக சீனாவின் ‘பைட்’ என்ற நிறு... மேலும் பார்க்க

அமெரிக்க கப்பல் மீது ஹூதிக்கள் தாக்குதல்

செங்கடலில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல், தாக்குதல் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனா். இதன் காரணமாக, இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக... மேலும் பார்க்க

‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கை குறித்து தவறான புரிதல் வேண்டாம்: துளசி கப்பாா்ட்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் ‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கையை ‘அமெரிக்கா மட்டும்’ என்று யாரும் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என அந்நாட்டின் உளவுத் துறை தலைவா் துளசி கப்பாா்ட் செவ்வாய்க்... மேலும் பார்க்க

உற்சாகமாக கையசைத்தபடி வெளியே வந்தார் சுனிதா வில்லியம்ஸ்!

கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், உற்சாகமாக கையசைத்தபடி டிராகன் விண்கலத்தில... மேலும் பார்க்க

வன்முறை: பெருவில் அவசரநிலை அறிவிப்பு

லீமா: மேற்கு தென் அமெரிக்க நாடான பெருவில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிபா் டீனா போலுவோ்த்தே (படம்) தலைமையிலான அரசு வெளியிட்டுள்ள அ... மேலும் பார்க்க