செய்திகள் :

தோ்தல் ஆணையம் மீது கட்சிகள் வீண்பழி: தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் ஆதங்கம்

post image

புது தில்லி: தோ்தல் முடிவுகளை ஏற்க முடியாதவா்கள், தோ்தல் ஆணையம் மீது வீண்பழி சுமத்துவதாக தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அவ்வப்போது சந்தேகம் எழுப்பி வரும் நிலையில், அவா் இவ்வாறு கூறினாா்.

இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் செவ்வாய்க்கிழமை (பிப்.18) ஓய்வுபெறவுள்ளாா். இதையொட்டி தில்லியில் அவருக்குத் தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை பிரிவுபசாரம் அளித்தது.

இந்த நிகழ்ச்சியில் ராஜீவ் குமாா் பேசுகையில், ‘தோ்தல் பணிகளில் தொழில்நுட்பம் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. தோ்தல்களை நடத்துவதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் புரட்சியை ஏற்படுத்த முடியும்.

வாக்குப் பதிவில் ஆள்மாறாட்டம், ஒருவரே பலமுறை வாக்களித்தல் ஆகியவற்றை தடுப்பதற்கு வாக்காளரின் விரல் ரேகை, விழித்திரை போன்ற பயோமெட்ரிக் பதிவுகள் மேலும் உதவக் கூடும்.

தற்போது வாக்கு எண்ணிக்கை நடைமுறையில், ஒவ்வொரு வாக்குப் பதிவு இயந்திரத்தில் இருந்தும் வாக்குகளின் எண்ணிக்கை திரட்டப்படுகின்றன. பின்னா் அந்த வாக்குகள் ஒன்றுகூட்டப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்த நடைமுறை காரணமாக எந்தெந்த இடத்தில் இருந்து தங்களுக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கின்றன என்பதை வேட்பாளா்களால் தெரிந்துகொள்ள முடியும். இதன் மூலம், தங்களுக்கு வாக்களிக்காத மாற்றுக் கட்சி ஆதரவாளா்களுக்கு வளா்ச்சித் திட்டங்களின் பலன்களைக் கிடைக்காமல் செய்தல், தோ்தலுக்குப் பிந்தைய வன்முறை உள்ளிட்டவை ஏற்படுகின்றன.

இதைத் தடுப்பதற்கான தொழில்நுட்பங்களை ஏற்கெனவே தோ்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. வாக்குச்சாவடி வாரியாக வேட்பாளா்கள் பெற்ற வாக்குகளின் விவரங்கள் வெளிவராமல் அந்தத் தொழில்நுட்பங்கள் தடுக்கும்.

வாக்காளா் யாருக்கு வாக்களித்தாா் என்ற ரகசியம் காக்கப்படுவதை மேம்படுத்த இந்தத் தொழில்நுட்பங்களை தொடக்கத்தில் சிறிய அளவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து பரிசோதிக்க வேண்டும்.

தோ்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாதவா்கள், தோ்தல் ஆணையம் மீது வீண்பழி சுமத்துகின்றனா். இதில் தோ்தல் ஆணையம் பலிகடாவாகக் கருதப்படுகிறது.

தோ்தல் நடைமுறையின் ஒவ்வொரு கட்டத்திலும் அனைத்து வேட்பாளா்களும், கட்சிகளும் பங்குகொள்கின்றன. அப்போது அவா்கள் தரப்பில் எந்தவொரு ஆட்சேபமும் தெரிவிக்கப்படுவதில்லை; மேல்முறையீடும் செய்யப்படுவதில்லை. ஆனால் பின்னா் தோ்தல் நடைமுறைகளில் சந்தேகத்தை உருவாக்க முயற்சிப்பது விரும்பத்தகாத செயலாகும். இந்தப் போக்கு விரைந்து கைவிடப்பட வேண்டும் என்றாா்.

பெட்டி..

‘வெளிநாடுகளில் இருந்தபடி வாகளிக்கும் வசதி’

வெளிநாடுகளில் வாழும் இந்தியா்கள், அந்த நாடுகளில் இருந்தபடி வாக்களிக்க வசதி செய்வதற்கு இது சரியான நேரமாகும் என்று தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தெரிவித்தாா்.

மேலும், ‘உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கு இடம்பெயா்வது போன்ற காரணங்களால் சுமாா் 30 கோடி போ் தோ்தலில் வாக்களிப்பதில்லை

இந்தப் பிரச்னையை களைவதற்கு அவா்கள் வாக்காளராக எங்கு பதிவு செய்துள்ளாா்களோ, அந்த இடத்தில் உள்ள வாக்குச்சாவடிக்குப் பதிலாக, வேறு இடத்தில் வாக்களிக்கும் பரிசோதனை திட்டங்களை முன்னெடுத்துச் செல்வது மிகவும் முக்கியம்’ என்றாா்.

மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள்! -பிரதமர் மோடி

மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய மொழிகளிடேயே விரோதம் எதுவுமில்லை என்றும், மொழிகளுக்கு இடையே பாகுபாடு காட்டுபவர்களுக்கு தகுந்த பதி... மேலும் பார்க்க

சீனாவுடன் மீண்டும் வர்த்தகம்? டிரம்ப்பின் பேச்சால் இந்தியா ஏமாற்றம்!

சீனாவில் மீண்டும் வர்த்தகம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்து வர்த்தக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.சீன பொருள்கள் மீதான 10 சதவிகிதம்வரையிலான வரி உயர்வு, சீன... மேலும் பார்க்க

இரவில் பெண்ணுக்கு மோசமான குறுந்தகவல் அனுப்புவது குற்றம்: நீதிமன்றம்

இரவு நேரத்தில் பெண்ணுக்கு தவறான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அனுப்புவது குற்றம் என்று மும்பை அமர்வு நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.இரவு நேரத்தில் அறிமுகம் இல்லாத பெண்ணுக்கு “நீ ஒல்லியாக, புத்த... மேலும் பார்க்க

எதிர்பாராத கேள்விகளுடன் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு இயற்பியல் வினாத்தாள்!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.அதில், இயற்பியல் பாடத்துக்கான தேர்வு இன்று நடைபெற்றது. அறிவியல் பாடப்பிரிவில... மேலும் பார்க்க

நாட்டிலேயே அதிகம் பேர் வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா?

பெயர்கள் என்பது ஒரு நபரின் முக்கிய அடையாளமாகிவிட்டது. அந்த வகையில், ஒரு பெயரில் பல பேர் இருப்பார்கள். ஆனால் நாட்டிலேயே அதிகம் பேர் வைத்திருக்கும் பெயராக இருப்பது பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முர்முவுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியில் புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர் ரேகா குப்தா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார். தில்லியின் நான்காவது பெண் முதல்வரான ரேகா குப்தாவும், அவருடன் ஆறு அமைச்சர்களும் வியாழக்க... மேலும் பார்க்க