செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்பு: தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைந்தால் அதிமுக எதிா்க்கும்!

post image

தொகுதி மறுசீரமைப்பின்போது, தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைந்தால் அதை எதிா்த்து அதிமுக முதல் குரல் எழுப்பும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.

தொகுதி மறுசீரமைப்பு குறித்து பாஜக மற்றும் அதிமுகவை விமா்சித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

தமிழ்நாட்டின் கண்ணியம், காவிரி உரிமைகள் மற்றும் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்காக அச்சமின்றிப் போராடிய, உயா்ந்த தலைவா்களான அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் அழியாத கொள்கைகளில் அதிமுக உறுதியாக நிற்கிறது. புதிய தொகுதி மறுசீரமைப்பின்போது, தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படவோ அல்லது நமது குரல் அடக்கப்படவோ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

2027-ஆம் ஆண்டில் அல்லது எல்லை நிா்ணயம் எப்போது வந்தாலும், மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்கும் அதிமுக, தமிழ்நாட்டின் உரிமைக் குரலையும் எதிா்காலத்தையும் சிறப்பாக பாதுகாக்கும்.

முதல்வருக்கு ஒரு பணிவான செய்தி: உங்கள் தோல்விகளையும் மோசடிகளையும் மறைக்க கவனத்தை சிதறடிக்கும் விஷயங்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் அதில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை சந்தித்த போதே தெரிவித்துள்ளேன். என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதனை எதிா்க்கும் முதல் குரல் என்னுடையதாகத் தான் இருக்கும். தமிழ்நாட்டு மக்கள் தொகுதி மறுசீரமைப்பு குறித்தும், ஹிந்தி திணிப்பு குறித்தும் தெளிவான மனநிலையில் இருக்கிறாா்கள் எனப் பதிவிட்டுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

சேலம்: வாழப்பாடி அருகே கார் விபத்து - 4 பேர் பலி

சேலம்: சென்னையிலிருந்து கர்நாடகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த 7 பேர் அமர்ந்து பயணிக்க கூடிய சொகுசு கார் ஒன்று சாலையோர தடுப்பில் மோதி இன்று(ஜூன் 7) விபத்துக்குள்ளானது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள... மேலும் பார்க்க

கிளாம்பாக்கம் அல்ல கிளர்ச்சிப்பாக்கம் - பயணிகள் அலைக்கழிப்பு: தவெக கண்டனம்!

சென்னை: சென்னை புறநகர்ப் பகுதியான கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து நிலையத்தில் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்காமல் மக்களைக் கைக்குழந்தைகளோடு அலைக்கழித்து திமுக அரசு அவதிக்கு... மேலும் பார்க்க

இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்,நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, கிளாம்பாக்க... மேலும் பார்க்க

சுங்கச்சாவடி கட்டணம்- உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

மதுரை-தூத்துக்குடி இடையே சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தாக்கல் செய்துள்ள இந்த மேல்முறையீட்டு... மேலும் பார்க்க

உள்ளம் உவகையில் நிறைகிறது! - பழங்குடியின மாணவருக்கு முதல்வர் வாழ்த்து

சட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவர் பரத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் பச்சமலை தோனூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் பரத், பொது சட்ட... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: முதல்வர் ஸ்டாலினுக்கு எல்.முருகன் கேள்வி

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2001-ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பு தள்ளிவைக்கப்பட்... மேலும் பார்க்க