`கார், பைக் டயரை இப்படித்தான் செய்றாங்க!' - CEAT Tyre Manufacturing Process Expl...
தொடரும் துயரம்.. தில்லி ஐஐடி மாணவர் தற்கொலை
புது தில்லி: தில்லி ஐஐடியில் படித்து வந்த 21 வயது மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்துகொண்ட மாணவரின் தற்கொலைக் கடிதம் எதுவும் அவரது அறையிலிருந்து கைப்பற்றப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆனால், ஐஐடி தில்லியில் எம்எஸ்சி இரண்டாம்ட ஆண்டு படித்து வந்த ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரைச் சேர்ந்த குமார் யாஷ் என்ற அந்த மாணவர், மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும், செவ்வாயன்று உடல்நிலை பாதித்து ஐஐடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆரவல்லி மாணவர் விடுதியில், மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்குக் காவல்துறைக்குத் தகவல் வந்துள்ளது. கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்த நிலையில், ஐஐடி மாணவர்களும், ஊழியர்களும் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று மாணவரை காப்பாற்ற முயன்றதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க.. ஒரு வெடிகுண்டு மிரட்டல்! விமான நிறுவனங்களுக்கு ரூ. 3 கோடி நஷ்டம்!
இரண்டு டவல்களை இணைத்து, குமார் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தவிட்டனர்.
அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தங்கியிருந்த அறையையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
காமன்வெல்த் போட்டிகளை நடத்தாமல் இருப்பதே நல்லது! ப.சிதம்பரம்
பல்வேறு விளையாட்டுகள் இல்லாத காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தாமல் இருப்பதே நல்லது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதாக இருந்த காம... மேலும் பார்க்க
வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரியங்கா
வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பிரியங்கா வதேரா (52), இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.வயநாடு மக்களவைத் தொகுதியில் வேட்புமனு ... மேலும் பார்க்க
வயநாடு மக்களுக்குச் சேவையாற்ற வாய்ப்பு தாருங்கள்: பிரியங்கா காந்தி
வயநாடு தொகுதியில் இன்று பிரியங்கா வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில், அங்கு நடைபெற்றுவரும் பிரசாரக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி உரையாற்றி வருகிறார். கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியின் இடைத்த... மேலும் பார்க்க
திரிஷ்யம் பட பாணியில் பெண் கொலை! உடலை புதைத்த ராணுவ வீரர் கைது!
திரிஷ்யம் பட பாணியில் பெண்ணை கொலை செய்து சிமென்ட் தளத்தின்கீழ் புதைத்த ராணுவ வீரரை காவல்துறையினர் கைது செய்தனர். ராணுவவீரர்ராணுவ வீரரான அஜய் வான்கடே(33) மற்றும் ஜியோட்ஸ்னா ஆக்ரே (32) இருவரும் திருமண த... மேலும் பார்க்க
ரௌடி சோட்டா ராஜனின் தண்டனை நிறுத்திவைப்பு! ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்!
மும்பையில் கடந்த 2001-ஆம் ஆண்டு விடுதி உரிமையாளரைக் கொலை செய்த வழக்கில் பிரபல ரௌடி சோட்டா ராஜனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்தது.மேலும், ஒரு லட்சம் ரூபாய் பிணை உத... மேலும் பார்க்க
வயநாட்டில் ராகுல், பிரியங்கா பேரணி!
கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்ய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேரணியாக செல்கிறார்.ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில... மேலும் பார்க்க