தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வலிமையான அணி இந்தியா: நியூசி. கேப்டன்
இந்தியாவுக்கு எதிராக 36 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி பெற்றது மிகவும் சிறப்பான உணர்வைக் கொடுத்துள்ளதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இதையும் படிக்க: இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தில் மாற்றம் இருக்காது: ரோஹித் சர்மா
பதிலடி கொடுக்கும் வலிமையான அணி
இந்தியாவுக்கு எதிராக 36 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி பெற்றது மிகவும் சிறப்பான உணர்வைக் கொடுத்துள்ளது எனவும், தோல்வியிலிருந்து மீண்டு பதிலடி கொடுக்கும் அளவுக்கு இந்திய அணி மிகவும் வலிமையானது எனவும் நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: 36 ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய மண்ணில் கடைசியாக நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்ததாக நினைக்கிறேன். அதற்கு பிறகு தற்போது நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். அதனால், 36 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்துள்ள இந்த வெற்றி மிகவும் சிறப்பான உணர்வைக் கொடுத்துள்ளது. நியூசிலாந்து அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் இது மிகவும் பெருமையான தருணம். நாங்கள் இதனை கொண்டாடுவோம்.
இதையும் படிக்க: 3 மணி நேர மோசமான ஆட்டத்தை வைத்து அணியை மதிப்பிட முடியாது: ரோஹித் சர்மா
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டிப்பாக மிகவும் சவாலானதாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். இந்திய அணியிடம் சிறந்த பேட்டிங் மற்றும் பந்துவீச்சு வரிசை உள்ளது என்றார்.
நியூசிலாந்து வீரர்களுக்கு பாராட்டு
நியூசிலாந்து வீரர்களை டாம் லாதம் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
நியூசிலாந்து வீரர்கள் குறித்து அவர் பேசியதாவது: நியூசிலாந்து அணி நேற்று மாலை புதிய பந்தில் சிறப்பாக பந்துவீசியதாக நினைக்கிறேன். டிம் சௌதி, ஹென்றி மற்றும் வில்லியம் ஓ’ரூர்க் மூவரும் மிகச் சிறப்பாக பந்துவீசினர். முதல் போட்டி எங்களுக்கு சிறப்பாக அமைந்தது. புணேவில் நடைபெறவுள்ள இரண்டவாது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.
இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் இந்திய அணி!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24 ஆம் தேதி புணேவில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
முதல் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது நியூசிலாந்து!
நியூசிலாந்து மகளிரணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி துபையில் உள்ள துபை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.... மேலும் பார்க்க
தென்னாப்பிரிக்காவுக்கு 159 ரன்கள் இலக்கு; உலகக் கோப்பையை வெல்லப்போவது யார்?
மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்துள்ளது.ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி துபையில் ... மேலும் பார்க்க
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!
நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன.... மேலும் பார்க்க
இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தில் மாற்றம் இருக்காது: ரோஹித் சர்மா
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீண்டு வருவோம் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ட... மேலும் பார்க்க
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: நியூசிலாந்து பேட்டிங்!
மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. துபையில் உள்ள... மேலும் பார்க்க
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் இந்திய அணி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தபோதிலும், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலா... மேலும் பார்க்க