செய்திகள் :

நம்ம ஆளு - சிறுகதை | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

மைதானத்தை மட்டுமே விளையாடுவதற்கு நம்பி இருந்த காலமது. 2001 ஆம் ஆண்டு, ஜூன் 5 ஆம் தேதி, பள்ளிக்கூடம் தொடங்கிய இரண்டாம் நாள், ஒரு செவ்வாய் கிழமை அன்று 3 ஆம் வகுப்பு சி பிரிவில் கணித ஆசிரியர் வடிவுடை நம்பி- அவர் தான் அந்த கிளாஸ்ஸின் ஆசிரியரும் கூட, இருக்கையில் இருந்து எழுந்து தன் மேசையில் ஒரு பக்கமாக சரிந்து உக்கார்ந்தபடி சாக் பீஸை விரல்களில் சுழற்றிகொண்டே , "பசங்களா, ஸ்கூல் டைரி நேத்து குடுத்தேனே வீட்ல போய் fill up பண்ண சொல்லி முடிஞ்சுதா", என்று வினவினார்.

 அந்த வகுப்பின் 52  மாணவர்களும் ஜரூராக டைரியை எடுத்து கொண்டு இருந்த போது, மிடில் பெஞ்ச் சகாக்களான வசந்தும் அரவிந்தும் தங்கள் டைரியை எடுத்த படியே,

"வசந்தா, இந்த டைரியில கிளாஸ், டிவிசன், டைம் டேபிள் இது எல்லாம் நமக்கு ஒரே மாதிரி இருக்கு, நம்ம பெயர், அட்ரஸ், அப்பா பெயர் ல கேட்ருக்காங்க okay இந்த Caste னு கேட்டருக்காங்களே அப்டினா என்ன டா அர்த்தம்? என்று தன் சந்தேகத்தை வசந்த்திடம் எழுப்பினான் அரவிந்த்.

"நேத்தே எங்க அப்பா கிட்ட கேட்டேன் டா, அதுல எதோ எழுதி இருந்தாரு அப்படினா என்னனு, அதுக்கு அவர் நாம கடவுளுக்கு சேவை செய்றவங்கனு அர்த்தம் னு சொன்னாரு, உனக்கு வேற எதோ எழுதிருக்காங்க ல" என்று வசந்த் சொன்ன பதிலுக்கு குழப்பத்துடன் "ம்ம்" என்று பதில் அளித்தான் அரவிந்த்.

இந்த குழப்பத்தோடு வீட்டுக்கு வந்த அரவிந்த் எப்படா தன் அப்பா வருவாரு என்று திரியை கொளுத்தி விட்டு பட்டாசு வெடிக்குமோ வெடிக்காதோ என்று காத்திருப்பவன் போல வாசலை பார்த்த வண்ணம் இருந்தான்.

 "என்ன டா ஒரு மாதிரி இருக்கே உடம்பு கிடம்பு சரி இல்லையா" என்று கேட்டு கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார் பிரதாப்.

இன்ஸெர்ட் செய்யப்பட்ட சட்டை கொஞ்சமாக வெளிய வந்து இருந்தது, நேர் எடுத்து சீவியிருந்த முடி களைந்து முன் நெற்றியில் படர்ந்து இருந்தது, சோர்வாக இருப்பினும் தெளிந்த நீரோடை போன்ற அகத்தோடும் முகத்தோடும் தன் மகன் பக்கத்தில் அமர்ந்து ஷூ லேஸை அவிழ்த்து கொண்டு இருந்தார் பிரதாப்.

 பள்ளியில் நடந்த மொத்த கதையும் தன் தந்தையிடம் விவரித்தான் அரவிந்த். இறுதியாக அவன் கேட்ட கேள்வி பிரதாப்பை ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில் நிறுத்தியது?

அப்பா, நமக்கு என்னமோ எழுதி இருந்தீங்கல Casteங்கிற எடத்துல அதுக்கு என்னபா அர்த்தம்" என்ற அந்த கேள்வியை கேட்ட பிரதாப் ஷூவை கழற்றுவது போல ஒரு நிமிடம் யோசிக்க எடுத்து கொண்டு நிமிர்ந்து அவனை பார்த்து,

"அவங்க கடவுளுக்கு சேவை செய்யுற மாதிரி, நாம கடவுளுக்கு மட்டும் இல்லாம எல்லாம் மனுஷங்களுக்கும் சேர்த்து சேவை செய்றவங்க. நாம மட்டும் இல்ல உன் கிளாஸ்ல இருக்குற 52  பெரும் அதே தான் பண்றவங்க, அதோட பேர் மட்டும் சும்மா உங்க கிளாஸ் டிவிசன் A , B , C மாதிரி வெச்சுக்கோயேன். டிவிசன் வேற வேற நாளும் கிளாஸ் ஒன்னு தான” என்று பிரதாப் கேள்வியை முடிப்பதற்குள் தஞ்சாவூர் பொம்மையாக அரவிந்தின் தலை ஆடியது.

“மத்தபடி நீ, வசந்த், நம்ம பக்கத்துக்கு வீட்ல இருக்குற தாத்தா பாட்டி, உங்க ஸ்கூல் வேன் டிரைவர் மாமா எல்லாரும் ஒன்னு தான்" என்று சொல்லும் போதே தன் மகனின் மன ஓட்டம்  தெளிவாகிவிட்டதை உறுதி செய்து கொண்டார் பிரதாப்.

மாதங்கள் ஓடியது காலாண்டு தேர்வு முடிந்து இருந்த அந்த பெற்றோர் ஆசிரியர் சந்திப்பிற்கு தங்கள் பிள்ளைகளின் நிறை குறைகளை தெரிந்து கொள்வதற்காக பெற்றோர் அனைவரும் பள்ளிக்கு படை எடுத்துயிருந்தனர்.

மீட்டிங் துவங்க இன்னும் கொஞ்ச நேரம் இருந்ததால் பிரதாப்பும் அவர் மனைவியும் பள்ளியை சுற்றி உள்ள தோட்டம், கிளிகள், Love Birds, முயல்கள் வைக்க பட்டிருந்த கூண்டுகளை பார்வையிட்டு கொண்டிருந்தனர்.

அப்போது ஓட்டமும் நடையுமாக ஒரு நபர் அவர் முன்பாக வந்து நின்றார்.

"சார் என் பேரு கதிர், வசந்தோட அப்பா. உங்கள தான் பாக்கணும்னு வந்தேன் ஒரு 2 மினிட்ஸ் பேசலாமா" என்று புன்னகைத்தார்.

 பதிலுக்கு தன் எதிர் புன்னகையாலேயே "தாராளமாக" என்று சொல்லாமல் சொன்னார் பிரதாப்.

 " சார் நான் ரொம்ப சரியாக என் பையன வளர்த்தி கொண்டு இருக்கிறேன் என்று நினைத்து கொண்டு இருந்தேன். என் மகன் என் கிட்ட Caste பத்தி கேட்டப்போ கூட நான் சொன்ன பதில் யாரையும் காய படுத்தாது என்று உறுதி செஞ்சிகிட்டேனே தவிர அது சரியான பதிலானு யோசிக்கவே இல்லை சார்.

என் பையன் வந்து நமக்கு help பண்றதுக்காக தான் அரவிந்த் இருக்கானாமா என்று சொன்னப்போ எனக்கு குற்ற உணர்ச்சி தாண்டி இந்த பதில் இல்லை நம்ம சொல்லிருக்கணும்னு தோணுச்சு சார். அதான் உங்கள பாத்து என் பையனுக்கு மட்டும் இல்லை உங்களால தான் சார் எனக்கும் ஒரு தெளிவு கெடச்சுதுனு சொல்ல வந்தேன் சார். அத சொல்ல தான் முக்கியமா இன்னைக்கு வந்தேனே.

அன்னைக்கே என் பையன் கிட்ட அவர் சொன்னது தான் 100%  கரெக்ட் பதில்னு சொல்லிட்டேன். ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சார்." என்று சொல்லும் போதே பிரதாப் முகத்தில் அடக்க முடியாத ஒரு சிரிப்பை கவனித்தார் கதிர். குழம்பியே படியே என்ன சார் எதாவது சொல்லனுமா என்று கேட்டதும்,

 சிரிப்பை அடக்கி கொண்டு பிரதாப் கேட்ட அந்த ஒரு கேள்வி "நல்ல புரிதல், அப்போ நீங்களும் நம்ம ஆளுங்க தானா"

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

நான் கொள்ளும் கர்வம் நீ! - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

என் காதலே ..என் காதலே - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க