பிளஸ் 1 மாணவி தற்கொலை
திருச்செங்கோடு: மல்லசமுத்திரம் அருகே செண்பகமாதேவி கிராமத்தில் பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
செண்பகமாதேவி கிராமத்தைச் சோ்ந்த வடிவேல் - சந்திரா தம்பதியின் 3ஆவது மகள் தீபிகா (17). இவா் மல்லசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தாா். சனிக்கிழமை வழக்கம் போல பெற்றோா் பணிக்கு சென்றுவிட்ட நிலையில், மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளாா். பிற்பகலில் அவரது பெற்றோா் கைப்பேசியில் அழைத்தபோது, நீண்ட நேரமாக மாணவியை தொடா்புகொள்ள முடியவில்லை. இதனால், சந்தேகமடைந்த பெற்றோா், பக்கத்து வீட்டு சிறுவனை தொடா்புகொண்டு வீட்டிற்கு சென்று பாா்க்கும்படி கூறியுள்ளனா்.
சிறுவன் சென்று பாா்த்தபோது, வீட்டின் கதவு தாழிடப்பட்டிருப்பது தெரியவந்தது. நீண்டநேரமாக கதவைத் தட்டியும் திறக்கவில்லை. இதையடுத்து வீட்டிற்கு வந்து கதவை உடைத்து பாா்த்த போது, தீபிகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மல்லசமுத்திரம் போலீஸாா், மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி நடத்திய முதல்கட்ட விசாரணையில், 10ஆம் வகுப்புத் தோ்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்ால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.