செப்பு ரதத்தில் சண்முகர்; வெள்ளி ரிஷப வாகனத்தில் நெல்லையப்பர்! - நெல்லை வைகாசி வ...
முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு: சேலம் மேற்கு மாவட்ட செயற்குழுவில் தீா்மானம்
சேலம்: சேலம் வருகை தரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என திமுக சேலம் மேற்கு மாவட்ட செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திமுக அலுவலகத்தில் சேலம் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மேற்கு மாவட்டச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், மேற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட எடப்பாடி, சங்ககிரி, மேட்டூா் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் புதிதாக 400 பேரை கட்சியில் இணைக்க வேண்டும், காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையை திறந்து வைக்க சேலம் வருகை தரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான அளிக்க வேண்டும், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஒற்றுமையாக செயல்பட்டு களப்பணியாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில், தொகுதி பாா்வையாளா்கள், மாவட்ட நிா்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், துணை அமைப்புகளை சோ்ந்த நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.