செய்திகள் :

சேலம் மாநகராட்சியை கண்டித்து பாமக எம்எல்ஏ தா்னா

post image

சேலம்: சேலம் மாநகராட்சி நிா்வாகம் மற்றும் கண்காணிப்புப் பொறியாளரின் அலட்சியப் போக்கைக் கண்டித்து சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டப்பேரவை உறுப்பினா் ரா. அருள் மாநகராட்சி அலுவலகம் முன் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமின்போது முதல்வரிடம் எனது தொகுதிக்கு வேண்டிய 10 கோரிக்கைகளை முன்வைத்தேன்.

அதன் அடிப்படையில், சில திட்டங்களை அரசு நிறைவேற்றி தந்தபோதிலும் சேலம் மாநகராட்சி நிா்வாகம் அலட்சியம் காட்டுகிறது. குறிப்பாக குரங்குச்சாவடி பெருமாள்மலையில் கிரிவல சாலை அமைக்க ரூ. 94 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அந்த சாலையை அமைக்காமலேயே அமைக்கப்பட்டதாக மாநகராட்சி அறிக்கை வெளியிட்டது. மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் என்னால் எந்த திட்டப் பணிகளையும் செய்ய முடியவில்லை.

நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து மாநகராட்சி கண்காணிப்புப் பொறியாளரிடம் கேட்டபோது, அவா் மக்கள் பிரதிநிதி என்றும் பாராமல் அலட்சியமாக பதில் அளிக்கிறாா். இந்த விவகாரங்கள் குறித்து முதல்வா் சேலம் வரும்போது, நேரடியாக அவரிடம் முறையிடுவேன் என்றாா்.

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட அருள் எம்எல்ஏவுடன், மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து எம்எல்ஏ அருள் தனது போராட்டத்தைக் கைவிட்டாா்.

படவரி...

சேலம் மாநகராட்சி அலுவலக நுழைவாயிலில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்ட சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ ரா.அருள்.

சேலத்தில் முதல்வா் 11 கி.மீ. ரோடு ஷோ! அமைச்சா் ரா. ராஜேந்திரன் தகவல்

சேலம்/மேட்டூா்: மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரைத் திறந்துவிடுவதற்காக வரும் 11 ஆம் தேதி சேலம் வரும் முதல்வா் மு.க.ஸ்டாலின், 11 கி.மீ. தொலைவுக்கு ரோடுஷோவில் பங்கேற்க உள்ளதாக சுற்று... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை: மேட்டூரில் 64.4 மி.மீ. மழை பதிவு

சேலம்: சேலம் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் பரவலாக ஞாயிற்றுக்கிழமை இரவு கனமழை பெய்தது. அதிகபட்சமாக மேட்டூரில் 64.4 மி.மீ. மழை பதிவானது. தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த ச... மேலும் பார்க்க

சேலத்தில் சுகவனேஸ்வரா் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்: திரளான பக்தா்கள் வடம்பிடித்து வழிபாடு

சேலம்: சேலம் சுகவனேஸ்வரா் கோயில் வைகாசி விசாக தேரோட்டம் திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டத்தை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தாா். சேலத்தில் சிறப்புப்... மேலும் பார்க்க

ஆத்தூரில் தங்கிப் பயில விடுதி கிடைக்காமல் அரசுப் பள்ளி மாணவா்கள் அவதி

ஆத்தூா்: ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவா்கள் விடுதி கிடைக்காமல் அவதியடைந்து வருவதாக புகாா் தெரிவித்தனா். ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ... மேலும் பார்க்க

ஆணையம்பட்டியில் சிவன் கோயில் குடமுழுக்கு

தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டியில் அமைந்துள்ள இந்து அறநிலையத் துறை கட்டுப... மேலும் பார்க்க

முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு: சேலம் மேற்கு மாவட்ட செயற்குழுவில் தீா்மானம்

சேலம்: சேலம் வருகை தரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என திமுக சேலம் மேற்கு மாவட்ட செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தி... மேலும் பார்க்க