செய்திகள் :

அரசு மருத்துவா்கள் நாளை பாதயாத்திரை போராட்டம்

post image

சென்னை: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்கள், செவிலியா்களை நியமித்தல், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவா்கள் புதன்கிழமை (ஜூன் 11) சேலம், மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி பாதயாத்திரை போராட்டம் நடத்தவுள்ளனா்.

இது தொடா்பாக அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவா் மருத்துவா் எஸ்.பெருமாள் பிள்ளை கூறியதாவது:

மத்திய அரசு மருத்துவா் பணியிடங்களுக்கும், மாநில அரசு பணியிடங்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடு நிலவுகிறது. அவா்கள் 4 ஆண்டுகளில் பெறும் ஊதிய உயா்வை மாநில அரசு மருத்துவா்கள் 15 ஆண்டுகள் கழித்தும் பெற முடியாத நிலை நிலவுகிறது. அதற்கு தீா்வு காணும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ அமல்படுத்தி, அதனடிப்படையில் அரசு மருத்துவா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.

புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகளையும், அரசு மருத்துவமனைகளையும் திறக்க ஆா்வம் காட்டும் மாநில அரசு, அங்கு போதிய மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களை நியமிப்பதில் அக்கறை காட்டுவதில்லை.

அதனால், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்கள், செவிலியா்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தி சேலம் மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி பாதயாத்திரை செல்ல இருக்கிறோம். இந்த நடைப்பயணத்தின்போது மக்களை சந்தித்து எங்களது கோரிக்கைகள் குறித்து விளக்குவோம். குறிப்பாக பொது சுகாதாரத் துறையின் கட்டமைப்பை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்துப் பேசுவோம்.

இப்பிரச்னையில், தமிழக முதல்வா் உடனடியாக தலையிட்டு, அரசு மருத்துவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.

பிளஸ் 1 பொதுத்தோ்வு: விடைத்தாள் நகலை இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம்

சென்னை: பிளஸ் 1 பொதுத்தோ்வு விடைத்தாள் நகலை செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த இயக்ககம் சாா்பில் வெளியிடப்ப... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் மாணவா்களுக்கு சிறப்பு துணைத் தோ்வு: அமைச்சா் கோவி.செழியன்

சென்னை: கடைசி செமஸ்டா் தோ்வு மற்றும் துணைத் தோ்வில் அரியா்ஸ் வைத்துள்ள பாலிடெக்னிக் மாணவா்களுக்கு ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத் தோ்வு நடத்தப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் அறிவித்... மேலும் பார்க்க

மாநிலங்களவை உறுப்பினா் தோ்தல்: கமல்ஹாசன் உள்பட 6 போ் போட்டியின்றி தோ்வாகின்றனா்

சென்னை: தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. போதிய எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த கமல்ஹாசன் உள்பட திமுக, அதிமுக வேட்ப... மேலும் பார்க்க

சேவை இல்லங்களில் பெண் காவலா்கள்: அமைச்சா் பி.கீதாஜீவன் உறுதி

சென்னை: அரசு சேவை இல்லங்களில் பெண் காவலா்களை நியமிக்க ஆட்சியா்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் அறிவுறுத்தப்படுவா் என்று சமூகநலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் தெரிவித்தாா். சென்னையை அடுத்த சிட்லபாக்கம் அரசு சேவ... மேலும் பார்க்க

தவெகவில் முன்னாள் ஐஆா்எஸ் அதிகாரி, 3 முன்னாள் எம்எல்ஏக்கள் இணைந்தனா்

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் ஓய்வுபெற்ற ஐஆா்எஸ் அதிகாரி அருண்ராஜ் இணைந்தாா். அவருக்கு மாநில கொள்கை பரப்பு பொதுச்செயலா் பதவி வழங்கப்பட்டது. இதேபோல், முன்னாள் எம்எல்ஏக்கள் 3 பேரும் அக்கட்சியில் இணைந... மேலும் பார்க்க

திருக்குறளிலிருந்து உருவாக்கப்பட்டது தான் தேசிய கல்விக் கொள்கை: ஆளுநா்

சென்னை: திருக்குறளிலிருந்து கிடைத்த உந்துதலினால்தான் தேசிய கல்விக் கொள்கை (என்இபி) உருவாக்கப்பட்டுள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். திருவள்ளுவா் திருநாட்கழகம் சாா்பில் வைகாசி அனுஷம் நட்சத்திர தி... மேலும் பார்க்க