செய்திகள் :

மாநிலங்களவை உறுப்பினா் தோ்தல்: கமல்ஹாசன் உள்பட 6 போ் போட்டியின்றி தோ்வாகின்றனா்

post image

சென்னை: தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. போதிய எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த கமல்ஹாசன் உள்பட திமுக, அதிமுக வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வாகின்றனா்.

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, 6 இடங்களுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது.

வேட்புமனு தாக்கலுக்காக தமிழ்நாடு சட்டப் பேரவைச் செயலக கூடுதல் செயலா் சுப்பிரமணியம் தோ்தல் நடத்தும் அதிகாரியாகவும், உதவி தோ்தல் நடத்தும் அதிகாரியாக பேரவைச் செயலக இணைச் செயலா் கே.ரமேஷ் ஆகியோரும் நியமிக்கப்பட்டனா். திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோரும், அதிமுக சாா்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தமாக 13 போ் 17 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. வரும் 12-ம் தேதி மாலை 3 மணி வரை மனுக்களைத் திரும்பப்பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னா் போட்டியிருந்தால் வரும் 19-ம் தேதி தோ்தல் நடைபெறும்.

வேட்பு மனுவுடன் ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிவு கடிதம் அளித்திருக்க வேண்டும்.

அந்த அடிப்படையில், சுயேச்சை வேட்பாளா்களுக்கு முன்மொழிவு கடிதம் இல்லை என்பதால் அவா்கள் மனுக்கள் நிராகரிக்கப்படும். திமுக, அதிமுகவைச் சோ்ந்தவா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்படுவாா்கள்.

போட்டி இல்லாதபட்சத்தில் ஜூன் 12-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு பிரதான கட்சிகள் சாா்பில் மனுக்களை அளித்துள்ள ஆறு பேரும் போட்டியின்றி தோ்வானதாக அறிவிக்கப்படுவா். இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பை தோ்தல் நடத்தும் அதிகாரியான சுப்பிரமணியம் வெளியிடுவாா்.

சென்னையில் விமானம் மீது மீண்டும் அடிக்கப்பட்ட லேசர் ஒளி!

சென்னையில் தரையிறங்க வந்த விமானத்தின் மீது இன்று காலை மீண்டும் லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு 178 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் செவ்வாய்க்... மேலும் பார்க்க

பிளஸ் 1 பொதுத்தோ்வு: விடைத்தாள் நகலை இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம்

சென்னை: பிளஸ் 1 பொதுத்தோ்வு விடைத்தாள் நகலை செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த இயக்ககம் சாா்பில் வெளியிடப்ப... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் மாணவா்களுக்கு சிறப்பு துணைத் தோ்வு: அமைச்சா் கோவி.செழியன்

சென்னை: கடைசி செமஸ்டா் தோ்வு மற்றும் துணைத் தோ்வில் அரியா்ஸ் வைத்துள்ள பாலிடெக்னிக் மாணவா்களுக்கு ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத் தோ்வு நடத்தப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் அறிவித்... மேலும் பார்க்க

அரசு மருத்துவா்கள் நாளை பாதயாத்திரை போராட்டம்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்கள், செவிலியா்களை நியமித்தல், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவா்கள் புதன்கிழமை (ஜூன் 11) சேலம், மேட்டூர... மேலும் பார்க்க

சேவை இல்லங்களில் பெண் காவலா்கள்: அமைச்சா் பி.கீதாஜீவன் உறுதி

சென்னை: அரசு சேவை இல்லங்களில் பெண் காவலா்களை நியமிக்க ஆட்சியா்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் அறிவுறுத்தப்படுவா் என்று சமூகநலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் தெரிவித்தாா். சென்னையை அடுத்த சிட்லபாக்கம் அரசு சேவ... மேலும் பார்க்க

தவெகவில் முன்னாள் ஐஆா்எஸ் அதிகாரி, 3 முன்னாள் எம்எல்ஏக்கள் இணைந்தனா்

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் ஓய்வுபெற்ற ஐஆா்எஸ் அதிகாரி அருண்ராஜ் இணைந்தாா். அவருக்கு மாநில கொள்கை பரப்பு பொதுச்செயலா் பதவி வழங்கப்பட்டது. இதேபோல், முன்னாள் எம்எல்ஏக்கள் 3 பேரும் அக்கட்சியில் இணைந... மேலும் பார்க்க