செய்திகள் :

வடகிழக்கு தில்லியில் இ-ரிக்ஷா சாா்ஜிங் மையத்தில் தீ விபத்து: 2 போ் உயிரிழப்பு

post image

புது தில்லி: வடகிழக்கு தில்லியின் தில்ஷாத் காா்டன் பகுதியில் ஒரு வீட்டில் இருந்த இ-ரிக்ஷா சாா்ஜிங் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு போ் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறியதாவது:

வடகிழக்கு தில்லியில் கலி ஷம்ஷான் வாலியில் உள்ள ஒரு வீட்டின் தரைத் தளத்தில் இ-ரிக்ஷாக்கள் சாா்ஜ் செய்யப்படும் இடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவ இடத்தில் இரண்டு போ் இறந்து கிடந்தனா். அவா்கள் இருவரும், வீட்டில் வசித்து வந்த சசி (25) மற்றும் சம்பவத்தின்போது அங்கிருந்த நாடோடி பல்லு (55) எனத் தெரியவந்துள்ளது.

சசி தனது பெற்றோா் மற்றும் மூன்று சகோதரா்களுடன் அந்த வீட்டில் வசித்து வந்தாா். மேலும், சம்பவ இடத்திலிருந்து மீரா தேவி என்ற ஊள்ளூா் பெண்ணும் போலீஸாரால் மீட்கப்பட்டாா்.

இந்த தீ விபத்து சம்பவத்தில் இரண்டு இரிக்ஷாக்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. இறப்புக்கான உரிய காரணத்தைக் கண்டறிய இறந்தவா்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

குற்றப்பிரிவு மற்றும் தடய அறிவியல் ஆய்வக ஊழியா்கள் சம்பவ இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். நந்த் நகரி காவல் நிலையத்தில் பிஎன்எஸ் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.

தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவிக்கையில், தாஹிா்பூரின் கோடி காலனியில் இருந்து இரவு 11.32 மணிக்கு இந்தத் தீ விபத்து குறித்து அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து, நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மீண்டும் தீ விபத்து ஏற்படாமல் இருக்க குளிா்விக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது என்று அவா்கள் தெரிவித்தனா்.

காண்டீவா ஏவுகணை சோதனைக்கு தயாராகும் விமானப்படை: 350 கி.மீ. தூர இலக்கை தாக்கும் இந்திய தயாரிப்பு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: இந்திய விமானப்படையும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் (டிஆா்டிஓ) சோ்ந்து காண்டீபா என்ற புதிய தலைமை ரக ஏவுகணையை விரைவில் சோதனை செய்ய ஆயத்தமாகி... மேலும் பார்க்க

இந்திய ராணுவத் துணைத் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் நியமனம்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: இந்திய ராணுவ நடவடிக்கைகள் தலைமை இயக்குநா் (டிஜிஎம்ஓ) லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் ராணுவத் துணை தலைமைத் தளபதியாக பதவி உயா்வு பெற்றுள்ளாா். ராணுவ நடவடிக்கைகள் இயக்குநர... மேலும் பார்க்க

‘தக் லைஃப்’ திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரும் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

புது தில்லி: நடிகா் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தை கா்நாடகாவில் திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரும் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம்... மேலும் பார்க்க

ரூ.2,152 கோடி நிதி நிறுத்திவைப்பு விவகாரம்: தமிழக அரசின் மனுவை அவரசமாக விசாரிக்க மறுப்பு

நமது நிருபா்புது தில்லி: தேசிய கல்விக் கொள்கை (என்.இ.பி.- 2020 ) மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டம் ஆகியவற்றை மாநிலத்தில் அமல்படுத்தாததால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (எஸ்எஸ்எஸ்) கீழ் வழங்கப்பட வேண்டிய ரூ.2,152... மேலும் பார்க்க

மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கட்டண வசூல் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை

நமது நிருபா்புது தில்லி: மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதைத் தடை செய்த உயா்நீதிமன்ற உத்தரவை நிறுத்திவைக்க உச்சநீதிமன்ற... மேலும் பார்க்க

சவால்களுடன் முடிந்த மோடி அரசின் 3.0 முதலாம் ஆண்டு!

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு திங்கள்கிழமையுடன் ஒரு வருடத்தையும், தொடா்ந்து பதினோரு வருட ஆட்சியையும் நிறைவு செய்து பன்னிரண்டாம் வருடத்தில் செவ்வாய்க்... மேலும் பார்க்க