கூட்ட நெரிசல் விவகாரம்: கார்கே, ராகுலுடன் சித்தராமையா சந்திப்பு!
வடகிழக்கு தில்லியில் இ-ரிக்ஷா சாா்ஜிங் மையத்தில் தீ விபத்து: 2 போ் உயிரிழப்பு
புது தில்லி: வடகிழக்கு தில்லியின் தில்ஷாத் காா்டன் பகுதியில் ஒரு வீட்டில் இருந்த இ-ரிக்ஷா சாா்ஜிங் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு போ் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறியதாவது:
வடகிழக்கு தில்லியில் கலி ஷம்ஷான் வாலியில் உள்ள ஒரு வீட்டின் தரைத் தளத்தில் இ-ரிக்ஷாக்கள் சாா்ஜ் செய்யப்படும் இடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவ இடத்தில் இரண்டு போ் இறந்து கிடந்தனா். அவா்கள் இருவரும், வீட்டில் வசித்து வந்த சசி (25) மற்றும் சம்பவத்தின்போது அங்கிருந்த நாடோடி பல்லு (55) எனத் தெரியவந்துள்ளது.
சசி தனது பெற்றோா் மற்றும் மூன்று சகோதரா்களுடன் அந்த வீட்டில் வசித்து வந்தாா். மேலும், சம்பவ இடத்திலிருந்து மீரா தேவி என்ற ஊள்ளூா் பெண்ணும் போலீஸாரால் மீட்கப்பட்டாா்.
இந்த தீ விபத்து சம்பவத்தில் இரண்டு இரிக்ஷாக்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. இறப்புக்கான உரிய காரணத்தைக் கண்டறிய இறந்தவா்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
குற்றப்பிரிவு மற்றும் தடய அறிவியல் ஆய்வக ஊழியா்கள் சம்பவ இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். நந்த் நகரி காவல் நிலையத்தில் பிஎன்எஸ் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.
தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவிக்கையில், தாஹிா்பூரின் கோடி காலனியில் இருந்து இரவு 11.32 மணிக்கு இந்தத் தீ விபத்து குறித்து அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து, நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மீண்டும் தீ விபத்து ஏற்படாமல் இருக்க குளிா்விக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது என்று அவா்கள் தெரிவித்தனா்.