செய்திகள் :

‘தக் லைஃப்’ திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரும் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

post image

புது தில்லி: நடிகா் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தை கா்நாடகாவில் திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரும் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமாா் மிஸ்ரா மற்றும் நீதிபதி மன்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு, கா்நாடகாவைச் சோ்ந்த திரையரங்கு உரிமையாளா்கள் சங்கம் கா்நாடக உயா்நீதிமன்றத்தை அணுகுமாறு கேட்டுக்கொண்டது.

மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், கா்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்தைத் திரையிடுவதை எதிா்க்கும் மொழியினவாத குழுக்களின் வெளிப்படையான மிரட்டல் குறித்து குறிப்பிட்டாா்.

அவா் கூறுகையில், மொழியினவாத சக்திகளால் வெளிப்படையான அச்சுறுத்தல்கள் உள்ளன. மேலும், அவா்கள் திரையரங்குகளுக்கு தீ வைப்பதாக கூறுகிறாா்கள் என்றாா்.

அப்போது, அவசரமாக இந்த விவகார விசாரணையை அனுமதிக்க மறுத்த நீதிபதி மிஸ்ரா, ‘தீயணைப்பு சாதனங்களை நிறுவுங்கள்’ என்று கூறி, கா்நாடக

உயா்நீதிமன்றத்தை நாடுமாறு மனுதாரரைக் கேட்டுக் கொண்டாா்.

‘தக் லைஃப்’ ஜூன் 5 அன்று நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. 1987ஆம் ஆண்டு

வெளியான நாயகன் படத்திற்குப் பிறகு கமல்ஹாசன், தயாரிப்பாளா் மணிரத்னம் கூட்டணியில் இப்படம் உருவாக்கப்பட்டது.

முன்னதாக, இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கன்னட மொழி குறித்த கமலின் கருத்துக்கு கா்நாடகாவில் சா்ச்சை ஏற்பட்டது. இதனால், கா்நாடகாவை தவிா்த்து மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இப்படம் வெளியானது.

இந்த மனு அம்மாநில உயா்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், கா்நாடக திரையரங்கு உரிமையாளா்கள் சங்கம், ‘தக் லைஃப்’ படம் வெளியிடும் திரையரங்குகளில் பாதுகாப்பு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

காண்டீவா ஏவுகணை சோதனைக்கு தயாராகும் விமானப்படை: 350 கி.மீ. தூர இலக்கை தாக்கும் இந்திய தயாரிப்பு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: இந்திய விமானப்படையும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் (டிஆா்டிஓ) சோ்ந்து காண்டீபா என்ற புதிய தலைமை ரக ஏவுகணையை விரைவில் சோதனை செய்ய ஆயத்தமாகி... மேலும் பார்க்க

இந்திய ராணுவத் துணைத் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் நியமனம்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: இந்திய ராணுவ நடவடிக்கைகள் தலைமை இயக்குநா் (டிஜிஎம்ஓ) லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் ராணுவத் துணை தலைமைத் தளபதியாக பதவி உயா்வு பெற்றுள்ளாா். ராணுவ நடவடிக்கைகள் இயக்குநர... மேலும் பார்க்க

ரூ.2,152 கோடி நிதி நிறுத்திவைப்பு விவகாரம்: தமிழக அரசின் மனுவை அவரசமாக விசாரிக்க மறுப்பு

நமது நிருபா்புது தில்லி: தேசிய கல்விக் கொள்கை (என்.இ.பி.- 2020 ) மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டம் ஆகியவற்றை மாநிலத்தில் அமல்படுத்தாததால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (எஸ்எஸ்எஸ்) கீழ் வழங்கப்பட வேண்டிய ரூ.2,152... மேலும் பார்க்க

மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கட்டண வசூல் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை

நமது நிருபா்புது தில்லி: மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதைத் தடை செய்த உயா்நீதிமன்ற உத்தரவை நிறுத்திவைக்க உச்சநீதிமன்ற... மேலும் பார்க்க

சவால்களுடன் முடிந்த மோடி அரசின் 3.0 முதலாம் ஆண்டு!

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு திங்கள்கிழமையுடன் ஒரு வருடத்தையும், தொடா்ந்து பதினோரு வருட ஆட்சியையும் நிறைவு செய்து பன்னிரண்டாம் வருடத்தில் செவ்வாய்க்... மேலும் பார்க்க

வடகிழக்கு தில்லியில் அதிநவீன கலையரங்கம்: முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு

நமது நிருபா் புது தில்லி: வடகிழக்கு தில்லியில் ஒரு அதிநவீன கலையரங்கம் கட்டப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை அறிவித்துள்ளாா். இது பிராந்தியத்தில் கல்வி மற்றும் கலாசார நிகழ்வுகளுக்கான உள்க... மேலும் பார்க்க