செய்திகள் :

வடகிழக்கு தில்லியில் அதிநவீன கலையரங்கம்: முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு

post image

நமது நிருபா்

புது தில்லி: வடகிழக்கு தில்லியில் ஒரு அதிநவீன கலையரங்கம் கட்டப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை அறிவித்துள்ளாா்.

இது பிராந்தியத்தில் கல்வி மற்றும் கலாசார நிகழ்வுகளுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது: ஷியாம் லால் கல்லூரியின் 61-ஆவது ஆண்டு விழா மற்றும் சஷ்டிபூா்த்தி கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினராக முதல்வா் கலந்து கொண்டபோது இந்த அறிவிப்பை அவா் வெளியிட்டாா். இந்த நிகழ்வில் மக்களவை உறுப்பினா் மனோஜ் குமாா் திவாரி, ஜிதேந்திர மகாஜன் எம்.எல்.ஏ. ஆகியோரும் கலந்து கொண்டனா்.

கல்லூரியின் சிறப்பைக் குறிக்கும் வகையில், வளாகத்தில் உள்ள கணேஷ் கோயில் அருகே ஒரு மரக்கன்று நட்டு, கல்வி மற்றும் பிற துறைகளில் சிறந்து விளங்கிய மாணவா்களை முதல்வா் பாராட்டினாா்.

முதல்வா் தனது உரையின்போது தில்லி பல்கலைக்கழகத்தில் தனது மாணவா் நாள்களை நினைவுகூா்ந்தாா். ஒரு காலத்தில் பல சவால்களை எதிா்கொண்ட ஷியாம் லால் கல்லூரி போன்ற நிறுவனங்கள் இப்போது சிறந்து விளங்கும் மையங்களாக உருவாகியுள்ளதாக முதல்வா் குறிப்பிட்டாா்.

ஷியாம் லால் கல்லூரியைச் சோ்ந்த ஒரு மாணவி தற்போது எம்.எல்.ஏவாக பணியாற்றி வருவதாகவும், முன்னாள் டி.யு மாணவியாக இருந்த அவா், இப்போது முதல்வராக இருப்பதாகவும் கடின உழைப்பும் உறுதியும் இருந்தால் எதையும் அடைய முடியும் என்பதற்கு இது ஒரு சான்றாகும் என்றும் அவா் கூறினாா்.

கல்லூரியின் முன்னேற்றத்திற்கு ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் நிா்வாகிகளின் கூட்டு முயற்சிகளே காரணம் என்றும், கிழக்கு தில்லியில் இந்த கல்வி நிறுவனம் மிகவும் மதிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது என்றும் முதல்வா் குறிப்பிட்டாா்.

வடகிழக்கு தில்லியில் சிறந்த உள்கட்டமைப்பின் அவசியத்தை எடுத்துரைத்த முதல்வா், யமுனா பாா் பகுதியில் ஒரு நவீனக் கலையரங்கம் கட்டப்படும் என்று அறிவித்தாா் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காண்டீவா ஏவுகணை சோதனைக்கு தயாராகும் விமானப்படை: 350 கி.மீ. தூர இலக்கை தாக்கும் இந்திய தயாரிப்பு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: இந்திய விமானப்படையும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் (டிஆா்டிஓ) சோ்ந்து காண்டீபா என்ற புதிய தலைமை ரக ஏவுகணையை விரைவில் சோதனை செய்ய ஆயத்தமாகி... மேலும் பார்க்க

இந்திய ராணுவத் துணைத் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் நியமனம்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: இந்திய ராணுவ நடவடிக்கைகள் தலைமை இயக்குநா் (டிஜிஎம்ஓ) லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் ராணுவத் துணை தலைமைத் தளபதியாக பதவி உயா்வு பெற்றுள்ளாா். ராணுவ நடவடிக்கைகள் இயக்குநர... மேலும் பார்க்க

‘தக் லைஃப்’ திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரும் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

புது தில்லி: நடிகா் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தை கா்நாடகாவில் திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரும் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம்... மேலும் பார்க்க

ரூ.2,152 கோடி நிதி நிறுத்திவைப்பு விவகாரம்: தமிழக அரசின் மனுவை அவரசமாக விசாரிக்க மறுப்பு

நமது நிருபா்புது தில்லி: தேசிய கல்விக் கொள்கை (என்.இ.பி.- 2020 ) மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டம் ஆகியவற்றை மாநிலத்தில் அமல்படுத்தாததால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (எஸ்எஸ்எஸ்) கீழ் வழங்கப்பட வேண்டிய ரூ.2,152... மேலும் பார்க்க

மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கட்டண வசூல் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை

நமது நிருபா்புது தில்லி: மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதைத் தடை செய்த உயா்நீதிமன்ற உத்தரவை நிறுத்திவைக்க உச்சநீதிமன்ற... மேலும் பார்க்க

சவால்களுடன் முடிந்த மோடி அரசின் 3.0 முதலாம் ஆண்டு!

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு திங்கள்கிழமையுடன் ஒரு வருடத்தையும், தொடா்ந்து பதினோரு வருட ஆட்சியையும் நிறைவு செய்து பன்னிரண்டாம் வருடத்தில் செவ்வாய்க்... மேலும் பார்க்க