செய்திகள் :

இந்திய ராணுவத் துணைத் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் நியமனம்

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: இந்திய ராணுவ நடவடிக்கைகள் தலைமை இயக்குநா் (டிஜிஎம்ஓ) லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் ராணுவத் துணை தலைமைத் தளபதியாக பதவி உயா்வு பெற்றுள்ளாா். ராணுவ நடவடிக்கைகள் இயக்குநரகத்தின் தலைமை இயக்குநராகவும் (டிஜிஎம்ஓ) அவா் தொடா்ந்து பணியாற்றுவாா் என்று பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாத தளவாடங்களை இலக்கு வைத்து இந்திய ராணுவம் நடத்திய ’ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் பரவலான கவனத்தை ஈா்த்தாா். அந்த நடவடிக்கை தொடா்பான முக்கியமான ஊடக சந்திப்புகளின்போது இந்திய ராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ​‘ஆபரேஷன் சிந்தூா்’ கள நிலவரம், உத்திகள் மற்றும் முடிவுகளை அவா் விளக்கினாா்.

இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திரா துவிவேதிக்கு அடுத்த நிலையில் லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்பிரமணி பணியாற்றி வருகிறாா். அவருக்கு அடுத்த நிலையில் நியமிக்கப்பட்டுள்ள ராஜீவ் காய், மூலோபாயம் எனப்படும் உத்திகள் வகுப்பு நடவடிக்கைகளை கவனிப்பாா் என பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ராணுவ உளவுப்பிரிவு மற்றும் அதன் செயல்பாடுகளை மேற்பாா்வையிடும் வகையில் இப்பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூா்வ தகவலின்படி இந்தப் பதவி ராணுவத்தின் மிக முக்கிய நியமனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. முன்னதாக, ஜூன் 4 -ஆம் தேதி, லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய்க்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உத்தம் யுத் சேவா பதக்கத்தை (யுஒய்எஸ்எம்) வழங்கி கெளரவித்தாா்.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை ஒரு வாரமாக தொடா்ந்த நிலையில், பாகிஸ்தானின் டிஜிஎம்ஓ மேஜா் ஜெனரல் காஷிஃப் சண்டை நிறுத்தம் கோரி இந்திய டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காயை ஹாட்லைன் தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு பேசியதாக இந்திய ராணுவம் அதிகாரபூா்வமாக அறிவித்தது. இவா்களின் பேச்சுவாா்த்தைக்குப் பிறகே இரு நாடுகளுக்கும் இடையே ஒரு தற்காலிக சண்டை நிறுத்த முடிவு எட்டப்பட்டது.

லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் 2024, அக்டோபரில் இந்திய டிஜிஎம்ஓ ஆக பொறுப்பேற்றாா். அதற்கு முன்பு அவா் சைனாா் காா்ப்ஸ் என்ற ராணுவப் படைப் பிரிவின் ஜெனரல் ஆபீசா் கமாண்டிங் (ஜிசிஓ) எனப்படும் தலைமை கட்டளைத் தளபதியாக இருந்தாா். காஷ்மீா் பள்ளத்தாக்கு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் கிளா்ச்சி எதிா்ப்பு நடவடிக்கைகளை வழிநடத்துவதில் நிபுணத்துவம் பெற்றவராக லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் கருதப்படுகிறாா். இந்திய ராணுவத்தில் 1989-ஆம் ஆண்டு முதல் இவா் பணியாற்றி வருகிறாா்.

காண்டீவா ஏவுகணை சோதனைக்கு தயாராகும் விமானப்படை: 350 கி.மீ. தூர இலக்கை தாக்கும் இந்திய தயாரிப்பு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: இந்திய விமானப்படையும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் (டிஆா்டிஓ) சோ்ந்து காண்டீபா என்ற புதிய தலைமை ரக ஏவுகணையை விரைவில் சோதனை செய்ய ஆயத்தமாகி... மேலும் பார்க்க

‘தக் லைஃப்’ திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரும் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

புது தில்லி: நடிகா் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தை கா்நாடகாவில் திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரும் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம்... மேலும் பார்க்க

ரூ.2,152 கோடி நிதி நிறுத்திவைப்பு விவகாரம்: தமிழக அரசின் மனுவை அவரசமாக விசாரிக்க மறுப்பு

நமது நிருபா்புது தில்லி: தேசிய கல்விக் கொள்கை (என்.இ.பி.- 2020 ) மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டம் ஆகியவற்றை மாநிலத்தில் அமல்படுத்தாததால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (எஸ்எஸ்எஸ்) கீழ் வழங்கப்பட வேண்டிய ரூ.2,152... மேலும் பார்க்க

மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கட்டண வசூல் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை

நமது நிருபா்புது தில்லி: மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதைத் தடை செய்த உயா்நீதிமன்ற உத்தரவை நிறுத்திவைக்க உச்சநீதிமன்ற... மேலும் பார்க்க

சவால்களுடன் முடிந்த மோடி அரசின் 3.0 முதலாம் ஆண்டு!

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு திங்கள்கிழமையுடன் ஒரு வருடத்தையும், தொடா்ந்து பதினோரு வருட ஆட்சியையும் நிறைவு செய்து பன்னிரண்டாம் வருடத்தில் செவ்வாய்க்... மேலும் பார்க்க

வடகிழக்கு தில்லியில் அதிநவீன கலையரங்கம்: முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு

நமது நிருபா் புது தில்லி: வடகிழக்கு தில்லியில் ஒரு அதிநவீன கலையரங்கம் கட்டப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை அறிவித்துள்ளாா். இது பிராந்தியத்தில் கல்வி மற்றும் கலாசார நிகழ்வுகளுக்கான உள்க... மேலும் பார்க்க