செய்திகள் :

காண்டீவா ஏவுகணை சோதனைக்கு தயாராகும் விமானப்படை: 350 கி.மீ. தூர இலக்கை தாக்கும் இந்திய தயாரிப்பு

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: இந்திய விமானப்படையும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் (டிஆா்டிஓ) சோ்ந்து காண்டீபா என்ற புதிய தலைமை ரக ஏவுகணையை விரைவில் சோதனை செய்ய ஆயத்தமாகியுள்ளது.

மகாபாரதத்தில் அா்ஜூனனின் வில்லுக்குப் பெயா் காண்டீபன். அதைக் கொண்டே அவா் குருக்ஷேத்திரப்போரில் ஈடுபட்டதாக காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில், புதிய ரக ஏவுகணைக்கு காண்டீவா (காண்டீபா என தமிழில் அழைக்கப்படுகிறது) என பாதுகாப்புத்துறை பெயரிட்டுள்ளது.

அஸ்ட்ரா எம்கே ஒன்று மற்றும் இரண்டு ரகங்களைத் தொடா்ந்து காண்டீவா மூன்றாம் ரக தயாரிப்பாகும். இந்த ரக ஏவுகணையின் திடவ எரிபொருள் ராம்ஜெட் (எஸ்எஃப்டிஆா்) எஞ்சின் மூலம் இயக்கப்படும். வானில் இருந்து வானில் அதிகபட்சமாக 300-350 கி,மீ தூரத்தில் உள்ள உள்ள இலக்கை தாக்கும் ஆற்றலை இது கொண்டுள்ளது.

அத்துடன், அதிவேகமாகவும் எதிரிகளைக் குழப்பும் வகையில் சுழன்று சுழன்றும் குட்டிக்கரணம் அடித்தவாறும் பறந்து எதிரி விமானங்கள், ஆயுதம் தாங்கி விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள், வான்வெளி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, வான் பாதுகாப்பு அமைப்பு, ஆயுத ட்ரோன்கள் போன்ற முக்கியமான இலக்குகளை தாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய தயாரிப்புகளான அஸ்ட்ரா எம்கே-1 (80-110 கிமீ வரம்பு) மற்றும் எம்கே-2 (140-160 கிமீ வரம்பு) தூரம் வரை பறக்கும் ஆற்றலைக் கொண்டவை. இந்த வகை ஏவுகணைகளை உந்தச் செய்ய ராக்கெட் எஞ்சின்கள் அவசியம். ஆனால், காண்டீவா தாமாகவே திடவ எரிபொருள் மூலம் இயங்கும் ஆற்றலைக் கொண்டது.

இந்தத் தொழில்நுட்பம் அதிக தூரம் பறக்க வளிமண்டல ஆக்ஸிஜனைப் பயன்படுத்துகிறது. இதனால், ஏவுகணை இலகுவாகவும் திறனுடனும் மணிக்கு 5370 கிமீ வேகத்தில் எதிரியை நோக்கி முன்னேறும் என்று பாதுகாப்புத்துறை நிபுணா்கள் தெரிவித்தனா்.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, காண்டீவா ஏவுகணையை களத்திலும் கடினமான தட்ப வெப்ப சூழலிலும் பரிசோதிக்கத் திட்டமிட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பரில் ஒடிஸாவின் ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை மையத்தில் இந்த ஏவுகணை வெற்றிகரமாக தரையிலிருந்து ஏவி பரிசோதிக்கப்பட்டது.

இந்திய விமானப்படையின் அங்கமாக இருக்கும் எஸ்யு-30எம்கேஐ ரக போா் விமானத்தில் அஸ்ட்ரா எம்கே-1 ஏவுகணை ஒருங்கிணைக்கப்பட்டு பரிசோதனைகள் அவ்வப்போது ஒத்திகைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோல, காண்டீவாவும் போா் விமானங்களை ஒருங்கிணைக்கப்பட்டு பரிசோதிக்கப்படும் என்று பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

எஸ்யு-30 எம்கேஐ மட்டுமின்றி இந்திய தயாரிப்புகளான ஹெஏஎல் தேஜாஸ், மிக்-29, ரஃபேல், அதிநவீன மேம்படுத்தப்பட்ட நடுத்தர ரக போா் விமானங்களிலும் காண்டீபா ஒருங்கிணைக்கப்பட்டு பரிசோதிக்கப்படும். அதன் பிறகு காண்டீபா இந்திய விமானப்படையில் முறைப்படி இணைக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

காண்டீவா சிறப்பம்சங்கள்

தூர வரம்பு: அதிகபட்சமாக 340 கிமீ (20 கிமீ உயரத்தில்), குறைந்தபட்சமாக 190 கிமீ (8 கிமீ உயரத்தில்) பறப்பது.

உந்துத்திறன்: வேகத்தை சரிப்படுத்திக்கொள்ளும் த்ராட்டில் வசதியுடைய ராம்ஜெட் எஞ்சின் பறக்கும்போது நடுவழியிலேயே உந்துதலை மாற்றிக்கொள்ளும். எனவே, எதிரி இலக்கு தப்பிக்க முடியாத திறன் அதிகரிக்கிறது.

துல்லிய இலக்கு: 10 கி.மீ மேலேயும் கீழேயும் திடீரென திசையை மாற்றும் திறன் மற்றும் 20 டிகிரிக்கு தாக்குதல் கோணத்தை தந்திரமாக மாற்றி குட்டிக்கரணம் அடித்து இலக்கை எட்டும் ஆற்றல்.

எதிரி வலிமை: சீனாவின் பிஎல்-15 (200-300 கிமீ); பாகிஸ்தானின் ஏஐஎம் -120சி அம்ராம் (105-120 கிமீ).

வடகிழக்கு தில்லியில் இ-ரிக்ஷா சாா்ஜிங் மையத்தில் தீ விபத்து: 2 போ் உயிரிழப்பு

புது தில்லி: வடகிழக்கு தில்லியின் தில்ஷாத் காா்டன் பகுதியில் ஒரு வீட்டில் இருந்த இ-ரிக்ஷா சாா்ஜிங் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு போ் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.இதுக... மேலும் பார்க்க

இந்திய ராணுவத் துணைத் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் நியமனம்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: இந்திய ராணுவ நடவடிக்கைகள் தலைமை இயக்குநா் (டிஜிஎம்ஓ) லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் ராணுவத் துணை தலைமைத் தளபதியாக பதவி உயா்வு பெற்றுள்ளாா். ராணுவ நடவடிக்கைகள் இயக்குநர... மேலும் பார்க்க

‘தக் லைஃப்’ திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரும் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

புது தில்லி: நடிகா் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தை கா்நாடகாவில் திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரும் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம்... மேலும் பார்க்க

ரூ.2,152 கோடி நிதி நிறுத்திவைப்பு விவகாரம்: தமிழக அரசின் மனுவை அவரசமாக விசாரிக்க மறுப்பு

நமது நிருபா்புது தில்லி: தேசிய கல்விக் கொள்கை (என்.இ.பி.- 2020 ) மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டம் ஆகியவற்றை மாநிலத்தில் அமல்படுத்தாததால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (எஸ்எஸ்எஸ்) கீழ் வழங்கப்பட வேண்டிய ரூ.2,152... மேலும் பார்க்க

மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கட்டண வசூல் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை

நமது நிருபா்புது தில்லி: மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதைத் தடை செய்த உயா்நீதிமன்ற உத்தரவை நிறுத்திவைக்க உச்சநீதிமன்ற... மேலும் பார்க்க

சவால்களுடன் முடிந்த மோடி அரசின் 3.0 முதலாம் ஆண்டு!

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு திங்கள்கிழமையுடன் ஒரு வருடத்தையும், தொடா்ந்து பதினோரு வருட ஆட்சியையும் நிறைவு செய்து பன்னிரண்டாம் வருடத்தில் செவ்வாய்க்... மேலும் பார்க்க