செய்திகள் :

Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்ன நடக்கிறது?

post image

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேற்ற சோதனைகளுக்கு எதிராக மக்கள் 3 நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடியேற்றமானவர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களுக்கு மாநில அரசின் ஆலோசனையைக் கேளாமல் ட்ரம்ப், ராணுவ அமைப்பான தேசிய காவல்படை துருப்புக்களை அனுப்பியது மக்களிடையே கோபத்தை கிளப்பியிருக்கிறது.

இதனால் கடந்த ஞாயிறு (08.06.2025) அன்று மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு முக்கிய சாலையை மறித்துப் போராடத் தொடங்கியுள்ளனர். கார்களை எரித்துள்ளனர். காவல்துறையினர் மீது பொருள்களை வீசி எரிந்துள்ளனர்.

போராட்டங்களைக் கட்டுப்படுத்த ரப்பர் குண்டுகள், கண்ணீர் புகைகுண்டுகள் மற்றும் மிகை வெளிச்ச குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர். காவல்துறை நடவடிக்கைகளில் பலர் காயமடைந்துள்ளனர். போராட்டக்காரர்களில் ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜூன் 7 அன்று ஒரு செய்தி புகைப்படக் கலைஞர் காலில் சுடப்பட்டார், மேலும் ஜூன் 8 அன்று நேரலையில் செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்த 9நியூஸ் நிருபர் லாரன் டோமாசி ரப்பர் தோட்டாவால் தாக்கப்பட்டார். கூடுதலாக, நிக் ஸ்டெர்ன் என்ற பத்திரிகையாளர் போராட்டங்களை ஆவணப்படுத்தும் போது ஏற்பட்ட காயங்களுக்கு அவசர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

காவல்துறையிலும் சிலர் காயமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எனினும் அதிகாரப்பூர்வமாக எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.

போராட்டம் ஏன்?

அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை அடுத்தடுத்து நடத்திய ரெய்டுகள் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஒரே நாளில் சான் பிரான்சிஸ்கோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 44 பேர் கைது செய்யப்பட்டனர். குடியேற்ற சோதனையில் ஈடுபடும் அதிகாரிகள் மிகவும் கடுமையாக நடந்துகொண்டுள்ளனர்.

கலிஃபோர்னிய மாகாண அரசாங்கம் குடியேற்றமானவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. மாகாண கவர்னருக்குத் தெரிவிக்காமலேயே ட்ரம்ப் அரசாங்கம் 2,000 தேசிய காவல்படை வீரர்களை லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அனுப்பியுள்ளது. இது போராட்டங்கள் எழுச்சி பெற முக்கிய காரணமாக அமைந்தது.

இதனைக் கண்டித்த ஆளுநர் கவின் நியூசம், மாகாண காவல்துறை ஏற்கெனவே நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. ட்ரம்ப் தேசிய காவல்படையினரை அனுப்பியது சட்டவிரோதமானது, அரசமைப்புக்கும் இறையாண்மைக்கும் எதிரானது என கண்டித்துள்ளார் ஆளுநர்.

கவின் நியூசம்
கவின் நியூசம்

இந்த நோக்கில், குடியேற்ற பிரச்னை மாகாண மற்றும் கூட்டாட்சி அரசுகளுக்கு இடையேயான அதிகாரப்போட்டியாகவும் உருவாகியிருக்கிறது.

ட்ரம்ப்பின் நடவடிக்கைப் பற்றி, "டிரம்ப் குழப்பத்தை விரும்புகிறார், ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பை கொடுக்க வேண்டாம். அமைதியாக இருங்கள், வன்முறையை தவிருங்கள்" எனப் பதிவிட்டுள்ளார் ஆளுநர் நியூசம்.

போராட்டக்காரர்கள் டஜன் கணக்கில் கைது செய்யப்பட்டுள்ளநிலையில், ஞாயிறு இரவுக்குப் பிறகு படிப்படியாக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் எண்ணிக்கை குறைந்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

மனிதனால் 150 ஆண்டுகள் உயிர் வாழ முடியுமா? - ஆயுள் காலம் குறித்த ஆராய்ச்சி முடிவுகள் சொல்வதென்ன?

மனிதர்களின் ஆயுள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. கடந்த 60 ஆண்டுகளில் உலக மக்களின் ஆயுள் படிப்படியாக அதிகரித்துக் கொண்டேதான் போகின்றது. இந்த நிலையில் “மனிதர்களின் உண்மையான ஆயுள் காலம்தான் என்ன?” என்பத... மேலும் பார்க்க

``அதிமுக கூட்டணி; எடப்பாடி பழனிசாமி சரியான நேரத்தில், சரியான முடிவு எடுப்பார்..'' - நடிகை கெளதமி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் திருக்கோயிலில் அ.தி.மு.க கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் நடிகை கௌதமி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆ... மேலும் பார்க்க

Los Angeles Protest - பணக்கார நகரம் பற்றி எரிவது ஏன்? | Trump | National Guards | Decode

Los Angeles நகரில் உள்ள Undocumented Immigrants தொடங்கிய போராட்டம் வன்முறையாக மாறியிருக்கிறது. Donald Trump போராட்டத்தை கட்டுப்படுத்த National Guards படையை களத்தில் இறக்கி இருப்பதற்கு California மாகாண... மேலும் பார்க்க

Doctor Vikatan: நமக்கே தெரியாமல் ஹார்ட் அட்டாக் வந்துபோயிருக்க வாய்ப்பு உண்டா..?

Doctor Vikatan: என்னுடைய மாமனாருக்கு 70 வயதாகிறது. சமீபத்தில் அவருக்கு ஃபிராக்சர் ஆனதற்காக மருத்துவமனை அழைத்துச் சென்றோம். பரிசோதனைகள் செய்தபோது அவருக்கு ஏற்கெனவேஒருமுறைஹார்ட் அட்டாக் வந்திருப்பதாக மர... மேலும் பார்க்க

Los Angeles riots: படைகளை அனுப்பிய ட்ரம்ப்; `அரசியலமைப்பை மீறும் செயல்' -கலிபோர்னியா ஆளுநர் வழக்கு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அப்போது இருந்து இப்போது வரை, அவர் கொண்டுவந்திருக்கும் பல சட்டங்கள் சர்ச்சைகளைக் கிளப்பி உள்ளன. ஆனால், முதன்முதலாக பூதாகரமாக வெடித்த சர்ச... மேலும் பார்க்க

``11 ஆண்டுகளாக ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்புக் கூட நடத்தவில்லை'' - பிரதமர் மோடியை சாடும் காங்கிரஸ்

பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சி நிறைவைக் குறிக்கும் வகையில் ஒரு செய்தியாளர் சந்திப்பைக் கூட இதுவரை நடத்தவில்லை என காங்கிரஸ் எம்.பி.யும், கட்சியின் தகவல் தொடர்புப் பிரிவின் பொதுச் செயலாளருமான ஜெய்ரா... மேலும் பார்க்க