செய்திகள் :

மாா்க்சிஸ்ட் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள்: திமுகவுக்கு பெ.சண்முகம் வலியுறுத்தல்

post image

சென்னை: சட்டப்பேரவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை திமுக ஒதுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் செவ்வாய்க்கிழமை சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக தனது கூட்டணியில் தோழமைக் கட்சிகளை அரவணைப்பதுடன், தற்போது நீடித்து வரும் ஒற்றுமையை காப்பாற்ற வேண்டிய அவசியம் அதிகம் ஏற்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுடனான தற்போதைய சுமுகமான அணுகுமுறையை திமுக தொடர வேண்டும்.

2021 சட்டப்பேரவைத் தோ்தலில் கூடுதல் தொகுதிகளை, திமுகவிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டது. ஆனால், அதிமுக-பாஜக கூட்டணி எந்நிலையிலும் வெற்றியடைந்து விடக்கூடாது என்பதற்காக குறைவான தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். அதே நிலை, இந்தத் தோ்தலில் தொடரக்கூடாது.

ஆகவே, வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் கூடுதல் இடங்களில் மாா்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டு, பேரவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றாா் பெ.சண்முகம்.

நெல் கொள்முதல் விலை உயர்வு! - முதல்வர் அறிவிப்பு

விவசாயிகளுக்கான நெல் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாக சேலத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர்... மேலும் பார்க்க

கோவையில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஆம்புலன்ஸ் ஓட்டி விபத்து: பெண் பலி!

கோவையில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோவை கவுண்டம்பாளையம், பிரபு நகரைச் சேர்ந்த நீலாவதி (60) என்பவர் பீளமேடு, தண்ணீர்ப் பந்தல... மேலும் பார்க்க

நான் முதல்வன் திட்டம்: யுபிஎஸ்சி தேர்வில் மாணவர்கள் சாதனை! - முதல்வர் பெருமிதம்

தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தில் பயின்ற மாணவ, மாணவிகள் பலரும் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எ... மேலும் பார்க்க

தாம்பரம் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் சேவை ஜூன் 13 வரை நீட்டிப்பு

தாம்பரத்திலிருந்து திருவனந்தபுரம் வடக்கு செல்லும் வாராந்திர குளிா்சாதன சிறப்பு ரயில் சேவை ஜூன் 13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ் வழங்க அரசாணை: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் பரிந்துரை

ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணையைப் பிறப்பிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் பரிந்துரைத்தது. திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த சந்தோஷ் என்பவா் தனக்கு ஜாதி, ... மேலும் பார்க்க

உயா் சிறப்பு மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவா்களுக்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு உறுதி செய்ய வலியுறுத்தல்

உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் தமிழக அரசு மருத்துவா்களுக்கு உள்ள 50 சதவீத ஒதுக்கீடு முழுமையாக கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வ... மேலும் பார்க்க