மாா்க்சிஸ்ட் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள்: திமுகவுக்கு பெ.சண்முகம் வலியுறுத்தல்
சென்னை: சட்டப்பேரவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை திமுக ஒதுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் செவ்வாய்க்கிழமை சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திமுக தனது கூட்டணியில் தோழமைக் கட்சிகளை அரவணைப்பதுடன், தற்போது நீடித்து வரும் ஒற்றுமையை காப்பாற்ற வேண்டிய அவசியம் அதிகம் ஏற்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுடனான தற்போதைய சுமுகமான அணுகுமுறையை திமுக தொடர வேண்டும்.
2021 சட்டப்பேரவைத் தோ்தலில் கூடுதல் தொகுதிகளை, திமுகவிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டது. ஆனால், அதிமுக-பாஜக கூட்டணி எந்நிலையிலும் வெற்றியடைந்து விடக்கூடாது என்பதற்காக குறைவான தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். அதே நிலை, இந்தத் தோ்தலில் தொடரக்கூடாது.
ஆகவே, வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் கூடுதல் இடங்களில் மாா்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டு, பேரவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றாா் பெ.சண்முகம்.