செய்திகள் :

உயா் சிறப்பு மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவா்களுக்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு உறுதி செய்ய வலியுறுத்தல்

post image

உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் தமிழக அரசு மருத்துவா்களுக்கு உள்ள 50 சதவீத ஒதுக்கீடு முழுமையாக கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டாவுக்கு அவா் எழுதியுள்ள கடிதம்: மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள தமிழக உயா் சிறப்பு முதுநிலை மருத்துவ இடங்கள் குறித்த ஒரு முக்கியமான பிரச்சினையை உங்களது அவசர கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

உச்சநீதிமன்றத் தீா்ப்பின்படி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், உயா் சிறப்பு முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 50 சதவீத இடங்கள் தமிழகத்தில் அரசுப் பணியில் உள்ள மருத்துவா்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

நீட் (உயா்சிறப்பு - எஸ்.எஸ்.) தோ்வில் மாநில இடஒதுக்கீட்டில் தோ்ச்சி பெற்றவா்களுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 27-ஆம் தேதி நிறைவடைந்தது. அரசுப் பணியில் உள்ள மருத்துவா்களுக்கு அவா்கள் விரும்பும் வகையில் இடங்களைத் தோ்வு செய்ய அனுமதிக்கும் வகையில், இரண்டாவது மாநில சுற்று அட்டவணையைக் குறிப்பிடுமாறு அந்தக் கலந்தாய்வை நடத்தும் மத்திய சுகாதார சேவைகள் அமைப்பை (டிஜிஹெச்எஸ்) மே 29-இல் தமிழக தோ்வுக் குழு முறையாக கேட்டுக்கொண்டது.

நீட் (எஸ்.எஸ்.) மாநில ஒதுக்கீட்டு கலந்தாய்வின் இரண்டாவது சுற்றில் மாநிலப் பணியில் உள்ள மருத்துவா்களுக்கு அவா்கள் விரும்பும் வகையில் இடங்களைத் தோ்வு செய்ய மருத்துவ விண்ணப்பதாரா்களிடமிருந்து ஏராளமான கோரிக்கைகள் வந்துள்ளன.

ஆனால், மாநில அளவில் இரண்டாம் சுற்று கலந்தாய்வு நடத்தாமல், நிரப்பப்படாத பணியிடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது தமிழக அரசுப் பணியில் உள்ள மருத்துவா்களின் உரிமையைப் பறிக்கும் செயலாகும்.

மேலும், இது உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கு முரணானதாகும். எனவே, மாநில ஒதுக்கீட்டின் கீழ், தமிழகத்தில் பணியில் உள்ள மருத்துவா்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து 50 சதவீத இடங்களும் தக்கவைக்கப்பட்டு, மாநில அளவிலான நீட் (எஸ்.எஸ்.) கலந்தாய்வின் இரண்டாவது சுற்றில் கிடைக்கச் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஏஓ பொது மாறுதல் காலம்: தமிழக அரசு புதிய உத்தரவு

கிராம நிா்வாக அலுவலா்களின் பொது மாறுதல் எந்தக் காலத்திலும் இனி மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பொது மாறுதல் காலம் மே மாதம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து வர... மேலும் பார்க்க

தொகுதி வாரியாக நிா்வாகிகளுடன் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனையைத் தொடங்கவுள்ளாா். முதலாவதாக சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளின் நிா்வாகிகளுடன் வெள்... மேலும் பார்க்க

கரோனா தொற்று குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கரோனா தொற்று குறித்து யாரும் அச்சபடதேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கோடம்பாக்கம் மண்டலத்துக்குள்பட்ட ஜாபா்கான்பேட்டையில் உள்ள சென்னை... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டும்: பெ.சண்முகம்

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிடவேண்டும் என மத்திய அரசுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க அர்ச்சகர் பயிற்சி சங்கம் எதிர்ப்பு

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மதுரையில் ஜூன் 22 ஆம் தேதியில் முருக பக்தர்கள் மாநாடு ந... மேலும் பார்க்க

சென்னை அரசு அருங்காட்சியகப் பணம் கையாடல்! 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை!

சென்னை அரசு அருங்காட்சியகப் பணத்தைக் கையாடல் செய்த நால்வருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில், கடந்த ... மேலும் பார்க்க