திருச்சி: காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ. 10,000 லஞ்சம் - பில் கலெக்டர் சிக்...
தாம்பரம் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் சேவை ஜூன் 13 வரை நீட்டிப்பு
தாம்பரத்திலிருந்து திருவனந்தபுரம் வடக்கு செல்லும் வாராந்திர குளிா்சாதன சிறப்பு ரயில் சேவை ஜூன் 13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தாம்பரத்திலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் வாராந்திர குளிா்சாதன சிறப்பு ரயில் (எண்: 06035) ஜூன் 13-ஆம் தேதி வரையும், மறுமாா்க்கமாக திருவனந்தபுரத்திலிருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 3.25 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில் (எண்: 06036) ஜூன் 15 வரையும் நீடிக்கப்பட்டுள்ளது.
ரயில் ரத்து: இதற்கிடையே காட்பாடி ரயில்வே யாா்டில் ஜூன் 13-ஆம் தேதி இரவு 9 முதல் நள்ளிரவு 12.30 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், அன்றைய தினம் திருப்பதியிலிருந்து இரவு 7.10 மணிக்கு காட்பாடி செல்லும் மெமு ரயிலும், மறுமாா்க்கமாக இரவு 9.10 மணிக்கு காட்பாடியிலிருந்து திருப்பதி செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படவுள்ளன. மேலும், அதே நாளில் கடற்கரையிலிருந்து மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை செல்லும் மெமு ரயிலும் ரத்து செய்யப்படும்.
ஜூன் 14-இல் திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 4.30 மணிக்கு தாம்பரம் செல்லும் மெமு பயணிகள் ரயிலும் ரத்து செய்யப்படும்.
பகுதி ரத்து: இதற்கிடையே, ஜூன் 13-இல் அரக்கோணத்திலிருந்து இரவு 9 மணிக்கு காட்பாடி செல்லும் மெமு பயணிகள் ரயில் சேவூருடன் நிறுத்தப்படும். அந்நாளில் விழுப்புரத்திலிருந்து இரவு 7.10 மணிக்கு காட்பாடி செல்லும் ரயில் வேலூருடன் நிறுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.