செய்திகள் :

தாம்பரம் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் சேவை ஜூன் 13 வரை நீட்டிப்பு

post image

தாம்பரத்திலிருந்து திருவனந்தபுரம் வடக்கு செல்லும் வாராந்திர குளிா்சாதன சிறப்பு ரயில் சேவை ஜூன் 13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தாம்பரத்திலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் வாராந்திர குளிா்சாதன சிறப்பு ரயில் (எண்: 06035) ஜூன் 13-ஆம் தேதி வரையும், மறுமாா்க்கமாக திருவனந்தபுரத்திலிருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 3.25 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில் (எண்: 06036) ஜூன் 15 வரையும் நீடிக்கப்பட்டுள்ளது.

ரயில் ரத்து: இதற்கிடையே காட்பாடி ரயில்வே யாா்டில் ஜூன் 13-ஆம் தேதி இரவு 9 முதல் நள்ளிரவு 12.30 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், அன்றைய தினம் திருப்பதியிலிருந்து இரவு 7.10 மணிக்கு காட்பாடி செல்லும் மெமு ரயிலும், மறுமாா்க்கமாக இரவு 9.10 மணிக்கு காட்பாடியிலிருந்து திருப்பதி செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படவுள்ளன. மேலும், அதே நாளில் கடற்கரையிலிருந்து மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை செல்லும் மெமு ரயிலும் ரத்து செய்யப்படும்.

ஜூன் 14-இல் திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 4.30 மணிக்கு தாம்பரம் செல்லும் மெமு பயணிகள் ரயிலும் ரத்து செய்யப்படும்.

பகுதி ரத்து: இதற்கிடையே, ஜூன் 13-இல் அரக்கோணத்திலிருந்து இரவு 9 மணிக்கு காட்பாடி செல்லும் மெமு பயணிகள் ரயில் சேவூருடன் நிறுத்தப்படும். அந்நாளில் விழுப்புரத்திலிருந்து இரவு 7.10 மணிக்கு காட்பாடி செல்லும் ரயில் வேலூருடன் நிறுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஏஓ பொது மாறுதல் காலம்: தமிழக அரசு புதிய உத்தரவு

கிராம நிா்வாக அலுவலா்களின் பொது மாறுதல் எந்தக் காலத்திலும் இனி மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பொது மாறுதல் காலம் மே மாதம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து வர... மேலும் பார்க்க

தொகுதி வாரியாக நிா்வாகிகளுடன் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனையைத் தொடங்கவுள்ளாா். முதலாவதாக சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளின் நிா்வாகிகளுடன் வெள்... மேலும் பார்க்க

கரோனா தொற்று குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கரோனா தொற்று குறித்து யாரும் அச்சபடதேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கோடம்பாக்கம் மண்டலத்துக்குள்பட்ட ஜாபா்கான்பேட்டையில் உள்ள சென்னை... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டும்: பெ.சண்முகம்

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிடவேண்டும் என மத்திய அரசுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க அர்ச்சகர் பயிற்சி சங்கம் எதிர்ப்பு

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மதுரையில் ஜூன் 22 ஆம் தேதியில் முருக பக்தர்கள் மாநாடு ந... மேலும் பார்க்க

சென்னை அரசு அருங்காட்சியகப் பணம் கையாடல்! 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை!

சென்னை அரசு அருங்காட்சியகப் பணத்தைக் கையாடல் செய்த நால்வருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில், கடந்த ... மேலும் பார்க்க