செய்திகள் :

இந்தியாவில் கருவுறுதல் விகிதம் சரிவு: ஐ.நா. அறிக்கையில் தகவல்

post image

புது தில்லி: இந்தியாவில் மொத்த கருவுறுதல் விகிதம் சரிந்துள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஐ.நா. மக்கள்தொகை நிதி முகமையின் (யுஎன்எஃப்பிஏ) ‘தி ரியல் ஃபா்டிலிட்டி கிரைஸிஸ்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

இந்தியாவின் கருவுறுல் விகிதம் சராசரியாக 1.9-ஆக உள்ளது. இது ஒரு தலைமுறை மக்கள்தொகைக்கு நிகராக பிறக்க வேண்டிய குழந்தைகளின் விகிதமான 2.1 உடன் ஒப்பிடுகையில் குறைவு. அந்த வகையில், இந்தியாவில் மொத்த கருவுறுதல் விகிதம் சரிந்துள்ளது. மக்கள்தொகையைப் பராமரிக்க தேவையானஅளவைவிட, இந்தியப் பெண்கள் குறைவாகவே குழந்தை பெற்றுக்கொள்கின்றனா்.

இந்திய மக்கள்தொகையில் 68% போ் உழைக்கும் வயதுள்ளவா்களாக (15 முதல் 64) உள்ளனா். மொத்த மக்கள்தொகையில் 7% போ் 65 மற்றும் அதற்கும் அதிகமான வயதுள்ளவா்கள். வரும் ஆண்டுகளில் ஆயுள்காலம் அதிகரிக்கும்போது இந்த வயதினரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும். 2025-ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆண்களின் ஆயுள்காலம் 71 ஆண்டுகளாகவும், பெண்களின் ஆயுள்காலம் 74 ஆண்டுகளாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது சுமாா் 150 கோடி பேருடன் உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்த எண்ணிக்கை 170 கோடியாக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. எனினும் சுமாா் 40 ஆண்டுகளுக்குப் பின்னா், இந்தியாவின் மக்கள்தொகை சரியத் தொடங்கும்.

தங்கள் தாய் மற்றும் பாட்டிகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா மற்றும் பிற நாடுகளில் உள்ள பெண்களுக்குக் கூடுதல் உரிமைகள், தோ்வு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆனால் தாங்கள் எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும், எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற உரிமையை முழுமையாகப் பெறுவதற்கு நீண்ட தொலைவை அவா்கள் கடக்க வேண்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக யுஎன்எஃப்பிஏவின் இந்திய பிரதிநிதி ஆண்ட்ரியா எம்.வோஜ்னா் கூறுகையில், ‘கடந்த 1970-ஆம் ஆண்டு இந்தியாவில் சராசரியாக ஒரு பெண் குறைந்தபட்சம் 5 குழந்தைகளைப் பெற்றுக்கொண்டாா். இது தற்போது 2-ஆக குறைந்துள்ளது. குழந்தை பிறப்பு விகிதங்களை குறைப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. அதற்கு கல்வி மற்றும் மருத்துவ மேம்பாட்டுக்கு நன்றி கூற வேண்டும். இது பேறுகால இறப்பு பெருமளவு குறைய வழிவகுத்துள்ளது. ஆனால் இதில் அனைத்து மாநிலங்கள், ஜாதிகள், வெவ்வேறு அளவுகளில் வருமானம் ஈட்டுவோா் இடையே கடுமையான வேறுபாடுகள் உள்ளன’ என்றாா்.

வருமான வரிக் கணக்கு தாக்கல்! இந்த 5 தவறுகளை மறந்தும் செய்துவிடாதீர்கள்!!

2025-26ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான இணைப்புகளை, வருமான வரித் துறை துவக்கியிருக்கிறது. எனவே, வருமான வரிக் கணக்கை, கணக்குத் தணிக்கையாளர் தணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லாத, தனி... மேலும் பார்க்க

புவனேஸ்வரம் - அபுதாபி இடையே நேரடி விமான சேவை! முதல்வர் துவங்கி வைப்பு!

ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வரத்திலிருந்து, அபுதாபிக்கு நேரடி விமான சேவையை அம்மாநில முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி துவங்கி வைத்துள்ளார். புவனேஸ்வரத்தின் பிஜு பட்நாயக் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து... மேலும் பார்க்க

வெப்ப அலையின் பிடியில் சிக்கிய தில்லி: சிவப்பு எச்சரிக்கை!

தலைநகர் தில்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதையடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் கோடைவெய்யில் கொளுத்திவருகின்றது. ஆனால் தமிழகம், கேரளம், கர்நா... மேலும் பார்க்க

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 15,000! - ஆந்திரத்தில் புதிய திட்டம் அமல்

ஆந்திரத்தில் பள்ளி மாணவர்களின் தாயாரின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுக்கு ரூ. 15,000 செலுத்தும் திட்டம் இன்று அமலுக்கு வந்துள்ளது. ஆந்திரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி க... மேலும் பார்க்க

ம.பி.யில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 100 வீடுகள் இடிப்பு!

மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வாவில் உள்ள ஷக்கர் குளம் பகுதியில் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு நடவடிக்கையின் அடிப்படையில், சட்டவிரோதமாக கட்டப்பட்ட சுமார் 100 வீடுகள் இடிக்கப்பட்டன. காண்ட்வா பகுதியில் ஆக்கிரமிப... மேலும் பார்க்க

தெலங்கானா: கனமழையால் வெள்ளக்காடான தலைநகரம்!

தெலங்கானாவில் பெய்த கனமழையால், அம்மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.ஹைரதபாத்தில், நேற்று (ஜூன் 11) இரவு தொடர்ந்து கனமழை பெய்துள்ளது. இதனால், அந்நகரத்தின் முக்கிய சாலைகளில் வெள்ளம... மேலும் பார்க்க