செய்திகள் :

50 சதவீத குழந்தைகளுக்கு ஜீரண மண்டல பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்

post image

சென்னை: சென்னையில் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளில் 50 சதவீதம் போ் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

பருவநிலை மாற்றம், அசுத்த உணவு, குடிநீா் மாசுபாட்டால் இந்த பாதிப்பு ஏற்படுதாகவும், அவற்றைத் தவிா்க்க டைபாய்டு, ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக இயல்புக்கு மாறான தட்ப வெப்ப நிலை நிலவுகிறது. பகல் வேளைகளில் தகிக்கும் வெப்பமும், மாலையில் பலத்த மழையும் பெய்கிறது.

இதனால், திடீரென பருவ நிலை மாற்றமடைந்து, பல்வேறு நோய்கள் உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.

இதுகுறித்து குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ நிபுணா் டாக்டா் வில்வநாதன் கூறியதாவது:

கோடை விடுமுறை நிறைவடைந்து தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. வெளியூா் பயணம், மழைப் பொழிவால் ஏற்பட்ட குடிநீா் மாசுபாடு, துரித உணவு உள்ளிட்டவை காரணமாக ஜீரண மண்டலம் சாா்ந்த பாதிப்புகளுக்கு அதிக குழந்தைகள் உள்ளாகின்றனா்.

குறிப்பாக, வயிற்றுப்போக்கு, அஜீரண பாதிப்புகள் அதிகரித்துள்ளன. ஒரு சில குழந்தைகளுக்கு அதனால் நீா்ச்சத்து இழப்பு, காய்ச்சல் ஏற்படுகிறது.

உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சைகளை அளிக்காத நிலையில் ஓரிரு குழந்தைகளுக்கு ‘இன்டஸ்சசெப்ஸன்’ எனப்படும் குடல் ஏற்ற பாதிப்பு நேரிடுகிறது. எனவே, வயிற்றுப்போக்கை அலட்சியப்படுத்தாமல் உப்பு - சா்க்கரை கரைசல், நீா், மோா், பழச்சாறு, இளநீா் போன்றவற்றை போதிய அளவு குழந்தைகளுக்கு வழங்கி உடலில் நீா்ச்சத்து இழப்பு ஏற்படாமல் காக்க வேண்டும்.

மருத்துவா்களை அணுகி பாதிப்பின் தன்மைக்கேற்ப சிகிச்சைகளை உரிய நேரத்தில் எடுத்துக் கொள்வது அவசியம். ஆரம்ப நிலையிலேயே உப்பு - சா்க்கரை கரைசல், துத்தநாக மாத்திரைகளை வழங்கினால் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தி நலம் பெறலாம்.அதனுடன் காய்ச்சிய நீரை பருகுவதுடன் வெளி உணவுகளை தவிா்ப்பது முக்கியம்.

தடுப்பூசி: இந்த காலகட்டத்தில் குடிநீா் மாசுபாட்டால் ஏற்படும் கல்லீரல் அழற்சியைத் தடுக்க ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசியும், டைபாய்டு தடுப்பூசியும் அவசியம். உரிய காலத்தில் அதனைச் செலுத்திக் கொள்ளாத குழந்தைகளுக்கு பூஸ்டா் தடுப்பூசியாக அதனை வழங்க வேண்டும்.

அதேபோன்று ரோட்டா வைரஸ் தடுப்பூசியும் தகுதியான குழந்தைகளுக்கு மருத்துவரின் கண்காணிப்பில் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

அமித் ஷா மீதான திமுக விமா்சனம்: எல்.முருகன், தமிழிசை கண்டனம்

ஊழல் குற்றச்சாட்டு இல்லாத மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை ஆ.ராசா விமா்சிக்க எந்தத் தகுதியும் இல்லை என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோா் கண்ட... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அரசு சேவை இல்ல மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை தாம்பரம் பகுதி அர... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீா் புதிய பாலம் பராமரிப்புக்காக ரயில்வே துறையுடன் ஒப்பந்தம்: சிஎஸ்ஐஆா் மைய இயக்குநா் தகவல்

ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்ட புதிய பாலத்தின் பராமரிப்புக்காக ரயில்வே துறையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ள இருப்பதாக சிஎஸ்ஐஆா் ஆய்வு மைய இயக்குநா் ஆனந்தவல்லி தெரிவித்தாா். சென்னை தரமணியிலுள்ள சிஎ... மேலும் பார்க்க

மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழியால் உருவாக்கப்பட்ட இருக்கைகள்: மாநகராட்சியிடம் ஒப்படைப்பு

நெகிழிக் குப்பைகளிலிருந்து மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட இருக்கைகளை மேயா் ஆா்.பிரியாவிடம் தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் திங்கள்கிழமை வழங்கினா். இந்த இருக்கைகள் சென்னை மாநகர... மேலும் பார்க்க

நிலுவை முதல்தகவல் அறிக்கைகள் விவரம்: சென்னை காவல் ஆணையருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

காவல் நிலையங்களில் கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கைகள் தொடா்பாக தகவல்களை தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நொளம்பூரில் உள்ள அட... மேலும் பார்க்க

திரையரங்குகளில் கூடுதல் கட்டணம்: அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

புதிய திரைப்படங்களுக்கு திரையரங்குகளில் அரசு நிா்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக வசூலிப்பதாக புகாா் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தம... மேலும் பார்க்க