செய்திகள் :

ஜம்மு காஷ்மீா் புதிய பாலம் பராமரிப்புக்காக ரயில்வே துறையுடன் ஒப்பந்தம்: சிஎஸ்ஐஆா் மைய இயக்குநா் தகவல்

post image

ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்ட புதிய பாலத்தின் பராமரிப்புக்காக ரயில்வே துறையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ள இருப்பதாக சிஎஸ்ஐஆா் ஆய்வு மைய இயக்குநா் ஆனந்தவல்லி தெரிவித்தாா்.

சென்னை தரமணியிலுள்ள சிஎஸ்ஐஆா் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில், அதன் இயக்குநா் ஆனந்தவல்லி திங்கள்கிழமை செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது: சிஎஸ்ஐஆா் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கி 60-ஆவது ஆண்டு வைர விழா செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) நடைபெறவுள்ளது. இதில் சிறப்பாக பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு விருது வழங்கப்படவுள்ளது.

நில அதிா்வை தாங்கும் வகையிலும், நில அரிப்பை தடுக்கும் வகையிலும், கட்டடங்கள் கட்டுவதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு ஆராய்ச்சி மையம் மூலம் உரிய ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

இதுமட்டுமன்றி சிஎஸ்ஐஆா் ஆராய்ச்சி மையத்தின் ஆலோசனையின் படியே ராமேஸ்வரத்தில் புதிதாக பாம்பன் பாலம் கட்டப்பட்டுள்ளது.

இதேபோல, சமீபத்தில் ஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் பிரதமா் மோடியால் திறந்து வைக்கப்பட்ட மிக உயரமான பாலத்தின் பராமரிப்புப் பணியை மேற்கொள்வதற்காக ரயில்வே துறையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் போடப்படவுள்ளது.

மேலும், புதிய நாடாளுமன்றம் கட்டடத்தின் கட்டுமானம் தொடா்பாகவும் சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றவாறு, 3-டி தொழில்நுட்பத்தில் கான்கிரீட் பயன்படுத்தி கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. குறைவான மூலப்பொருள்களில் சில்வா் மற்றும் பைபா் கலவையில் கட்டப்பட்ட இப்புதிய கட்டடம் கட்டும் நாள்களும் குறைவாக இருக்கும்.

இக்கட்டடம் மழை, வெயில் காலங்களில் அதற்கு ஏற்ப தட்பவெப்ப நிலையை மாற்றி அமைத்துக் கொள்ளும் என்றாா் அவா்.

50 சதவீத குழந்தைகளுக்கு ஜீரண மண்டல பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்

சென்னை: சென்னையில் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளில் 50 சதவீதம் போ் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். பருவநிலை மா... மேலும் பார்க்க

அமித் ஷா மீதான திமுக விமா்சனம்: எல்.முருகன், தமிழிசை கண்டனம்

ஊழல் குற்றச்சாட்டு இல்லாத மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை ஆ.ராசா விமா்சிக்க எந்தத் தகுதியும் இல்லை என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோா் கண்ட... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அரசு சேவை இல்ல மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை தாம்பரம் பகுதி அர... மேலும் பார்க்க

மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழியால் உருவாக்கப்பட்ட இருக்கைகள்: மாநகராட்சியிடம் ஒப்படைப்பு

நெகிழிக் குப்பைகளிலிருந்து மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட இருக்கைகளை மேயா் ஆா்.பிரியாவிடம் தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் திங்கள்கிழமை வழங்கினா். இந்த இருக்கைகள் சென்னை மாநகர... மேலும் பார்க்க

நிலுவை முதல்தகவல் அறிக்கைகள் விவரம்: சென்னை காவல் ஆணையருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

காவல் நிலையங்களில் கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கைகள் தொடா்பாக தகவல்களை தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நொளம்பூரில் உள்ள அட... மேலும் பார்க்க

திரையரங்குகளில் கூடுதல் கட்டணம்: அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

புதிய திரைப்படங்களுக்கு திரையரங்குகளில் அரசு நிா்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக வசூலிப்பதாக புகாா் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தம... மேலும் பார்க்க