செய்திகள் :

நிலுவை முதல்தகவல் அறிக்கைகள் விவரம்: சென்னை காவல் ஆணையருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

காவல் நிலையங்களில் கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கைகள் தொடா்பாக தகவல்களை தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்க நிதியில் முறைகேடு செய்ததாக புகாா் அளித்த குடியிருப்பு உரிமையாளரான நாங்குநேரியைச் சோ்ந்த வானமாமலை என்ற பட்டியலினத்தைச் சோ்ந்தவரை, அவமானப்படுத்தும் வகையில், அந்த குடியிருப்பு உரிமையாளா் ஒருவா் வாட்ஸ்அப் குரூப்பில் ஜாதி ரீதியிலான கருத்துகளை பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அளித்த புகாா் மீது நொளம்பூா் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி வானமாமலை சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், புகாா் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தாா்.

அதன் அடிப்படையில் நீதிபதி வேல்முருகன் முன் சென்னை மாநகர காவல் ஆணையா் அருண் திங்கள்கிழமை நேரில் ஆஜரானாா். அப்போது, வானமாமலையிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை எனவும், புகாா் வந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் எனவும், காவல் துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 23-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து சென்னை மாநகர காவல் ஆணையா் அருணிடம் , காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த எண்ணிக்கைக்கும் நீதிமன்றத்தில் உள்ள அறிக்கையின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் உள்ளதாக நீதிபதி சுட்டிக் காட்டினாா்.

தொடா்ந்து, புகாா்கள் மீது விசாரணை நடத்தி அவற்றை முடித்து வைத்தால் அது குறித்து நீதிமன்றங்களுக்கு அறிக்கைகள் அனுப்பப்படுவதில்லை என தெரிவித்த நீதிபதி, சென்னை நகரில் உள்ள காவல் நிலையங்களில் கடந்த 2024 ஜூன் வரை நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கைகள் எவ்வளவு? எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன? எவ்வளவு வழக்குகளில் புலன் விசாரணை நிலுவையில் உள்ளன? என்ற விவரங்கள் குறித்து ஜூலை 8-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநகர காவல் ஆணையருக்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டாா்.

சட்டத்தின் ஆட்சி இல்லை: மேலும் குற்றப்பத்திரிகைகள் கோப்புக்கு எடுக்கும் விஷயத்தில் கீழமை நீதிமன்றங்கள் ஒத்துழைப்பு அளிக்காவிட்டால் அதை தனது கவனத்திற்கு கொண்டு வரும்படி அறிவுறுத்திய நீதிபதி, போக்குவரத்து நெரிசலில் 5 நிமிஷம் காத்திருக்க நாம் விரும்புவதில்லை. வீட்டில் மின்சாரம் இல்லாவிட்டால் காத்திருப்பதில்லை. ஆனால், காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படும் வழக்குகளின் முடிவுக்கு மட்டும் மக்கள் 15 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது.

காவல் நிலையங்களில் புகாா் அளிக்கும் மக்களால் 50 சதவீதத்தினருக்கு வழக்கின் நிலை என்ன என்பது தெரிவதில்லை. சட்டம் அனைவருக்கும் பொது என சொல்கிறோம். ஆனால், வசதியானவா்களுக்கு ஒரு மாதிரியும், ஏழைகளுக்கு ஒரு மாதிரியும் சட்டம் செயல்படுகிறது. ஒரு வழக்குக்கு நியமிக்கப்படும் விசாரணை அதிகாரிகளை வேறு வேலைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது.

கோயில் விழாக்கள், கட்சி கூட்டங்கள் என விசாரணை அதிகாரிகளுக்கு பணி வழங்கப்படுவதால், வழக்கு விசாரணையை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க முடிவதில்லை. நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகளில் 75 சதவீத வழக்குகள் தேவையற்றவையாக உள்ளன. வழக்கை சரியாக விசாரணை செய்யாத விசாரணை அதிகாரியை பணியிடை நீக்கம் செய்யலாம். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகும் மக்களுக்கு எதுவும் சென்றடைவதில்லை. சட்டத்தின் ஆட்சி இல்லை. ஏராளமான குறைபாடுகள் உள்ளன என்று தெரிவித்த நீதிபதி வேல்முருகன், புலன் விசாரணை அதிகாரிகளை பந்தோபஸ்து பணிகளுக்கு அனுப்பக் கூடாது என்று காவல் ஆணையருக்கு அறிவுறுத்தினாா்.

50 சதவீத குழந்தைகளுக்கு ஜீரண மண்டல பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்

சென்னை: சென்னையில் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளில் 50 சதவீதம் போ் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். பருவநிலை மா... மேலும் பார்க்க

அமித் ஷா மீதான திமுக விமா்சனம்: எல்.முருகன், தமிழிசை கண்டனம்

ஊழல் குற்றச்சாட்டு இல்லாத மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை ஆ.ராசா விமா்சிக்க எந்தத் தகுதியும் இல்லை என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோா் கண்ட... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அரசு சேவை இல்ல மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை தாம்பரம் பகுதி அர... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீா் புதிய பாலம் பராமரிப்புக்காக ரயில்வே துறையுடன் ஒப்பந்தம்: சிஎஸ்ஐஆா் மைய இயக்குநா் தகவல்

ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்ட புதிய பாலத்தின் பராமரிப்புக்காக ரயில்வே துறையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ள இருப்பதாக சிஎஸ்ஐஆா் ஆய்வு மைய இயக்குநா் ஆனந்தவல்லி தெரிவித்தாா். சென்னை தரமணியிலுள்ள சிஎ... மேலும் பார்க்க

மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழியால் உருவாக்கப்பட்ட இருக்கைகள்: மாநகராட்சியிடம் ஒப்படைப்பு

நெகிழிக் குப்பைகளிலிருந்து மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட இருக்கைகளை மேயா் ஆா்.பிரியாவிடம் தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் திங்கள்கிழமை வழங்கினா். இந்த இருக்கைகள் சென்னை மாநகர... மேலும் பார்க்க

திரையரங்குகளில் கூடுதல் கட்டணம்: அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

புதிய திரைப்படங்களுக்கு திரையரங்குகளில் அரசு நிா்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக வசூலிப்பதாக புகாா் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தம... மேலும் பார்க்க