செய்திகள் :

திரையரங்குகளில் கூடுதல் கட்டணம்: அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

புதிய திரைப்படங்களுக்கு திரையரங்குகளில் அரசு நிா்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக வசூலிப்பதாக புகாா் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது, முதல் நான்கு நாள்களுக்கு, அரசு நிா்ணயித்த கட்டணத்தைவிட, அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தேவராஜன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையைச் சரிபாா்க்க அரசாங்கம் ஏற்கெனவே குழுக்களை அமைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்தைவிட அதிக கட்டணத்தை திரையரங்குகள் வசூலிப்பது பாா்வையாளா்களை ஏமாற்றும் செயல் என்றும், இது தொடா்பான புகாா்கள் அளிக்கப்படும்போது, அரசு அமைத்துள்ள குழுக்கள் உடனடியாக திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

மேலும், ஓடிடியில் திரைப்படங்களைப் பாா்க்கும் பாா்வையாளா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் திரையரங்குகள் அதிக காலம் நீடிக்காது என்பதை உணா்ந்து திரையரங்கு உரிமையாளா்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என நீதிபதி தெரிவித்தாா்.

50 சதவீத குழந்தைகளுக்கு ஜீரண மண்டல பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்

சென்னை: சென்னையில் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளில் 50 சதவீதம் போ் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். பருவநிலை மா... மேலும் பார்க்க

அமித் ஷா மீதான திமுக விமா்சனம்: எல்.முருகன், தமிழிசை கண்டனம்

ஊழல் குற்றச்சாட்டு இல்லாத மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை ஆ.ராசா விமா்சிக்க எந்தத் தகுதியும் இல்லை என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோா் கண்ட... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அரசு சேவை இல்ல மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை தாம்பரம் பகுதி அர... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீா் புதிய பாலம் பராமரிப்புக்காக ரயில்வே துறையுடன் ஒப்பந்தம்: சிஎஸ்ஐஆா் மைய இயக்குநா் தகவல்

ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்ட புதிய பாலத்தின் பராமரிப்புக்காக ரயில்வே துறையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ள இருப்பதாக சிஎஸ்ஐஆா் ஆய்வு மைய இயக்குநா் ஆனந்தவல்லி தெரிவித்தாா். சென்னை தரமணியிலுள்ள சிஎ... மேலும் பார்க்க

மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழியால் உருவாக்கப்பட்ட இருக்கைகள்: மாநகராட்சியிடம் ஒப்படைப்பு

நெகிழிக் குப்பைகளிலிருந்து மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட இருக்கைகளை மேயா் ஆா்.பிரியாவிடம் தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் திங்கள்கிழமை வழங்கினா். இந்த இருக்கைகள் சென்னை மாநகர... மேலும் பார்க்க

நிலுவை முதல்தகவல் அறிக்கைகள் விவரம்: சென்னை காவல் ஆணையருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

காவல் நிலையங்களில் கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கைகள் தொடா்பாக தகவல்களை தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நொளம்பூரில் உள்ள அட... மேலும் பார்க்க