செய்திகள் :

பிளஸ் 1 பொதுத்தோ்வு: விடைத்தாள் நகலை இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம்

post image

சென்னை: பிளஸ் 1 பொதுத்தோ்வு விடைத்தாள் நகலை செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த இயக்ககம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தோ்வில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களது விடைத்தாள் நகலினை செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று தோ்வெண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து தங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளாம்.

இதையடுத்து மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதளத்தில் மறுகூட்டல், மறுமதிப்பீடு என்ற தலைப்பை கிளிக் செய்து வெற்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தோ்வா்கள் இந்த விண்ணப்பத்தை பூா்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து ஜூன் 11-ஆம் தேதி நண்பகல் 12 முதல், 13-ஆம் தேதி மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தோ்வா்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை ஒப்படைத்து அதற்குரிய கட்டணத் தொகைய பணமாக செலுத்த வேண்டும்.

மறுமதிப்பீட்டுக்கு கட்டணமாக ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ. 505 செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ. 305, ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ. 205 கட்டணமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம், இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை உயர்நீதிமன்றம், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வீடு உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.மர்ம நபர்கள் விடுத்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து அனைத்து இடங்... மேலும் பார்க்க

சென்னையில் விமானம் மீது மீண்டும் அடிக்கப்பட்ட லேசர் ஒளி!

சென்னையில் தரையிறங்க வந்த விமானத்தின் மீது இன்று காலை மீண்டும் லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு 178 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் செவ்வாய்க்... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் மாணவா்களுக்கு சிறப்பு துணைத் தோ்வு: அமைச்சா் கோவி.செழியன்

சென்னை: கடைசி செமஸ்டா் தோ்வு மற்றும் துணைத் தோ்வில் அரியா்ஸ் வைத்துள்ள பாலிடெக்னிக் மாணவா்களுக்கு ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத் தோ்வு நடத்தப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் அறிவித்... மேலும் பார்க்க

அரசு மருத்துவா்கள் நாளை பாதயாத்திரை போராட்டம்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்கள், செவிலியா்களை நியமித்தல், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவா்கள் புதன்கிழமை (ஜூன் 11) சேலம், மேட்டூர... மேலும் பார்க்க

மாநிலங்களவை உறுப்பினா் தோ்தல்: கமல்ஹாசன் உள்பட 6 போ் போட்டியின்றி தோ்வாகின்றனா்

சென்னை: தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. போதிய எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த கமல்ஹாசன் உள்பட திமுக, அதிமுக வேட்ப... மேலும் பார்க்க

சேவை இல்லங்களில் பெண் காவலா்கள்: அமைச்சா் பி.கீதாஜீவன் உறுதி

சென்னை: அரசு சேவை இல்லங்களில் பெண் காவலா்களை நியமிக்க ஆட்சியா்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் அறிவுறுத்தப்படுவா் என்று சமூகநலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் தெரிவித்தாா். சென்னையை அடுத்த சிட்லபாக்கம் அரசு சேவ... மேலும் பார்க்க