கா்நாடக முதல்வருக்கு எதிரான மாற்று நில முறைகேடு வழக்கு: ரூ.100 கோடி சொத்துகள் மு...
மகப்பேறு விடுமுறைகள், ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.15,000 - மக்கள் தொகையை அதிகரிக்க ஆந்திரா முடிவு?
நாட்டில் தென்மாநிலங்களில் மக்கள் தொகை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் தென்மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் தங்களது மாநிலத்தில் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க கூடாது என்று போர்க்கொடி தூக்கினர்.
ஆந்திராவிலும் நாளுக்கு நாள் மக்கள் தொகை குறைந்து கொண்டே செல்கிறது. இதையடுத்து தொகுதி எண்ணிக்கை உட்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதால் ஆந்திரா அரசு மக்கள் தொகையை அதிகரிக்க அதிரடி நடவடிக்கையை தொடங்கி இருக்கிறது.
இதற்காக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பல புதிய திட்டங்களை அறிவிக்க இருகிறார். இதன்படி உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடுபவர்கள் குடும்பத்தில் இனி இரண்டு குழந்தைகள் மட்டும் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

இரண்டு குழந்தைக்கும் அதிகமான எண்ணிக்கையில் குழந்தைகள் இருந்தாலும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியும். அதோடு அரசு பணியில் இருக்கும் பெண்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் மகப்பேறு விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் அக்குழந்தையின் தாயாருக்கு ரூ.15000 சன்மானமாக கொடுக்கப்படும்.
குழந்தைகளை பராமரிக்க பெண்கள் பணிபுரியும் இடத்தில் கட்டாயம் குழந்தைகள் கவனிப்பு மையம் இருக்கவேண்டும் என்று அடுக்கடுக்காக சந்திரபாபு நாயுடு சலுகைகளை அறிவித்து இருக்கிறார். மேலும் இரண்டுக்கும் அதிகமான குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கும் நிதி சலுகைகள் அறிவிக்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சிக்கிம் அரசு இதற்கு முன்பு 2023ம் ஆண்டு இரண்டுக்கும் அதிகமான குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு சலுகைகளை அறிவித்து இருக்கிறது குறிப்பிடத்தக்கது.