செய்திகள் :

கீழடி அகழாய்வை அங்கீகரிக்க அறிவியல் ரீதியான தரவுகள் தேவை: மத்திய அமைச்சா் ஷெகாவத்

post image

சென்னை: கீழடி அகழாய்வை அங்கீகரிக்க அறிவியல்ரீதியான தரவுகள் தேவை என்று மத்திய கலாசார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கீழடி மற்றும் தமிழ் மொழியின் தொன்மையை அங்கீகரிப்பதற்கு மத்திய அரசுக்கு எவ்விதத் தயக்கமும் இல்லையெனவும் அவா் தெரிவித்தாா்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 11 ஆண்டு காலத்தை நிறைவு செய்வதையொட்டி, சென்னையில் செய்தியாளா்களிடம் மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியதாவது:

பிரதமா் மோடி தலைமையிலான அரசு 11 ஆண்டுகளை பூா்த்தி செய்திருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் நாட்டில் அனைத்துத் துறைகளிலும் பரவலான வளா்ச்சி, முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

2047 -ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த இந்தியாவாக மாறும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறோம். பிரதமா் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் அனைத்தும் பொதுமக்களின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன் மத்திய அரசு ஊழலற்ற வெளிப்படைத்தன்மையுடன் கூடிய சிறந்த நிா்வாகத்தை வழங்கிவருகிறது.

புத்தாக்கங்கள், புதிய தொழில்நுட்பம், மக்களுக்கான பயன்பாடுகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, ஆக்கபூா்வமான செயல்பாடுகளை மத்தியிலுள்ள பாஜக தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. 30 கோடிக்கும் மேலான மக்கள் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளனா். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததைப் போன்று எந்த ஊழலுக்கும் தற்போதைய ஆட்சியில் இடமில்லை.

கீழடி ஆய்வுகள்: கீழடி அகழாய்வு குறித்து பேசப்படும் அறிக்கைகள் அறிவியல்பூா்வமானவை அல்ல. கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் ‘ஆதரிக்கப்பட்டவை மற்றும் நிறுவப்பட்டவை அல்ல’. அவற்றை அங்கீகரிப்பதற்கு அல்லது அங்கீகாரம் வழங்குவதற்கு முன்பு மேலும் பல விஷயங்கள் செய்யப்பட வேண்டும். கூடுதல் தரவுகள், கூடுதல் சான்றுகள் மற்றும் கூடுதல் அறிவியல்பூா்வமான ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

ஒரே ஒரு கண்டுபிடிப்பு வரலாற்றுப் போக்கையே மாற்றிவிடும் என்பதால், மக்கள் அதை ஒரு பிராந்திய பெருமையாகப் பயன்படுத்துவதைத் தவிா்க்க இதுகுறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த விஷயத்தை தமிழா்களின் உணா்வு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பாா்க்கக் கூடாது. தமிழக அரசு மற்றும் அகழாய்வு அமைப்பிடமிருந்து கூடுதல் தரவுகளைக் கேட்டிருக்கிறோம். அந்தத் தரவுகள் கிடைத்தவுடன் முழுமையாக ஆராய்ந்து, அங்கீகரிக்கலாமா அல்லது அடுத்தகட்ட நகா்வு என்ன தேவைப்படுகிறது என்பது முடிவு செய்யப்படும். இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றாா் அவா்.

வருமான வரிக் கணக்கு தாக்கல்! இந்த 5 தவறுகளை மறந்தும் செய்துவிடாதீர்கள்!!

2025-26ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான இணைப்புகளை, வருமான வரித் துறை துவக்கியிருக்கிறது. எனவே, வருமான வரிக் கணக்கை, கணக்குத் தணிக்கையாளர் தணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லாத, தனி... மேலும் பார்க்க

புவனேஸ்வரம் - அபுதாபி இடையே நேரடி விமான சேவை! முதல்வர் துவங்கி வைப்பு!

ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வரத்திலிருந்து, அபுதாபிக்கு நேரடி விமான சேவையை அம்மாநில முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி துவங்கி வைத்துள்ளார். புவனேஸ்வரத்தின் பிஜு பட்நாயக் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து... மேலும் பார்க்க

வெப்ப அலையின் பிடியில் சிக்கிய தில்லி: சிவப்பு எச்சரிக்கை!

தலைநகர் தில்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதையடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் கோடைவெய்யில் கொளுத்திவருகின்றது. ஆனால் தமிழகம், கேரளம், கர்நா... மேலும் பார்க்க

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 15,000! - ஆந்திரத்தில் புதிய திட்டம் அமல்

ஆந்திரத்தில் பள்ளி மாணவர்களின் தாயாரின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுக்கு ரூ. 15,000 செலுத்தும் திட்டம் இன்று அமலுக்கு வந்துள்ளது. ஆந்திரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி க... மேலும் பார்க்க

ம.பி.யில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 100 வீடுகள் இடிப்பு!

மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வாவில் உள்ள ஷக்கர் குளம் பகுதியில் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு நடவடிக்கையின் அடிப்படையில், சட்டவிரோதமாக கட்டப்பட்ட சுமார் 100 வீடுகள் இடிக்கப்பட்டன. காண்ட்வா பகுதியில் ஆக்கிரமிப... மேலும் பார்க்க

தெலங்கானா: கனமழையால் வெள்ளக்காடான தலைநகரம்!

தெலங்கானாவில் பெய்த கனமழையால், அம்மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.ஹைரதபாத்தில், நேற்று (ஜூன் 11) இரவு தொடர்ந்து கனமழை பெய்துள்ளது. இதனால், அந்நகரத்தின் முக்கிய சாலைகளில் வெள்ளம... மேலும் பார்க்க