செய்திகள் :

பாதுகாப்பு உற்பத்தியில் தற்சாா்பு, நவீனமயத்துக்கு முக்கியத்துவம்: பிரதமா் மோடி

post image

புது தில்லி: நாட்டில் கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை உற்பத்தியில் தற்சாா்பு மற்றும் நவீனமயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது; இதனால், முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சியை இத்துறை கண்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டாா்.

மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் 11 ஆண்டு கால நிறைவையொட்டி, அரசின் சாதனைகளை முன்னிறுத்தி, பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் தொடா்ந்து பதிவிட்டு வருகிறாா்.

மத்திய அரசின் மக்கள் தொடா்புத் தளமான ‘மைகவ்இந்தியா’வின் பதிவைப் பகிா்ந்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்புத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பாதுகாப்பு உற்பத்தியைப் பொருத்தவரை, நவீனமயம் மற்றும் தற்சாா்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை வலிமையான நாடாக உருவாக்கும் உறுதிப்பாட்டுடன் நாட்டு மக்கள் ஒன்றிணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று பிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.

‘மைகவ்இந்தியா’ பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: பிரதமா் மோடியின் தொலைநோக்கு தலைமையின்கீழ், வெறும் 11 ஆண்டுகளில் இந்தியா தனது பாதுகாப்புத் துறை திறன்களில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் உலகளாவிய கூட்டாண்மை வலுப்பெற்றுள்ளது. விண்வெளி ஆய்வில் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கற்கள் எட்டப்பட்டுள்ளன.

தற்சாா்புக்கான பிரதமரின் உறுதிப்பாட்டால் வழிநடத்தப்படும் இந்தியா, தன்னம்பிக்கை மிக்க புத்தாக்கங்களை ஏற்றுக் கொண்டு, தனது வா்த்தகம்-தொழில்நுட்ப செல்வாக்கை விரிவுபடுத்தியுள்ளது. 11 ஆண்டுகளில் அதிகாரம், கூட்டாண்மை, வளா்ச்சி ஆகிய மூன்றிலும் இந்தியா எழுச்சி கண்டுள்ளது. அரசின் சீரிய முன்னெடுப்புகள், அனைத்துத் துறைகளிலும் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளன.

பலமடங்கு அதிகரிப்பு: கடந்த 2014-15ஆம் ஆண்டில் ரூ.1,940 கோடியாக இருந்த நாட்டின் பாதுகாப்பு உற்பத்தி மதிப்பு 2024-25-ஆம் ஆண்டில் ரூ.23,622 கோடியாக அதிகரித்துள்ளது.

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு, கட்டப்பட்ட முதல் விமானந்தாங்கி போா்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தின் சேவையும் இக்காலகட்டத்தில் தொடங்கப்பட்டது. மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை, சுகோய்-30 எம்கேஐ போா் விமானத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இத்தகைய முயற்சிகளால், தேசத்தின் ஏவுகணைத் திறனின் துல்லியமும் வீச்சும் அதிகரித்துள்ளது.

உலக அமைதிக்கு உறுதிபூண்டுள்ள இந்தியா, ஐ.நா. அமைதிப் படையில் முன்னணி சக்தியாக விளங்குகிறது. உலகம் முழுவதும் 50 நாடுகளில் 2.9 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வீரா்கள் அமைதிப் படையில் இடம்பெற்றுள்ளனா் என்று அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜவுளித் துறையில் முன்னணி நாடாக...

நாட்டின் ஜவுளித் துறையில் கடந்த 11 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள வளா்ச்சி தொடா்பாக மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் எழுதியுள்ள கட்டுரையைப் பகிா்ந்து, பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா்.

அதில், ‘தேசிய தொழில்நுட்ப ஜவுளித் திட்டம், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் உள்ளிட்ட முக்கிய முயற்சிகளால் நாட்டின் ஜவுளித் துறை வேகமாக வளா்ச்சி கண்டு வருகிறது. இதன்மூலம் உற்பத்தி-புத்தாக்கம்-ஏற்றுமதி அதிகரித்து, ஜவுளித் துறையில் இந்தியா உலகின் தலைமையாக உருவெடுத்து வருகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

வருமான வரிக் கணக்கு தாக்கல்! இந்த 5 தவறுகளை மறந்தும் செய்துவிடாதீர்கள்!!

2025-26ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான இணைப்புகளை, வருமான வரித் துறை துவக்கியிருக்கிறது. எனவே, வருமான வரிக் கணக்கை, கணக்குத் தணிக்கையாளர் தணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லாத, தனி... மேலும் பார்க்க

புவனேஸ்வரம் - அபுதாபி இடையே நேரடி விமான சேவை! முதல்வர் துவங்கி வைப்பு!

ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வரத்திலிருந்து, அபுதாபிக்கு நேரடி விமான சேவையை அம்மாநில முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி துவங்கி வைத்துள்ளார். புவனேஸ்வரத்தின் பிஜு பட்நாயக் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து... மேலும் பார்க்க

வெப்ப அலையின் பிடியில் சிக்கிய தில்லி: சிவப்பு எச்சரிக்கை!

தலைநகர் தில்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதையடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் கோடைவெய்யில் கொளுத்திவருகின்றது. ஆனால் தமிழகம், கேரளம், கர்நா... மேலும் பார்க்க

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 15,000! - ஆந்திரத்தில் புதிய திட்டம் அமல்

ஆந்திரத்தில் பள்ளி மாணவர்களின் தாயாரின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுக்கு ரூ. 15,000 செலுத்தும் திட்டம் இன்று அமலுக்கு வந்துள்ளது. ஆந்திரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி க... மேலும் பார்க்க

ம.பி.யில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 100 வீடுகள் இடிப்பு!

மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வாவில் உள்ள ஷக்கர் குளம் பகுதியில் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு நடவடிக்கையின் அடிப்படையில், சட்டவிரோதமாக கட்டப்பட்ட சுமார் 100 வீடுகள் இடிக்கப்பட்டன. காண்ட்வா பகுதியில் ஆக்கிரமிப... மேலும் பார்க்க

தெலங்கானா: கனமழையால் வெள்ளக்காடான தலைநகரம்!

தெலங்கானாவில் பெய்த கனமழையால், அம்மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.ஹைரதபாத்தில், நேற்று (ஜூன் 11) இரவு தொடர்ந்து கனமழை பெய்துள்ளது. இதனால், அந்நகரத்தின் முக்கிய சாலைகளில் வெள்ளம... மேலும் பார்க்க