மேகாலயா தேனிலவு கொலை: கணவரைக் கொல்ல உடந்தையான மனைவியின் உளவியல் சிக்கல்!
எம்.பி ஆகிறார் கமல்; சுயேச்சை வேட்புமனு நிராகரிப்பு; திமுக, அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!
தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை மாதத்தோடு முடிவடைய உள்ளது.
2019, ஜூலை 25-ம் தேதி, தமிழ்நாட்டிலிருந்து ஆறு பேர் மாநிலங்களவை எம்.பி-க்களாகத் தேர்வுசெய்யப்பட்டனர். அவர்களில், வழக்கறிஞர் வில்சன், தொ.மு.ச பேரவைத் தலைவர் சண்முகம், புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா ஆகியோர் தி.மு.க சார்பாகவும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தி.மு.க கூட்டணி சார்பாகவும் தேர்வாகினர்.
அதேபோல, அ.தி.மு.க-விலிருந்து சந்திரசேகர், அந்தக் கட்சியின் ஆதரவுடன் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களின் இடத்துக்கு தான் இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் தி.மு.க 3 இடங்கள், மக்கள் நீதி மய்யம் 1 இடத்திலும் போட்டியிட்டது. தி.மு.க சார்பில், தற்போதைய எம்.பி.வில்சன், கவிஞர் சல்மா, முன்னாள் எம்.எல்.ஏ சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அ.தி.மு.க சார்பில் வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க அவைத் தலைவர் தனபால் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இதில்10 எம்.எல்.ஏக்களின் முன்மொழிவு இல்லையென்றால் வேட்புமனு நிராகரிக்கப்படும் என்பதால் சுயேச்சை 7 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. திமுக, அதிமுக வேட்பாளர்கள் மற்றும் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs