செய்திகள் :

எம்.பி ஆகிறார் கமல்; சுயேச்சை வேட்புமனு நிராகரிப்பு; திமுக, அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!

post image

தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை மாதத்தோடு முடிவடைய உள்ளது.

2019, ஜூலை 25-ம் தேதி, தமிழ்நாட்டிலிருந்து ஆறு பேர் மாநிலங்களவை எம்.பி-க்களாகத் தேர்வுசெய்யப்பட்டனர். அவர்களில், வழக்கறிஞர் வில்சன், தொ.மு.ச பேரவைத் தலைவர் சண்முகம், புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா ஆகியோர் தி.மு.க சார்பாகவும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தி.மு.க கூட்டணி சார்பாகவும் தேர்வாகினர்.

அதேபோல, அ.தி.மு.க-விலிருந்து சந்திரசேகர், அந்தக் கட்சியின் ஆதரவுடன் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களின் இடத்துக்கு தான் இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றம்

இதில் தி.மு.க 3 இடங்கள், மக்கள் நீதி மய்யம் 1 இடத்திலும் போட்டியிட்டது. தி.மு.க சார்பில், தற்போதைய எம்.பி.வில்சன், கவிஞர் சல்மா, முன்னாள் எம்.எல்.ஏ சிவலிங்கம் மற்றும்  மக்கள் நீதி மய்யம் சார்பில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அ.தி.மு.க சார்பில் வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க அவைத் தலைவர் தனபால் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இதில்10 எம்.எல்.ஏக்களின் முன்மொழிவு இல்லையென்றால் வேட்புமனு  நிராகரிக்கப்படும் என்பதால் சுயேச்சை 7 பேரின்  வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. திமுக, அதிமுக வேட்பாளர்கள் மற்றும் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Rain Alert: இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?

இன்று (11-06-2025) வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்... மேலும் பார்க்க

கர்நாடகா: 'அலைச்சல் இல்லை; வரிசையில் நிற்க வேண்டாம்' - கவனம் பெறும் இல்லம் தேடி மருத்துவம் திட்டம்!

அடித்தட்டு மக்களுக்கும் மருத்துவம் சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது இல்லத்திலேயே சிகிச்சை அளிக்கும் விதமாக இலவச வெளிநோயாளர் பிரிவு (OPD) சேவைகளைத்... மேலும் பார்க்க

"திமுக ஆட்சி விளம்பரத்திற்கு மட்டுமே; பள்ளிக்கல்வித்துறை சீரழிந்து வருகிறது" - நயினார் விமர்சனம்

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு மறுத்து வருவதை திமுக அமைச்சர்களும், முதல்வர் ஸ்டாலினும் தொடர்ந்து கண்டித்து வருகின்றனர். ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படி தமிழக அரசுக்கு வழங்கப்பட வ... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சி: டெலிவரி பாய்கள், டாக்ஸி ஓட்டுநர்களுக்கு ஓய்வு அறை; என்னென்ன வசதிகள் உள்ளன?

சாலைகளில் அங்குமிங்கும் இருசக்கர வாகனங்களில் பறந்து உழைத்துக் கொண்டிருக்கும் ஆன்லைன் டெலிவரி வேலை செய்பவர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள் உள்ளிட்ட இணையத் தொழிலாளர்களுக்கு ஓய்வெடுப்பதும், குறிப்பாக பெண் இணையத்... மேலும் பார்க்க

வாய்க்காலில் 200 கிலோ மாத்திரைகள்; அகற்றிய மாசுக்கட்டுப்பாடு வாரியம்; அதிகாரிகள் சொல்வது என்ன?

200 கிலோ மாத்திரைகள்திருப்பூர் கோவில்வழி-அமராவதிபாளையம் சாலையில், பி.ஏ.பி., கிளை கால்வாய் உள்ளது. இந்த வாய்க்காலில் சுமார் 200 கிலோ மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக... மேலும் பார்க்க