செய்திகள் :

வேலூர்: ஜிம் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டல் - மீண்டும் கைதான பிரபல ரௌடி `வசூர்’ ராஜா

post image

வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த புதுவசூரைச் சேர்ந்த பிரபல ரௌடி `வசூர்’ ராஜா. இவன்மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என 54 குற்ற வழக்குகள் இருக்கின்றன. 9 முறை குண்டர் சட்டமும் பாய்ந்திருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக, வேலூர் மாவட்ட போலீஸாரின் க்ரைம் ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் வசூர் ராஜா, சமீபத்தில்தான் நிபந்தனை ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தான்.

தினமும் காலை, சத்துவாச்சாரி காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டு வந்தான். எஸ்.பி தனிப்படை போலீஸாரும், அவனின் செயல்பாடுகளை கண்காணித்து வந்தனர். இதைத்தொடர்ந்து, கடந்த வாரம் திடீரென வேலூர் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் சென்று திருந்தி வாழ நினைப்பதாகக் கூறி உத்திரவாத பத்திரத்தையும் தாக்கல் செய்தான் வசூர் ராஜா.

கைதான வசூர் ராஜா - கூட்டாளிகள்

இந்த நிலையில், ஜிம் உரிமையாளர் ஒருவரிடம் ரூ.2 லட்சம் மாமூல் கேட்டு, கொலை மிரட்டல் விடுத்து மீண்டும் பீதியை கிளப்பியிருக்கிறான் வசூர் ராஜா. வேலூர் கொணவட்டம் பகுதியில் ஜிம் வைத்திருக்கும் ரசாக் என்பவர்தான் மிரட்டப்பட்டவர். இது தொடர்பான ரெக்கார்டிங் ஆடியோக்களுடன் வேலூர் வடக்கு காவல் நிலையம் சென்று உடனடியாக புகாரளித்திருக்கிறார் ரசாக்.

இதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீஸார், ரௌடி வசூர் ராஜா மற்றும் அவனின் கூட்டாளிகள் ஆசிப், முனீர், வெங்கடேசன், மஞ்சுநாதன் ஆகிய 5 பேரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு வசூர் ராஜா உட்பட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திரிபுரா: இளைஞரைக் கொன்று ஐஸ்கிரீம் பெட்டியில் வைத்த நபர்; முக்கோண காதல் விவகாரத்தில் என்ன நடந்தது?

திரிபுரா மாநிலம் அகார்த்தலாவைச் சேர்ந்த சரிபுல் இஸ்லாம் (28) என்ற வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போய்விட்டார்.இது தொடர்பாக சரிபுல் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக... மேலும் பார்க்க

திருப்பூர்: மாற்றுச் சமூக பெண்ணை மகன் மணந்ததால் கோவம்; மனைவியை வெட்டிக் கொன்று கணவர்; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்த வேலப்பநாயக்கன்வலசு பாரக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (65).இவரது மனைவி சாமியாத்தாள் (60). இவர்களுக்கு வித்யாசாகர் (33) என்ற மகனும், அபிநயா (36) என்ற ... மேலும் பார்க்க

கோவில் கும்பாபிஷேகத்தில் குடும்பத்துடன் கைவரிசை; நகை திருட்டில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட ஐவர் கைது

ராமநாதபுரம் அருகே உள்ளது உத்திரகோசமங்கை. உலக புகழ்பெற்ற மரகத நடராஜர் சன்னதி அமைந்துள்ள மங்களநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கடந்த மே மாதம் 4-ம் தேதி நடந்தது.இவ்விழாவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வ... மேலும் பார்க்க

``பேய்கள் அழைக்கின்றன, செல்கிறேன்'' - கடிதம் எழுதி உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்.. என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே உள்ள காடேற்றி பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பு (55). வருகின்றனர்.இவருக்கு3 மகன்களும் 1 மகளும் இருந்தனர். மர வேலை செய்து வரும் ராமசுப்பு தற்போது குருந்தன் கோட்டில்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: 800 போதை ஊசி குப்பிகள் பறிமுதல்; இருவர் கைது; போதை நகரமாகிறதா முத்து நகர்?

தூத்துக்குடியில் போதைப் பழக்கம் இளம் சிறார்கள் மத்தியில் சமீபகாலமாகப் பெருகிவருகிறது. விற்பனை செய்வதும், அவற்றைப் பயன்படுத்துவதும் இளம் சிறார்களாக இருப்பதால் போலீஸாரின் பிடிக்குள் சிக்குவதில்லை.இதன் க... மேலும் பார்க்க

பீகார்: `எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க?’ - 'போலி காவல் நிலையம்' நடத்தி வசூல் செய்த மோசடி கும்பல்

பீகார் மாநிலம், பூர்னியா மாவட்டத்தில் ஒரு மோசடி கும்பல் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் போலி காவல் நிலையம் ஒன்றை நடத்திவந்தது தற்போது தெரியவந்துள்ளது. சமஸ்திப்பூர் என்ற பகுதியில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஏ... மேலும் பார்க்க