செய்திகள் :

Ahmedabad Plane Crash: விபத்தில் சிக்கிய விமானிகள் யார்; அவர்களின் அனுபவம் என்ன?

post image

Ahmedabad Plane Crash

குஜராத் மாநிலம், தலைநகர் அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

அஹமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட AI 171 - 787 என்ற எண் கொண்ட ஏர் இந்தியாவின் போயிங்-787 ட்ரீம்லைனர் விமானம், மதியம் சரியாக1:39 மணிக்குப் புறப்பட்டுள்ளது.

புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து சிதறியது. விபத்து நடந்த இடத்தில் வானுயர கரும்புகை எழுந்துள்ளது.

விமான விபத்து பற்றிய புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

9,300 மணி நேரம் விமானத்தில் பறந்த அனுபவம்

விமானத்தை கேப்டன் சுமீத் சபர்வால் மற்றும் முதல் அதிகாரி கிளைவ் குந்தர் இயக்கியதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தெரிவித்துள்ளது. இந்த இரு அதிகாரிகளின் அனுபவத்தையும் சேர்த்து 9,300 மணிநேரம் விமானமத்தில் பறந்திருக்கின்றனர்.

கேப்டன் சபர்வாலுக்கு 8,200 மணிநேர விமானப் பயண அனுபவம் இருந்தது. அவரது துணை விமானியான கிளைவ் குந்தர் 1,100 மணி நேரம் அனுபவம் பெற்றிருந்தார் என சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான DGCA -வின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Ahmedabad Airplane Crash
Ahmedabad Airplane Crash

கடைசி நேரத்தில் நடந்தது என்ன?

625 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம், நிமிடத்துக்கு 475 அடி வேகத்தில் சரிந்துள்ளதது. அங்கிருந்து ஒரு நிமிடத்துக்குள்ளாக கீழே விழுந்து குடியிருப்பு கட்டடம் ஒன்றில் மோதி வெடித்துச் சிதறியதால் விமானிகளுக்கு எவ்வித பாதுகாப்பு முயற்சிகளையும் மேற்கொள்ள போதுமான வேகம் இருந்திருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துக்கு விமானத்தில் இருந்து 'உயிருக்கு ஆபத்தான சூழலில், அவசராக உதவிக்காக எழுப்பப்படும் மேடே (MAYDAY) சிக்னல்' வந்திருக்கிறது. ஆனால் அதன் பிறகு விமானத்தை தொடர்புகொள்ள மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடந்ததாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் கூறியிருக்கிறது.

அகமதாபாத்: `விஜய் ரூபானி' விமான விபத்தில் மரணித்த 2-வது குஜராத் முதல்வர்!

அகமதாபாத் விமான விபத்தில் மரணமடைந்த பாஜக தலைவர் விஜய் ரூபானி குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராவார். இவரது மரணம் 1965ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரின்போது பாக் ஜெட் விமானத்தால் சுட்டு வீழ்த்த... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: "சுற்றியும் சடலங்கள்; விரிசல் வழியே..." - தப்பிப் பிழைத்தவர் சொல்வது என்ன?

"விமானம் டேக் ஆஃப் ஆகி 30 நொடிகள் ஆகியிருக்கும். அதிக சத்தம்... விமானம் விழுந்துவிட்டது. எல்லாம் வேகமாக நடந்தேறிவிட்டது.நான் எழுந்தபோது என்னைச் சுற்றிச் சடலங்களாகக் கிடந்தது. எனக்குப் பயமாக இருந்தது. ... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: கணவனுடன் வாழ லண்டன் புறப்பட்ட இளம் பெண்; விமான விபத்தில் பலியான சோகம்

நேற்று குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் குஷ்பு கன்வார் ஆசையுடனும், எதிர்பார்ப்புடனும், புதிய வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்க நம்பிக்கையுடன் காத்திருந்தார். ஆனால், அவரை வழியனுப்ப வந்தவர்களி... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: விமான விபத்துகளுக்கான காரணத்தைக் கூறும் 'Black Box' பற்றி தெரியுமா?

குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. என்ன நடந்தது?ஏர் இந்தியாவின் விமானம் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்த... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: கனவுகளுடன் தொடங்கிய பயணம்... 3 குழந்தைகளுடன் பரிதாபமாக உயிரிழந்த பெற்றோர்

இந்தியாவை உறையச் செய்த சம்பவத்தில் ஒன்று ஏர் இந்தியா விமான விபத்து. குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் 1:38 மணிக்கு லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 ... மேலும் பார்க்க

சென்னை: மெட்ரோ பாலம் விழுந்து விபத்து - ஒருவர் பலியான சோகம்!

சென்னை ராமாபுரம் பகுதியில் DLF அருகே மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பாதைக்கான இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம... மேலும் பார்க்க