செய்திகள் :

Ahmedabad Plane Crash: "இதயம் நொறுங்கி விட்டது..." - பிரதமர் மோடி வருத்தம்

post image

அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட AI 171 என்ற எண் கொண்ட போயிங் 787 ரக விமானத்தில், விமான குழுவினரோடு சேர்த்து மொத்தமாக 242 பேர் பயணித்திருக்கிறார்கள்.

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட இந்த விமானம் விபத்துக்குள்ளாகி, அகமதாபாத்தின் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியிருக்கிறது.

Ahmedabad Airplane Crash
Ahmedabad Plane Crash

Ahmedabad Airplane Accident : 'விமானத்தில் பயணித்த பாஜக முன்னாள் முதல்வர்?' - நிலை என்ன?

லண்டனின் காட்விக்கை நோக்கிப் புறப்பட்ட இந்த விமானத்தில் பா.ஜ.க-வைச் சேர்ந்த குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் பயணித்ததாக Economic Time, Gujart TV 9 போன்ற நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் துயர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில் பிரதமர் மோடி, "அகமதாபாத் துயர சம்பவம் அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளாக்கி இருக்கிறது.

வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு இதயம் நொறுங்கியிருக்கிறது. மீட்புப் பணியில் தீவிரமாக இறங்கியிருக்கும் களத்தில் இருக்கும் அதிகாரிகளிடம் தொடர்பிலிருந்து உதவிகள் அனைத்தையும் வழங்கி வருகிறோம்" என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`குழந்தை பராமரிப்பு விடுப்பு' - உயர் நீதிமன்றம் நிராகரிப்பு; உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு

ஜார்க்கண்டைச் சேர்ந்த கூடுதல் மாவட்ட நீதிபதியான காஷிகா கோரிய குழந்தை பராமரிப்பு விடுப்பை ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலை தொடர்ந்து, நீதிபதிக்கு 92 நாள்கள... மேலும் பார்க்க

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: முக்கிய ராணுவ அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் உயிரிழப்பு; நிலவரம் என்ன?

இன்று அதிகாலை (ஜூன் 13) இஸ்ரேல் ஆப்ரேஷன் 'Rising Lion' என ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.இந்த வான்வெளித் தாக்குதலில் ஈரானின் அணு ஆயுதத் தளங்கள், ராணுவத் தளங்கள், பயிற்சி முகாம்கள் குறி வைத்துத் தா... மேலும் பார்க்க

ஒடுகத்தூர்: 5 வருடங்களாகியும் பயன்பாட்டுக்கு வராத பேருந்து நிலைய நிழற்கூடம்; நடவடிக்கை எடுப்பார்களா?

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பேரூராட்சியில் 70,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஒடுகத்தூர் பேரூராட்சி பகுதியானது மேல் அரசம்பட்டு, பீஞ்சமந்தை போன்ற மலை கிராமங்களை இணைக்கும் பகுதியாக உள்ளது. எனவ... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: "காங்கிரஸ் தொண்டர்கள் களத்தில் உதவி செய்யுங்கள்"- ராகுல் காந்தி வேண்டுகோள்

அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட AI 171 என்ற எண் கொண்ட போயிங் 787 ரக விமானத்தில், விமான குழுவினரோடு சேர்த்து மொத்தமாக 242 பேர் பயணித்திருக்கிறார்கள். குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலி... மேலும் பார்க்க

`2026ல் கூட்டணி ஆட்சி அல்ல; அது பாஜகவின் ஆட்சி...' - பாஜக அண்ணாமலையின் கூட்டணிக் கணக்கு!

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை மையமாக வைத்துக் இப்போதே அரசியல் கட்சிகள் கூட்டணிக் கணக்குகளை வகுக்க ஆரம்பித்துவிட்டன. அரசியல் களத்தில் இப்போதைக்குக் கூட்டணி குறித்த விவாதங்கள்தான் சூடுபிடிக்க ஆரம... மேலும் பார்க்க

பட்டா மாறுதலுக்கு லஞ்சமா? - அலைக்கழிக்கப்பட்ட 90 வயது மூதாட்டி உயிரிழந்த சோகம்.. நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் செல்லம்மாள் (90). இவருக்கு 3 மகன், 2 மகள். ஒரு மகன் இறந்துவிட்டார். இந்நிலையில், மூதாட்டிக்குச் சொந்தமாக 110 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், ... மேலும் பார்க்க