செய்திகள் :

தூத்துக்குடி: 800 போதை ஊசி குப்பிகள் பறிமுதல்; இருவர் கைது; போதை நகரமாகிறதா முத்து நகர்?

post image

தூத்துக்குடியில் போதைப் பழக்கம் இளம் சிறார்கள் மத்தியில் சமீபகாலமாகப் பெருகிவருகிறது. விற்பனை செய்வதும், அவற்றைப் பயன்படுத்துவதும் இளம் சிறார்களாக இருப்பதால் போலீஸாரின் பிடிக்குள் சிக்குவதில்லை.

இதன் காரணமாகக் குற்றச்சம்பவங்களும் நடக்கின்றன. இது தாளமுத்துநகர் மற்றும் வடக்கு காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பெரும்பான்மையாக நடந்து வருகிறது.

தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் அருளப்பன் தலைமையிலான போலீஸார், தாளமுத்துநகர் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட மொட்டை கோபுரம் கடற்கரைப் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

கைது செய்யப்பட்ட இருவர்
கைது செய்யப்பட்ட இருவர்

ஒரே பைக்கில் வந்த இருவரை நிறுத்தி அவர்களிடம் சோதனை செய்தனர். சோதனையில் தாளமுத்துநகர் சமர்வியாஸ் நகரைச் சேர்ந்த செல்வகுமார் திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த ரஹீம் ஆகியோர் என்பது தெரிய வந்தது.  

அவர்கள் போதை ஊசிகளை மருந்து சீட்டு இல்லாமல் வெளியூரிலிருந்து சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்வதற்காகச் சென்று கொண்டிருந்தது சோதனையில்  தெரியவந்தது.  

இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 800 போதை மருந்து குப்பிகள், ரூ.11,300/- ரொக்க பணம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்களிடம் பேசினோம், “தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவர் பரிந்துரையின்றி சட்ட விரோதமாகப் போதை தரக்கூடிய மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசிகளை விற்பனை செய்பவர்கள் மற்றும் மருந்தக கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

இளம் சிறார்கள் மதுபிரியர்களாக மட்டும் இன்றி புதிய போதை பழக்க வழக்கங்களுக்குள்ளும் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் இவர்களைக் கண்டாலே தலைதெறிக்க ஓடும் அபாய நிலை தூத்துக்குடி நகருக்குள் பெருகிவருகிறது.

தாளமுத்துநகர் காவல் நிலையம்
தாளமுத்துநகர் காவல் நிலையம்

போலீஸாரின் ரோந்து நடவடிக்கையில் வீரியம் இல்லாததால் இதுபோன்ற தவறுகள் பயமின்றி நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. தவறு செய்து சிக்கிக் கொள்ளும் இளம் சிறார்கள் மீது தயவு தாட்சண்ணியமின்றி சட்ட நடவடிக்கை மேற்கொள்வது அவசியமாகி வருகிறது.

இளம் சிறார்களுக்கு ஆசை வார்த்தை கூறி போதை ஊசி விற்பனைக்குத் தள்ளிவிட்டு பெரிய கும்பல்கள் தப்பித்துக் கொள்கின்றன.   

போலீஸாரின் தீவிர கண்காணிப்பு இல்லையென்றால் போதை நகரமாக மாறிவரும் தூத்துக்குடி, கொலை நகரமாக மாறினாலும் ஆச்சரியமில்லை” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Ooty: ஈட்டி மரங்கள் மீது அத்துமீறல்; பிரபல கான்ட்ரக்டர் ராயன் மீது வழக்கு; வனச் சட்டம் சொல்வது என்ன?

நீலகிரி மாவட்டத்தில் ஈட்டி, சந்தனம், தேக்கு போன்ற விலை உயர்ந்த மரங்கள் அதிகளவில் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்‌ மட்டுமின்றி தனியாருக்குச் சொந்தமான நிலங்களிலும் இந்த வகை மரங்கள் காணப்படுகின்றன.தன... மேலும் பார்க்க

Operation Honeymoon: "சோனம் மீது சந்தேகம் வர இதான் காரணம்..." - மேகாலயா டிஜஜி சொல்வது என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்சியும், அவரது மனைவி சோனமும் கடந்த மாதம் 21ம் மேகாலயாவிற்குத் தேனிலவிற்குச் சென்றனர்.சென்ற இடத்தில் அவர்கள் இருவரும் கடந்த 23ம் தேதி திடீரென காணாமல்... மேலும் பார்க்க

திருச்சி: காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ. 10,000 லஞ்சம் - பில் கலெக்டர் சிக்கியது எப்படி?

திருச்சி, கே.கே.நகரில் உள்ள இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன்.இவர், தனது மனைவி அறிவுச்செல்வி பெயரில் உள்ள திருச்சி, கொட்டப்பட்டு கிராமம், அன்பில் நகரில் சுமார் 5920 சதுரடி உள்ள காலிமனைக்கு ... மேலும் பார்க்க

வழக்கிலிருந்து விடுவிக்க ரூ.7 லட்சம் லஞ்சம்? - ஆசிரியர் புகார்... சிபிஐ அதிகாரி மீது வழக்கு பதிவு!

வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக ஆசிரியரிடம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் சிபிஐ அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆசிரியர் ராமச்சந்திரன்வருமான வரி மோசடி புகார் தொ... மேலும் பார்க்க

திரிபுரா: இளைஞரைக் கொன்று ஐஸ்கிரீம் பெட்டியில் வைத்த நபர்; முக்கோண காதல் விவகாரத்தில் என்ன நடந்தது?

திரிபுரா மாநிலம் அகார்த்தலாவைச் சேர்ந்த சரிபுல் இஸ்லாம் (28) என்ற வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போய்விட்டார்.இது தொடர்பாக சரிபுல் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக... மேலும் பார்க்க

திருப்பூர்: மாற்றுச் சமூக பெண்ணை மகன் மணந்ததால் கோவம்; மனைவியை வெட்டிக் கொன்று கணவர்; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்த வேலப்பநாயக்கன்வலசு பாரக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (65).இவரது மனைவி சாமியாத்தாள் (60). இவர்களுக்கு வித்யாசாகர் (33) என்ற மகனும், அபிநயா (36) என்ற ... மேலும் பார்க்க