மருத்துவ மாணவர் விடுதி மீது விழுந்த விமானம்! மருத்துவர்களின் நிலை?
இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!
‘ஆக்ஸிம்-4’ மிஷனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸிம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. சுக்லாவுடன் போலந்து வீரா் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரா் திபோா் கபு ஆகியோரும் விண்வெளிக்குப் பயணிக்கவிருந்தனர்.
இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா, ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நேற்றிரவு பயணிக்கவிருந்தார். ‘டிராகன்’ விண்கலத்தில் 28 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு இன்று(ஜூன் 11) இரவு 10 மணியளவில் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைவார் எனக் கணிக்கப்பட்டிருந்தது. மோசமான வானிலை காரணமாக அவரின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் இருந்து இன்று மாலை 5.30 மணிக்கு மீண்டும் ராக்கெட்டை ஏவ திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவரின் விண்வெளிப் பயணம் ஒத்திவைக்கப்படுவதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஸ்பேஸ் எக்ஸின் ஃபால்கன் -9 ராக்கெட்டில் கடைசி நேரத்தில் தீ பூஸ்டர் ஆய்வுகளின் போது திரவ ஆக்ஸிஜன் கசிவு கண்டறியப்பட்டதால், அதனை சரிசெய்ய பொறியாளர்கள் கூடுதல் அவகாசம் கோரியுள்ளனர்.
இதுதொடர்பாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுயிருக்கிறது.
அந்தப் பதிவில், “ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் இருந்து ஆக்ஸிம்-4-ன் ஃபால்கன் 9 ராக்கெட் விண்ணில் ஏவப்படவிருந்த நிலையில், தீ பூஸ்டர் ஆய்வுகளின் போது திரவ ஆக்ஸிஜன் கசிவு கண்டறியப்பட்டதால், அதனை சரிசெய்வதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கோளாறு சரிசெய்யப்பட்டதும், புதிய தேதியை விரைவில் அறிவிப்போம்” எனப் பதிவிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: இந்தியாவில் கருவுறுதல் விகிதம் சரிவு: ஐ.நா. அறிக்கையில் தகவல்