செய்திகள் :

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!

post image

‘ஆக்ஸிம்-4’ மிஷனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸிம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. சுக்லாவுடன் போலந்து வீரா் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரா் திபோா் கபு ஆகியோரும் விண்வெளிக்குப் பயணிக்கவிருந்தனர்.

இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா, ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நேற்றிரவு பயணிக்கவிருந்தார். ‘டிராகன்’ விண்கலத்தில் 28 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு இன்று(ஜூன் 11) இரவு 10 மணியளவில் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைவார் எனக் கணிக்கப்பட்டிருந்தது. மோசமான வானிலை காரணமாக அவரின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் இருந்து இன்று மாலை 5.30 மணிக்கு மீண்டும் ராக்கெட்டை ஏவ திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவரின் விண்வெளிப் பயணம் ஒத்திவைக்கப்படுவதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஸ்பேஸ் எக்ஸின் ஃபால்கன் -9 ராக்கெட்டில் கடைசி நேரத்தில் தீ பூஸ்டர் ஆய்வுகளின் போது திரவ ஆக்ஸிஜன் கசிவு கண்டறியப்பட்டதால், அதனை சரிசெய்ய பொறியாளர்கள் கூடுதல் அவகாசம் கோரியுள்ளனர்.

இதுதொடர்பாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுயிருக்கிறது.

அந்தப் பதிவில், “ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் இருந்து ஆக்ஸிம்-4-ன் ஃபால்கன் 9 ராக்கெட் விண்ணில் ஏவப்படவிருந்த நிலையில், தீ பூஸ்டர் ஆய்வுகளின் போது திரவ ஆக்ஸிஜன் கசிவு கண்டறியப்பட்டதால், அதனை சரிசெய்வதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கோளாறு சரிசெய்யப்பட்டதும், புதிய தேதியை விரைவில் அறிவிப்போம்” எனப் பதிவிட்டுள்ளனர்.

இதையும் படிக்க: இந்தியாவில் கருவுறுதல் விகிதம் சரிவு: ஐ.நா. அறிக்கையில் தகவல்

லாஸ் ஏஞ்சலீஸ் மக்கள் போராட்டம்: 400 பேர் கைது!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக, லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து அமெரிக்... மேலும் பார்க்க

ஹவாய்: 6 மாதங்களில் 25 முறை வெடித்த எரிமலை!

அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிலாயூயா எரிமலை கடந்த 6 மாதங்களில் 25வது முறையாக வெடித்து சீற்றமடைந்துள்ளது. உலகில் அதிக சீற்றமுடைய எரிமலைகளில் ஒன்றான, ஹவாய் பெரிய தீவில் அமைந்துள்ள கிலாயூயா எரிமலை, நேற... மேலும் பார்க்க

அமெரிக்காவில் காட்டுத் தீ! 700 குடும்பங்கள் வெளியேற்றம்!

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், அப்பகுதிகளில் வசித்த சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஓரிகனின் கொலம்பியா ஆற்று கனவாய... மேலும் பார்க்க

50 போட்டிக் குழுவினரைக் கொன்ற ஹமாஸ்

காஸாவில் இஸ்ரேல் உதவியுடன் தங்களுக்கு எதிராகச் செயல்படும் அபு ஷபாப் குழுவைச் சோ்ந்த 50 பேரை ஹமாஸ் படையினா் கொன்றுள்ளனா். இது குறித்து அபு ஷபாப் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு எதிரான போராட்டம்: லாஸ் ஏஞ்சலீஸில் ஊரடங்கு உத்தரவு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து அங்கு ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டத... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் ரவீந்திரநாத் தாகூரின் மூதாதையா் வீடு சேதம்: விசாரணைக்கு உத்தரவு

வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நோபல் பரிசு பெற்ற பழம்பெரும் எழுத்தாளா் ரவீந்திரநாத் தாகூரின் மூதாதையா் வீடு தாக்கி, சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க 3 போ் கொண்ட... மேலும் பார்க்க