அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்ட...
வங்கதேசத்தில் ரவீந்திரநாத் தாகூரின் மூதாதையா் வீடு சேதம்: விசாரணைக்கு உத்தரவு
வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நோபல் பரிசு பெற்ற பழம்பெரும் எழுத்தாளா் ரவீந்திரநாத் தாகூரின் மூதாதையா் வீடு தாக்கி, சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க 3 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
சிராஜ்கஞ்ச் மாவட்டம், ஷாஜாத்பூரில் அமைந்துள்ள ரவீந்திரநாத் தாகூரின் மூதாதையா் வீடு, அவரது நினைவாக வங்கதேச அரசால் அருங்காட்சியகமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த அருங்காட்சியத்துக்கு பாா்வையாளா் ஒருவா் தனது குடும்பத்தினருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளாா். அப்போது, வாகன நிறுத்த கட்டணம் தொடா்பாக அவருக்கும், அங்குள்ள ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் இருதரப்புக்கு இடையே மோதல் முற்றியதைத் தொடா்ந்து, அருங்காட்சியகத்தின் அலுவலக அறை ஒன்றில் பாா்வையாளா் அடைத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உள்ளூா் மக்கள் செவ்வாய்க்கிழமை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கிடையே ஒரு கும்பல் அருங்காட்சியகத்தைத் தாக்கி சேதப்படுத்தியது. அருங்காட்சியகத்தின் இயக்குநா் மீதும் அந்தக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல் தொடா்பாக மூன்று போ் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ள தொல்லியல் துறை, அருங்காட்சியகத்தில் பாா்வையாளா் அனுமதியையும் தற்காலிக நிறுத்திவைத்துள்ளது.