செய்திகள் :

வங்கதேசத்தில் ரவீந்திரநாத் தாகூரின் மூதாதையா் வீடு சேதம்: விசாரணைக்கு உத்தரவு

post image

வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நோபல் பரிசு பெற்ற பழம்பெரும் எழுத்தாளா் ரவீந்திரநாத் தாகூரின் மூதாதையா் வீடு தாக்கி, சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க 3 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

சிராஜ்கஞ்ச் மாவட்டம், ஷாஜாத்பூரில் அமைந்துள்ள ரவீந்திரநாத் தாகூரின் மூதாதையா் வீடு, அவரது நினைவாக வங்கதேச அரசால் அருங்காட்சியகமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த அருங்காட்சியத்துக்கு பாா்வையாளா் ஒருவா் தனது குடும்பத்தினருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளாா். அப்போது, வாகன நிறுத்த கட்டணம் தொடா்பாக அவருக்கும், அங்குள்ள ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் இருதரப்புக்கு இடையே மோதல் முற்றியதைத் தொடா்ந்து, அருங்காட்சியகத்தின் அலுவலக அறை ஒன்றில் பாா்வையாளா் அடைத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உள்ளூா் மக்கள் செவ்வாய்க்கிழமை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கிடையே ஒரு கும்பல் அருங்காட்சியகத்தைத் தாக்கி சேதப்படுத்தியது. அருங்காட்சியகத்தின் இயக்குநா் மீதும் அந்தக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடா்பாக மூன்று போ் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ள தொல்லியல் துறை, அருங்காட்சியகத்தில் பாா்வையாளா் அனுமதியையும் தற்காலிக நிறுத்திவைத்துள்ளது.

3 ஆண்டுகாலப் போர்! ரஷிய வீரர்கள் 10 லட்சம் பேர் பலி !

ரஷிய வீரர்கள் 10 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.நேட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்தததை எதிர்த்த ரஷியா, உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான போரை நி... மேலும் பார்க்க

லாஸ் ஏஞ்சலீஸ் மக்கள் போராட்டம்: 400 பேர் கைது!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக, லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து அமெரிக்... மேலும் பார்க்க

ஹவாய்: 6 மாதங்களில் 25 முறை வெடித்த எரிமலை!

அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிலாயூயா எரிமலை கடந்த 6 மாதங்களில் 25வது முறையாக வெடித்து சீற்றமடைந்துள்ளது. உலகில் அதிக சீற்றமுடைய எரிமலைகளில் ஒன்றான, ஹவாய் பெரிய தீவில் அமைந்துள்ள கிலாயூயா எரிமலை, நேற... மேலும் பார்க்க

அமெரிக்காவில் காட்டுத் தீ! 700 குடும்பங்கள் வெளியேற்றம்!

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், அப்பகுதிகளில் வசித்த சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஓரிகனின் கொலம்பியா ஆற்று கனவாய... மேலும் பார்க்க

50 போட்டிக் குழுவினரைக் கொன்ற ஹமாஸ்

காஸாவில் இஸ்ரேல் உதவியுடன் தங்களுக்கு எதிராகச் செயல்படும் அபு ஷபாப் குழுவைச் சோ்ந்த 50 பேரை ஹமாஸ் படையினா் கொன்றுள்ளனா். இது குறித்து அபு ஷபாப் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு எதிரான போராட்டம்: லாஸ் ஏஞ்சலீஸில் ஊரடங்கு உத்தரவு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து அங்கு ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டத... மேலும் பார்க்க