செய்திகள் :

Health: நியூஸ் பேப்பரில் பஜ்ஜி, போண்டா வைத்து சாப்பிடுகிறீர்களா? - எச்சரிக்கும் மருத்துவர்

post image

ங்களுக்கு சாலையோரம் விற்கப்படும் பஜ்ஜி மற்றும் போண்டாவை சாப்பிடும் பழக்கம் உள்ளதா? அப்படி நீங்கள் சாப்பிட்டால் அங்கே பயன்படுத்திய செய்தித்தாளில் உணவு பொருள்களை வைத்து கொடுப்பார்கள். வேறு வழி இல்லை என்று நாமும் சிறிது நேரத்திற்கு அந்த உணவுகளை செய்தித்தாளில் வைத்து சாப்பிட்டு இருப்போம்.

சிறிது நேரம் தானே அப்படி அச்சிடப்பட்ட காகிதங்களில் வைத்து சாப்பிடுகிறோம், இதில் என்ன பிரச்னை இருக்கப்போகிறது என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால், இதில் தான் பிரச்னையே... சமீபத்தில் உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள உத்தரவில், 'உணவு வணிகர்கள் இனிமேல் செய்தித்தாள் போன்ற அச்சிட்ட காகிதங்களில் நேரடியாக படும் வகையில் உணவுப்பொருட்களை விநியோகிக்கக்கூடாது’ என்றிருக்கிறது.

நியூஸ் பேப்பரில் பஜ்ஜி, போண்டா வைத்து சாப்பிடுகிறீர்களா?
நியூஸ் பேப்பரில் பஜ்ஜி, போண்டா வைத்து சாப்பிடுகிறீர்களா?

மேலும், ‘அச்சிட்ட காகிதங்களில் உணவுப்பொருட்கள் நேரடியாக படும் வகையில் பரிமாறவோ அல்லது பொட்டலமிடவோ கூடாது. குறிப்பாக, உணவுப்பொருட்களை அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் பைகளில் சூடாக பொட்டலமிடக்கூடாது; உணவகங்களில் உணவு பரிமாற வாழையிலை, அனுமதிக்கப்பட்ட பார்ச்மெண்ட் பேப்பர், அலுமினியம் ஃபாயில் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது’ என்று உத்தரவு பிறப்பித்துள்ளது உணவு பாதுகாப்பு துறை.

அச்சிடப்பட்ட செய்தித் தாள்களில் உணவுப் பொருள்களை வைத்து சாப்பிட்டால் என்னவிதமான உடல் நல பாதிப்புகள் ஏற்படும் என்று சிவகங்கையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்குகிறார். “சமோசா, பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட உணவுப்பொருள்களை அச்சிடப்பட்ட காகிதங்கள் அல்லது பழைய நியூஸ் பேப்பரில் வைத்து கொடுக்கிறார்கள்.

இவ்வாறு கொடுக்கப்படும் உணவுப் பொருள்களை நாம் உட்கொள்வதினால் இரண்டு விதமான பாதிப்புகள் ஏற்படும். ஒன்று, அந்த நியூஸ் பேப்பர் பிரிண்ட் செய்வதற்காக மையை பயன்படுத்துவார்கள். அந்த மையில் 2-நாப்தைலமைன் மற்றும் 4-அமினோபிஃபீனைல் (2-naphthylamine and 4-aminobiphenyl) போன்ற ரசாயனங்கள் இருக்கும். இவ்வாறு ரசாயனங்கள் அடங்கிய நியூஸ் பேப்பரில் நாம் சூடான பஜ்ஜி, சமோசா போன்ற எண்ணெய் கலந்த உணவு பொருள்களை வைத்து சாப்பிடும்போது, அந்த உணவில் இந்த ரசாயனங்கள் எளிதாக கலந்து விடும். இவ்வாறாக தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதனால்தான், உணவு பாதுகாப்புத்துறை அச்சிடப்பட்ட காகிதங்கள் அல்லது நியூஸ் பேப்பர்களில் உள்ள ரசாயனம் உணவில் கலந்து உடல் நல பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா
டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா

இரண்டாவது விஷயம் என்னவென்றால், முறையான பேக்கிங் எதுவும் இல்லாமல் உணவுப்பொருட்களை கொடுப்பதினால் எளிதாக வைரஸ் தொற்று, பாக்டீரியா தொற்று அந்த உணவில் கடத்தப்படும்.

இந்தியா போன்ற நாடுகளில் உணவு பாதுகாப்பு, உணவை சுத்தமான முறையில் பரிமாறுவது, உணவைப் பரிமாறும் போது கைகளை சுத்தமாக கழுதல் என்பது மிக மிக குறைவு. உணவை பரிமாறவும், பேக்கேஜிங் செய்யவும் இலை, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், கண்ணாடி குடுவைகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். மாறாக பிளாஸ்டிக், நியூஸ் பேப்பர் போன்றவற்றை பயன்படுத்தினால் எளிதாக கிருமித்தொற்றுகள் கடத்தப்படும். மேலும் உடல் நலத்திற்கும் அது தீங்கும் விளைவிக்கக்கூடும்.

உணவு பாதுகாப்புத்துறை சொல்வது போல உணவுகளை நியூஸ் பேப்பர், பிளாஸ்டிக் பேப்பர் உள்ளிட்டவற்றில் வைத்து சாப்பிடுவது உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும். சிந்தித்து அதற்கான மாற்று வழியை பயன்படுத்துவோம்” என்கிறார் டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`கூட்டணி குறித்து நானே முடிவு செய்வேன்' - ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பின் முக்கிய 10 பாயிண்ட்ஸ்!

கடந்த சில மாதங்களாகவே, பாமகவில் உள்கட்சி பூசல் அவ்வப்போது வெடித்துகொண்டு வருகிறது. இளைஞரணி தலைவர் பதவியில் தொடங்கிய மோதல் இப்போது தலைவர் பதவிக்கு வந்து நிற்கிறது. கடந்த டிசம்பர் மாதம், பா.ம.கவின் சிறப... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ``இறந்த ஏழைகளின் எண்ணிக்கையை பாஜக அரசு மறைக்கிறது'' - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் மகா கும்பமேளா நடைபெற்றது. ஜனவரி 29-ம் தேதி மெளனி அமாவாசை தினத்தில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் அங்கு குவிந்தனா். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சி... மேலும் பார்க்க

``தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும்; அது இபிஎஸ் தலைமையில் அமையும்'' - நயினார் நாகேந்திரன்

நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி இந்தியாவின் பெருமையை உலக அளவில் உயர்த்தி, நாட்டிற்குப் பாதுகாப்பிற... மேலும் பார்க்க

``ஈபிஎஸ் சுயமாக சிந்திக்கக்கூடியவர், பாஜக உடன் இறுதிவரை இருப்பாரா?'' - சபாநாயகர் அப்பாவு

நெல்லையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளோடு பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நே... மேலும் பார்க்க

``அன்புமணி கண்ணைக் குத்திவிட்டார், அவமானப்படுத்திவிட்டார்; இதுதான் தலைவிதி..'' - வெடித்த ராமதாஸ்

பாமக கட்சிக்குள் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் இந்த சூழலில் ராமதாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.அவர் பேசிவருவதாவது...'தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வ... மேலும் பார்க்க

``4 ஆண்டுகளில் 458 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி..'' - வேளாண் கருத்தரங்கில் முதல்வர்

வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறையில் சார்பில் விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள், வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்த... மேலும் பார்க்க