செய்திகள் :

வலுக்கும் போராட்டம்: லாஸ் ஏஞ்சலீஸில் இரவு நேர ஊரடங்கு!

post image

லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஏற்பட்டுள்ள வன்முறை உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த நகர மேயர் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்கா வந்து வசிப்பவா்களை டிரம்ப் தலைமையிலான அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது.

இந்த வெளியேற்றம் சட்டவிரோதமானது என்று கூறி, கலிஃபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவலர்களை தாக்கிய பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்ட சிலர், முகமுடியை அணிந்துகொண்டு ஆப்பிள் ஸ்டோர் மற்றும் வணிக வளாகங்களுக்குள் புகுந்து விலையுயர்ந்த ஆப்பிள் போன்கள், டேப்-லட்கள் ஆகியவற்றை தூக்கிக்கொண்டு ஓடினர்.

பல்வேறு கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயர் கரேன் பாஸ் இரவு நேரத்தில் முழுமையான ஊரடங்குப் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

லாஸ் ஏஞ்சலீஸ் நகருக்கு மட்டும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, தேசிய பாதுகாப்புப் படையினர் மற்றும் கடற்படை காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வரலாற்று சிறப்புமிக்க அமெரிக்காவின் இரண்டாவது பெரிய மற்றும் வணிக நகரமான லாஸ் ஏஞ்சலீஸின் போராட்டக் களத்தைக் கண்டு தலைவர்கள் பலரும் தங்களது கண்டங்களைத் தெரிவித்திருக்கின்றனர். நகர நிர்வாக இயக்குநரான பிளேர் பெஸ்டன், அந்தப் பகுதியைப் பாதுகாப்பாக வைத்திருக்க தேசிய காவல்படையின் உதவியையும் கோரியுள்ளார்.

இதையும் படிக்க: லாஸ் ஏஞ்சலீஸ்: ஆப்பிள் ஸ்டோரை சூறையாடிய முகமுடி கொள்ளையர்கள்!

லாஸ் ஏஞ்சலீஸ் மக்கள் போராட்டம்: 400 பேர் கைது!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக, லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து அமெரிக்... மேலும் பார்க்க

ஹவாய்: 6 மாதங்களில் 25 முறை வெடித்த எரிமலை!

அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிலாயூயா எரிமலை கடந்த 6 மாதங்களில் 25வது முறையாக வெடித்து சீற்றமடைந்துள்ளது. உலகில் அதிக சீற்றமுடைய எரிமலைகளில் ஒன்றான, ஹவாய் பெரிய தீவில் அமைந்துள்ள கிலாயூயா எரிமலை, நேற... மேலும் பார்க்க

அமெரிக்காவில் காட்டுத் தீ! 700 குடும்பங்கள் வெளியேற்றம்!

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், அப்பகுதிகளில் வசித்த சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஓரிகனின் கொலம்பியா ஆற்று கனவாய... மேலும் பார்க்க

50 போட்டிக் குழுவினரைக் கொன்ற ஹமாஸ்

காஸாவில் இஸ்ரேல் உதவியுடன் தங்களுக்கு எதிராகச் செயல்படும் அபு ஷபாப் குழுவைச் சோ்ந்த 50 பேரை ஹமாஸ் படையினா் கொன்றுள்ளனா். இது குறித்து அபு ஷபாப் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு எதிரான போராட்டம்: லாஸ் ஏஞ்சலீஸில் ஊரடங்கு உத்தரவு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து அங்கு ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டத... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் ரவீந்திரநாத் தாகூரின் மூதாதையா் வீடு சேதம்: விசாரணைக்கு உத்தரவு

வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நோபல் பரிசு பெற்ற பழம்பெரும் எழுத்தாளா் ரவீந்திரநாத் தாகூரின் மூதாதையா் வீடு தாக்கி, சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க 3 போ் கொண்ட... மேலும் பார்க்க