செய்திகள் :

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவரின் அதிர்ச்சிப் பதிவு!

post image

குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்தவர் ஒருவர் வெளியிட்டிருக்கும் விடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விபத்தில் சிக்கிய அதே விமானத்தில் 2 மணி நேரத்துக்கு முன்பு பயணித்து, ஆமதாபாத்தில் இறங்கிய ஆகாஷ் என்பவர், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஏர் இந்தியா 171 விமானத்தில் இருந்து கோளாறுகளையும், குறைபாடுகளையும் படமெடுத்திருக்கிறார். இது குறித்து ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அனுப்பி அவர் விளக்கம் கேட்க நினைத்திருக்கிறார்.

தில்லியிலிருந்து ஆமதாபாத் செல்வதற்காக விபத்துக்குள்ளான இந்த ஏர் இந்தியா விமானத்தில்தான் அவர், விமானம் விபத்தில் சிக்குவதற்கு 2 மணி நேரம் முன்பு பயணம் செய்திருக்கிறார். அப்போது, அவர் அந்த விமானத்தையும், அதில், பயணிகளின் இருக்கையில் வைக்கபபட்டிருக்கும் தொலைக்காட்சி செயல்படவில்லை. தொலைபேசிகள் இயங்கவில்லை என்பதை கண்டறிந்து அதனை விடியோவாக எடுத்துள்ளார்.

விபத்தில் சிக்கிய இந்த விமானம், இன்று முற்பகலில் தில்லியிலிருந்து புறப்பட்டு ஆமதாபாத் சென்றுள்ளது. ஆகாஷ் தில்லியிலிருந்து ஆமதாபாத் சென்றுள்ளார். பிறகு, அந்த விமானம் ஆமதாபாத்திலிருந்து லண்டன் கிளம்பியபோதுதான் விபத்துக்குள்ளானது.

இதையும் படிக்க.. விமானியிடமிருந்து வந்த அவசர அழைப்பு, ஆனால் பேசவில்லை! மே டே கால் என்றால்?

அதில் 242 பேர் பலியான நிலையில், பெரும்பாலானோர் பலியாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

விமானத்தில் ஆகாஷ் பயணித்தபோது அங்கிருந்த குறைபாடுகளை அவர் விடியோ எடுத்து, அதனை ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அனுப்பி விளக்கம் கேட்க நினைத்திருந்தநிலையில்தான், சற்று நேரத்தில் எல்லாம் விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

விமானத்தில் தான் எடுத்த விடியோக்களையும் அவர் எக்ஸ் பக்கத்தில் இணைத்துள்ளார். அந்த விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியிருக்கிறது. விபத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட கடைசி விடியோவாகவும் மாறியிருக்கிறது.

மனைவி அஸ்தியைக் கரைக்க வந்தவர் விமான விபத்தில் பலி! லண்டனில் தவிக்கும் மகள்கள்!

மனைவியின் அஸ்தியை நர்மதை ஆற்றில் கரைக்க லண்டனில் இருந்து வந்த அர்ஜுன் பட்டோலியா, இறுதிச் சடங்குகளை செய்து முடித்துவிட்டு லண்டன் திரும்பும்போது விமான விபத்தில் பலியாகியுள்ளார்.மனைவியின் இறுதி ஆசையை நிற... மேலும் பார்க்க

நான்காவது முயற்சியில்தான் கொலை! சோனம் வெளியிட்ட திடுக்கிடும் வாக்குமூலம்...

மூன்று முறை கொலை முயற்சியில் தப்பிய ராஜா ரகுவன்ஷியை நான்காவது முறையில் கொன்றதாக அவரது மனைவி சோனம் வாக்குமூலம் அளித்துள்ளார்.மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி - சோனம் தம்பதியினர் தி... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிர் தப்பியது ஒருவர் அல்ல இருவர்!

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்தது ஒருவர் அல்ல இருவர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. பூமி சௌகான் பற்றிய தகவல்களை அறியும்போது.அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ஒரு சில வினாடிகளில் ப... மேலும் பார்க்க

கருப்புப் பெட்டி மீட்பு! செய்திகள் நேரலை...

மருத்துவ தம்பதி பலிஅகமதாபாத் விமான விபத்தில் உதய்ப்பூரைச் சேர்ந்த மருத்துவ தம்பதி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் பலியாகினர். லண்டனில் குடியேறும் கனவோடு இந்தியாவில் இருந்து புறப்பட்ட 5 பேரும் விமான... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! பலியான கேரள செவிலியரை விமர்சித்த வட்டாட்சியர் பணியிடை நீக்கம்!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான செவிலியரை விமர்சித்த கேரள தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் கேரளத்தைச் சேர்ந்த செவிலியர் ரஞ்சிதா கோபகுமாரன் (42) பலியானது... மேலும் பார்க்க

கடைசி செல்ஃபி! லண்டன் கனவுடன் புறப்பட்ட மருத்துவ தம்பதியின் கதை...

அகமதாபாத் விமான விபத்தில் உதய்ப்பூரைச் சேர்ந்த மருத்துவ தம்பதி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் பலியாகினர்.அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று பிற்பகல் விபத்துக்குள்ளான... மேலும் பார்க்க