செய்திகள் :

அகமதாபாத் விமான விபத்து: விமானத்திலிருந்த 52 பிரிட்டிஷார்... இங்கிலாந்து பிரதமர் கூறுவது என்ன?

post image

Ahmedabad Plane Crash

குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்திலிருந்து லண்டன் செல்லும் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

AI 171 - 787 என்ற எண் கொண்ட ஏர் இந்தியாவின் போயிங்-787 ட்ரீம் லைனர் விமானம், 675 அடி உயரத்திலிருந்து திடீரென கீழே விழுந்து குடியிருப்பு கட்டத்தில் மோதி வெடித்துச் சிதறியுள்ளது.

Ahmedabad Plane Crash
Ahmedabad Plane Crash

விமானத்தில் உள்ள 242 பேரில் 110 பேர் மரணமடைந்ததாக இதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் சூழலில் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த நிகழ்வை 'பேரதிர்ச்சி' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் கூறுவது என்ன?

"பல பிரிட்டிஷ் மக்களை ஏற்றிக்கொண்டு இந்திய நகரமான அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளான காட்சிகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

அங்குள்ள சூழல் குறித்து தொடர்ந்து எனக்குத் தகவல்கள் வருகின்றன. இந்த துயரமான நேரத்தில் பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடனே என் எண்ணங்கள் உள்ளன" என ட்வீட் செய்துள்ளார் கெய்ர் ஸ்டார்மர்.

பயணிகள் விவரம்

விமானத்தில் பயணிகள் மற்றும் விமானக் குழுவினர் சேர்த்து மொத்தம் 242 பேர் பயணித்துள்ளனர். இவர்களில் 169 இந்தியர்கள் மற்றும் 52 இங்கிலாந்து மக்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

விமான விபத்துக்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. விமானத்தின் கருப்பு பெட்டி ஆராயப்பட்டால்தான் முழுமையான தகவல்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

அகமதாபாத்: `விஜய் ரூபானி' விமான விபத்தில் மரணித்த 2-வது குஜராத் முதல்வர்!

அகமதாபாத் விமான விபத்தில் மரணமடைந்த பாஜக தலைவர் விஜய் ரூபானி குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராவார். இவரது மரணம் 1965ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரின்போது பாக் ஜெட் விமானத்தால் சுட்டு வீழ்த்த... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: "சுற்றியும் சடலங்கள்; விரிசல் வழியே..." - தப்பிப் பிழைத்தவர் சொல்வது என்ன?

"விமானம் டேக் ஆஃப் ஆகி 30 நொடிகள் ஆகியிருக்கும். அதிக சத்தம்... விமானம் விழுந்துவிட்டது. எல்லாம் வேகமாக நடந்தேறிவிட்டது.நான் எழுந்தபோது என்னைச் சுற்றிச் சடலங்களாகக் கிடந்தது. எனக்குப் பயமாக இருந்தது. ... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: கணவனுடன் வாழ லண்டன் புறப்பட்ட இளம் பெண்; விமான விபத்தில் பலியான சோகம்

நேற்று குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் குஷ்பு கன்வார் ஆசையுடனும், எதிர்பார்ப்புடனும், புதிய வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்க நம்பிக்கையுடன் காத்திருந்தார். ஆனால், அவரை வழியனுப்ப வந்தவர்களி... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: விமான விபத்துகளுக்கான காரணத்தைக் கூறும் 'Black Box' பற்றி தெரியுமா?

குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. என்ன நடந்தது?ஏர் இந்தியாவின் விமானம் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்த... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: கனவுகளுடன் தொடங்கிய பயணம்... 3 குழந்தைகளுடன் பரிதாபமாக உயிரிழந்த பெற்றோர்

இந்தியாவை உறையச் செய்த சம்பவத்தில் ஒன்று ஏர் இந்தியா விமான விபத்து. குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் 1:38 மணிக்கு லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 ... மேலும் பார்க்க

சென்னை: மெட்ரோ பாலம் விழுந்து விபத்து - ஒருவர் பலியான சோகம்!

சென்னை ராமாபுரம் பகுதியில் DLF அருகே மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பாதைக்கான இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம... மேலும் பார்க்க