அகமதாபாத்: `விஜய் ரூபானி' விமான விபத்தில் மரணித்த 2-வது குஜராத் முதல்வர்!
அகமதாபாத் விமான விபத்து: விமானத்திலிருந்த 52 பிரிட்டிஷார்... இங்கிலாந்து பிரதமர் கூறுவது என்ன?
Ahmedabad Plane Crash
குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்திலிருந்து லண்டன் செல்லும் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
AI 171 - 787 என்ற எண் கொண்ட ஏர் இந்தியாவின் போயிங்-787 ட்ரீம் லைனர் விமானம், 675 அடி உயரத்திலிருந்து திடீரென கீழே விழுந்து குடியிருப்பு கட்டத்தில் மோதி வெடித்துச் சிதறியுள்ளது.

விமானத்தில் உள்ள 242 பேரில் 110 பேர் மரணமடைந்ததாக இதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் சூழலில் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த நிகழ்வை 'பேரதிர்ச்சி' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் கூறுவது என்ன?
"பல பிரிட்டிஷ் மக்களை ஏற்றிக்கொண்டு இந்திய நகரமான அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளான காட்சிகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
அங்குள்ள சூழல் குறித்து தொடர்ந்து எனக்குத் தகவல்கள் வருகின்றன. இந்த துயரமான நேரத்தில் பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடனே என் எண்ணங்கள் உள்ளன" என ட்வீட் செய்துள்ளார் கெய்ர் ஸ்டார்மர்.
The scenes emerging of a London-bound plane carrying many British nationals crashing in the Indian city of Ahmedabad are devastating.
— Keir Starmer (@Keir_Starmer) June 12, 2025
I am being kept updated as the situation develops, and my thoughts are with the passengers and their families at this deeply distressing time.
பயணிகள் விவரம்
விமானத்தில் பயணிகள் மற்றும் விமானக் குழுவினர் சேர்த்து மொத்தம் 242 பேர் பயணித்துள்ளனர். இவர்களில் 169 இந்தியர்கள் மற்றும் 52 இங்கிலாந்து மக்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
விமான விபத்துக்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. விமானத்தின் கருப்பு பெட்டி ஆராயப்பட்டால்தான் முழுமையான தகவல்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.