செய்திகள் :

``கடல் விற்பனைக்கு இல்லை; ஆழ்கடல் சுரங்கத்துக்கு தடை..'' - டிரம்புக்கு எதிராக ஐ.நா-வில் ஒலித்த குரல்

post image

பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் ஜூன் 9-ம் தேதி ஐக்கிய நாடுகள் பெருங்கடல் மாநாடு தொடங்கியது.

ஜூன் 13-ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் உலக நாடுகளைச் சேர்ந்த பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள், ஆழ்கடலின் அடிவாரத்திலிருந்து முக்கிய கனிமங்கள் சேகரிக்கத் தோண்டப்படும் சுரங்கம் குறித்த சர்ச்சைக்குரிய விதிகள் மற்றும் கடலில் பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசுபாடு குறித்த உலகளாவிய ஒப்பந்தத்தின் விதிமுறைகள் ஆகியவை குறித்துக் கலந்துரையாடினர்.

அன்டோனியோ குட்டரெஸ்
அன்டோனியோ குட்டரஸ்

அதில், ஐ.நா பொதுச்செயலாளரான அன்டோனியோ குட்டரெஸ், "கடலிலுள்ள பல்லுயிர்களின் பெருக்கத்தைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்.

ஆழ்கடலில் குவிந்து கிடக்கும் வளங்களை உலக நாடுகள் அழிக்க விடக்கூடாது. எனவே, ஆழ்கடலில் கட்டுப்பாடில்லாமல் சுரங்கம் அமைக்க அனுமதித்தல் கூடாது" என வலியுறுத்தினார்.

இதே கருத்தைப் பிரதிபலித்த பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான், "ஆழ்கடல் சுரங்கத் தொழிலுக்குத் தடை விதிப்பது சர்வதேச அளவில் மிகத் தேவையான நடவடிக்கை.

ஆழ்கடல் அடிவாரத்தை சீர்குலைத்து, பல்லுயிர் பெருக்கத்தை சீர்குலைத்து, அதைக் கொள்ளையடிக்கும் பொருளாதார நடவடிக்கையைத் தொடங்குவது பைத்தியக்காரத்தனம் என்று நான் நினைக்கிறேன்.

கடல் விற்பனைக்கு இல்லை. அனைவருக்குமான பொது நன்மையைப் பற்றி நாங்கள் பேசுகிறோம்" எனக் கூறினார்.

இம்மானுவேல் மேக்ரான்
இம்மானுவேல் மேக்ரான்

அதேபோல், பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, "ஆழ்கடலில் முக்கிய கனிமங்களைத் தேடிக் கொள்ளையடிப்பது தொடர்பாக நாடுகளுக்கிடையே நிலவும் பந்தயத்தை முடிவுக்குக் கொண்டுவர, கடற்பரப்பு அதிகாரிகளின் தெளிவான நடவடிக்கை தேவை. கடலில் ஒருதலைபட்சமாக அச்சுறுத்தல் உருவாகி வருவதை நாம் காண்கிறோம். சர்வதேச வர்த்தகத்திற்கு நடந்தது போன்ற நிலையைக் கடலுக்கும் நாம் அனுமதிக்க முடியாது" எனத் தெரிவித்தார்.

உலகளாவிய கடல் ஒப்பந்தத்தை 60 நாடுகள் அங்கீகரிக்கச் செய்து, அதை நடைமுறைப்படுத்தி, சர்வதேச நீரில் வாழும் கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே ஐக்கிய நாடுகள் பெருங்கடல் மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

2030-க்குள், சர்வதேச நீர்நிலைகளில் 30 சதவீத நீர்நிலைகளை கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் சேர்க்க வேண்டும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தம் மூலம், சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாத்து ஆழ்கடல் வளங்களை மீட்டெடுக்க முடியும் என நம்பப்படுகிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சர்வதேச நீரில் முக்கியமான கனிமங்களைப் பிரித்தெடுப்பதற்கான அனுமதி வழங்க, கடந்த ஏப்ரல் மாதம் எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்தக் கருத்துக்கள் வெளிப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

`கூட்டணி குறித்து நானே முடிவு செய்வேன்' - ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பின் முக்கிய 10 பாயிண்ட்ஸ்!

கடந்த சில மாதங்களாகவே, பாமகவில் உள்கட்சி பூசல் அவ்வப்போது வெடித்துகொண்டு வருகிறது. இளைஞரணி தலைவர் பதவியில் தொடங்கிய மோதல் இப்போது தலைவர் பதவிக்கு வந்து நிற்கிறது. கடந்த டிசம்பர் மாதம், பா.ம.கவின் சிறப... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ``இறந்த ஏழைகளின் எண்ணிக்கையை பாஜக அரசு மறைக்கிறது'' - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் மகா கும்பமேளா நடைபெற்றது. ஜனவரி 29-ம் தேதி மெளனி அமாவாசை தினத்தில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் அங்கு குவிந்தனா். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சி... மேலும் பார்க்க

``தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும்; அது இபிஎஸ் தலைமையில் அமையும்'' - நயினார் நாகேந்திரன்

நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி இந்தியாவின் பெருமையை உலக அளவில் உயர்த்தி, நாட்டிற்குப் பாதுகாப்பிற... மேலும் பார்க்க

``ஈபிஎஸ் சுயமாக சிந்திக்கக்கூடியவர், பாஜக உடன் இறுதிவரை இருப்பாரா?'' - சபாநாயகர் அப்பாவு

நெல்லையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளோடு பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நே... மேலும் பார்க்க

``அன்புமணி கண்ணைக் குத்திவிட்டார், அவமானப்படுத்திவிட்டார்; இதுதான் தலைவிதி..'' - வெடித்த ராமதாஸ்

பாமக கட்சிக்குள் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் இந்த சூழலில் ராமதாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.அவர் பேசிவருவதாவது...'தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வ... மேலும் பார்க்க

``4 ஆண்டுகளில் 458 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி..'' - வேளாண் கருத்தரங்கில் முதல்வர்

வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறையில் சார்பில் விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள், வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்த... மேலும் பார்க்க