செய்திகள் :

RCB அணி விற்கப்படுகிறதா? - பிரமிக்க வைக்கும் மதிப்பு; டியாஜியோ பிஎல்சி நிறுவனம் சொல்வதென்ன?

post image

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் உரிமையாளர் மாறுவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகின்றன.

தற்போது உரிமையாளராக இருக்கும் பிரிட்டீஷ் பன்னாட்டு மதுபான நிறுவனமான டியாஜியோ பிஎல்சி, பகுதியளவு அல்லது முழுவதுமாக அணியின் உரிமையை விற்க விரும்புவதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

RCB

RCB அணியின் விலை மதிப்பு என்ன?

கடந்த வாரம், RCB அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்த வெற்றியால் டியாஜியோ பிஎல்சி குறிப்பிடத்தக்க உயர்வை எட்டியிருக்கிறது.

இந்தியாவில், டியாஜியோ பிஎல்சி மூலம் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் ஆர்சிபி நடத்தப்படுகிறது, ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு அணியின் உரிமையை பணமாக்கும் வழிகளைத் தேடி வருகிறது மதுபான நிறுவனம் என வதந்திகள் பரவின.

இதுவரை RCB அணிக்கான உரிமையின் மதிப்பு எவ்வளவாக இருக்கும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், ப்ளூம்பெர்க் தளம் அதன் உரிமையாளர்கள் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக 16,834 கோடி ரூபாய்) எதிர்பார்க்கலாம் எனக் குறிப்பிட்டிருக்கிறது.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நிறுவன செயலாளர் மிட்டல் சங்க்வி, "மேற்கூறப்படும் மீடியா அறிக்கைகள் எல்லாம் யூகங்களின் அடிப்படையானதே என்பதை எங்கள் நிறுவனம் தெளிவுபடுத்த விரும்புகிறது. இதுபோன்ற எந்த விவாதத்தையும் நாங்கள் தொடங்கவில்லை" என இந்திய பங்குச் சந்தையின் ஒழுங்குமுறை அமைப்பான BSE-க்குத் தெரிவித்துள்ளார்.

DIAGEO - RCB

RCB அணி விற்கப்படுவது உறுதியாக தெரியாமலேயே, செய்தி பரவியதும் செவ்வாய்க்கிழமை (10.06.2025) யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3.3% உயர்ந்துள்ளது.

RCB அணி நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வெற்றி பெற்றாலும், வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடியால் பெங்களூருவில் 11 உயிர்கள் பலியானது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

2008ம் ஆண்டு RCB அணி தொடங்கப்பட்டபோது விஜய் மல்லையா அதன் உரிமையை வாங்கினார். பின்னர் அவர் கடன் வலையில் சிக்கிய பிறகு டியாஜியோ பிஎல்சி தனது துணை நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் மூலம் RCB -யை வாங்கும் வாய்ப்பைப் பெற்றது. இப்போது உலக அளவில் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்ட அணிகளில் ஒன்றாக விளங்குகிறது RCB.

Kohli: "நான் அங்கு இருந்திருந்தால் கோலியை கேப்டனாக்கி இருப்பேன்" - யாரைச் சாடுகிறார் ரவி சாஸ்திரி?

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி சமீபத்தில் ஓய்வை அறிவித்திருந்தார். இன்னும் இரண்டு ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் திடீர் ஓய்வு முடிவு பலருக்கு... மேலும் பார்க்க

TNPL 2025: மதுரை பாந்தர்ஸ் அதிரடி ஆட்டம்... இந்த சீசனில் கோவைக்கு இரண்டாவது தோல்வி | Photo Album

மதுரை பாந்தர்ஸ் அணிகோவை கிங்ஸ் அணிமதுரை பாந்தர்ஸ் அணிகோவை கிங்ஸ் அணிமதுரை பாந்தர்ஸ் அணிகோவை கிங்ஸ் அணிமதுரை பாந்தர்ஸ் அணிகோவை கிங்ஸ் அணிகோவை கிங்ஸ் அணிகோவை கிங்ஸ் அணிகோவை கிங்ஸ் அணிகோவை கிங்ஸ் அணிகோவை... மேலும் பார்க்க

"எல்லா பந்துக்கும் பேட்டை சுழற்றுவதை நிறுத்துங்கள்; உங்களின் பலம்..." - பண்ட்டுக்கு கங்குலி அட்வைஸ்

இந்தியா vs இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட் இடம்பெற்றிருக்கிறார்.ட... மேலும் பார்க்க

AUS vs SA WTC Final: அபாரமாக பந்துவீசிய ரபாடா; ஸ்மித்தால் மீண்டெழுந்த ஆஸி! - Day 1ல் நடந்தது என்ன?

இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், தென்னாப்பிரிக்காவும் மோதின.டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா பவுலிங்கைத... மேலும் பார்க்க

Kohli: "திருமணத்துக்குப் பிறகு கோலி முதிர்ச்சியடைந்திருக்கிறார்" - பாக்., முன்னாள் கேப்டன் புகழாரம்

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார்.அதையடுத்து, இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்திலேயே ச... மேலும் பார்க்க

Retired : 29 வயதில் ஓய்வை அறிவித்த நிக்கோலஸ் பூரான் - 2025ல் ஓய்வு பெற்ற முக்கிய வீரர்கள் யார் யார்?

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான நிக்கோலஸ் பூரன் 29 வயதிலேயே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் போட்... மேலும் பார்க்க