செய்திகள் :

``பாலியல் புகார் கூறி ரூ.65 கோடி கேட்டு டிவி சேனலுக்கு மிரட்டல்..'' - 2 பேரை கைது செய்த போலீஸார்

post image

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் ஷாசியா நிஷார். இவர் அங்குள்ள தனியார் டிவி செய்தி சேனலில் தொகுப்பாளராக பணியற்றி பிறகு, அதிலிருந்து விலகிவிட்டார். ஷாசியா நிஷாரும், மற்றொரு முன்னாள் பத்திரிகையாளரான ஆதர்ஷ் ஷா என்பவரும் சேர்ந்து ஷாசியா பணியாற்றிய தனியார் டிவி செய்தி சேனல் அதிகாரிகளை மிரட்டி பணம் பறிக்க முயன்றனர்.

பெண் பத்திரிகையாளரான ஷாசியா நிஷார் போலி பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுப்போம் என்று கூறி மிரட்டி ரூ.5 கோடி கொடுக்கும்படி கேட்டனர். அதன் பிறகு அந்த தொகையை ரூ.65 கோடியாக அதிகரித்துவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த தனியார் டிவி சேனல் அதிகாரிகள் இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். ஷாசியா நிஷார் பணம் கேட்டு மிரட்டிய ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளையும் அவர்கள் போலீஸில் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணைக்கு பிறகு இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

அதோடு ஷாசியாவின் வீட்டில் சோதனை செய்தபோது அங்கு ரூ.34.50 லட்சம் பணம் இருந்தது. அதனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இரண்டு பேரையும் போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருவரும் வேறு எத்தனை பேரை மிரட்டி பணம் பறித்துள்ளனர் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஷாசியா நிஷார் `பாரத் 24' என்ற டிவி சேனலில் வேலை செய்து வந்ததாகவும், அவர் வேலையில் சேர்ந்ததில் இருந்து அங்குள்ள அதிகாரிகளுக்கு எதிராக போலி பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்போவதாக கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட டிவி நிர்வாக இயக்குநர் உள்பட 3 பேர் போலீஸில் தனித்தனியாக புகார் கொடுத்துள்ளனர்.

வழக்கிலிருந்து விடுவிக்க ரூ.7 லட்சம் லஞ்சம்? - ஆசிரியர் புகார்... சிபிஐ அதிகாரி மீது வழக்கு பதிவு!

வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக ஆசிரியரிடம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் சிபிஐ அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆசிரியர் ராமச்சந்திரன்வருமான வரி மோசடி புகார் தொ... மேலும் பார்க்க

திரிபுரா: இளைஞரைக் கொன்று ஐஸ்கிரீம் பெட்டியில் வைத்த நபர்; முக்கோண காதல் விவகாரத்தில் என்ன நடந்தது?

திரிபுரா மாநிலம் அகார்த்தலாவைச் சேர்ந்த சரிபுல் இஸ்லாம் (28) என்ற வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போய்விட்டார்.இது தொடர்பாக சரிபுல் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக... மேலும் பார்க்க

திருப்பூர்: மாற்றுச் சமூக பெண்ணை மகன் மணந்ததால் கோவம்; மனைவியை வெட்டிக் கொன்று கணவர்; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்த வேலப்பநாயக்கன்வலசு பாரக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (65).இவரது மனைவி சாமியாத்தாள் (60). இவர்களுக்கு வித்யாசாகர் (33) என்ற மகனும், அபிநயா (36) என்ற ... மேலும் பார்க்க

கோவில் கும்பாபிஷேகத்தில் குடும்பத்துடன் கைவரிசை; நகை திருட்டில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட ஐவர் கைது

ராமநாதபுரம் அருகே உள்ளது உத்திரகோசமங்கை. உலக புகழ்பெற்ற மரகத நடராஜர் சன்னதி அமைந்துள்ள மங்களநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கடந்த மே மாதம் 4-ம் தேதி நடந்தது.இவ்விழாவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வ... மேலும் பார்க்க

``பேய்கள் அழைக்கின்றன, செல்கிறேன்'' - கடிதம் எழுதி உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்.. என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே உள்ள காடேற்றி பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பு (55). வருகின்றனர்.இவருக்கு3 மகன்களும் 1 மகளும் இருந்தனர். மர வேலை செய்து வரும் ராமசுப்பு தற்போது குருந்தன் கோட்டில்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: 800 போதை ஊசி குப்பிகள் பறிமுதல்; இருவர் கைது; போதை நகரமாகிறதா முத்து நகர்?

தூத்துக்குடியில் போதைப் பழக்கம் இளம் சிறார்கள் மத்தியில் சமீபகாலமாகப் பெருகிவருகிறது. விற்பனை செய்வதும், அவற்றைப் பயன்படுத்துவதும் இளம் சிறார்களாக இருப்பதால் போலீஸாரின் பிடிக்குள் சிக்குவதில்லை.இதன் க... மேலும் பார்க்க