செய்திகள் :

'கூட்டணி ஆட்சி எல்லாம் இல்லை; பாஜக ஆட்சிதான் என் விருப்பம்.. ஆனாலும்...' - அண்ணாமலை ஓப்பன் டாக்

post image

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் கடந்த 11 ஆண்டுகளில் 2 கோடி வீடுகளுக்கு கழிவறை கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம்.

அண்ணாமலை

ஊழல் இல்லாத உன்னத ஆட்சியை வழங்கி வருகிறோம். கறுப்புப் பணத்தை மீட்போம். கோவை மாவட்டத்துக்கு விரைவில் மெட்ரோ ரயில் வர வேண்டும் என்கிற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம்.

திமுக கொடுத்த 512 தேர்தல் வாக்குறுதிகளில் 50 வாக்குறுதிகளை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. அண்ணா பல்கலைக்கழக வழக்கில் மன்னிப்பு வெங்காயம் எல்லாம் கேட்க முடியாது. ஞானசேகரன் செல்போனில் வேறு வீடியோ இருந்துள்ளது. அந்த பெண் யார் என்று சிறப்பு புலனாய்வு குழு ஏன் விசாரிக்கவில்லை.

திமுக

அமைச்சரின் உதவியாளர் கோட்டூர் சண்முகத்திடம் ஏன் பேச வேண்டும். யார் வழக்கு தொடர்ந்தாலும் சந்திக்க தயாராக உள்ளேன். மா.சுப்பிரமணியம் பதில் அளிக்கும் கட்டாயம் உள்ளது.  சமூக வலைதளங்களில் சண்டை போட வேண்டாம். நானே சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில்லை.

நான் பாஜக தொண்டன். உயிர் உள்ளவரை கட்சி வளர்ச்சிக்காக உழைப்பேன். கூட்டணி குறித்து நான் பேசினால் பஞ்சாயத்து ஆகிவிடும். அதிமுக கூட்டணியில், பாஜகவுக்கு 90 இடங்கள் வேண்டுமென நான் கடிதம் எழுதியதாக யார் சொன்னார்கள். நான் சிவனே என அமைதியாக இருக்கிறேன்.

பாஜக - அதிமுக கூட்டணி

பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவன் தான். ஆனால் தேர்தல் கூட்டணி குறித்து தலைவர்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சி என்று சொல்லாமல் பாஜக ஆட்சி தான் என்று நான் சொல்கிறேன். என்னுடைய தனிப்படை கருத்துகள் இதயத்தில் இருந்தாலும், கட்சிக்கு கட்டுப்பட்டு பணியாற்றுவேன்.” என்றார்.

'ஒரே பாடலில் முதலமைச்சர் ஆக முடியாது விஜய்!' - எச்சரிக்கும் மருது அழகுராஜ் | பேட்டி

நமது எம்.ஜி.ஆர், நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ். விஜய்க்கும் தவெகவுக்கும் ஆதரவாக கருத்துகளை தெரிவித்துக் கொண்டிருந்தார். விஜய்யின் கட்சியில் விரைவில் இணையப்போகிறார் என்றெல்லாம் ... மேலும் பார்க்க

Vijay: "இளைய காமராஜர்னு சொல்லாதீங்க; தேர்தல் பற்றி பேச வேண்டாம்" - மாணவர்கள் மத்தியில் விஜய் பேச்சு

தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழாவை, அதன் தலைவர் விஜய் நடத்தி வருகிறார். 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களைத் தொகுதிவாரியாக அழைத்துப் பாராட்டி வருகிறார்.Vijayஇரண்டுக... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash : 'அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை...' - விஜய் வருத்தம்!

'தவெக கல்வி விழா!'தவெக தலைவர் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களை பாராட்டும் வகையில் கல்வி விருது வழங்கும் விழாவை நடத்தி வருகிறார். மாமல்லபுரத்தில் நடந்த இந்த நிகழ்வில் அகமத... மேலும் பார்க்க

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்; 'இன்னும் ஒரு போரா?' - கைவிரித்த அமெரிக்கா; என்ன நடக்கிறது?

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது.நேற்று இரவு, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தொடங்கியிருக்கிறது. ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரித்துவிடுமோ என்கிற இஸ்ரேலின் அச்சம்தான் இந்தத் த... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash : பறவை மோதியதா இல்லை மனித தவறா? | Detailed Technical Explanation

அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் 200 க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்திருக்கின்றனர். இந்த விபத்து எப்படி நடந்தது? அவசரகாலங்களில் பயணிகளைக் காப்பாற்ற விமானிகள் என்ன மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுவா... மேலும் பார்க்க